காரிய தடை நீக்கும் பெருமாள் தீபம்

perumal deepam
- Advertisement -

ஒருவர் தன்னுடைய வாழ்வில் பல முக்கியமான செயல்களை செய்ய வேண்டும் என்று நினைப்பார். அந்த செயல்களை செய்வதற்காக முயற்சிகளையும் மேற்கொள்வார். அந்த முயற்சிகள் வெற்றி பெற்று விட்டால் அவரைப்போல மகிழ்ச்சியான நபர் இந்த உலகில் இருக்கவே முடியாது. ஆனால் இந்த மகிழ்ச்சியை பலராலும் பெற முடியவில்லை. எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் அந்த காரியத்தில் தடைகள் ஏற்பட்டு கொண்டு இருக்கிறது என்று நினைப்பவர்கள் எந்த முறையில் தீபம் ஏற்றி வழிபட்டால் அவர்களுடைய காரியத்தடை நீங்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வேலை கிடைப்பதில் காலதாமதம், தொழிலை முன்னேற்றுவதில் மேற்கொள்ளும் முயற்சிகளில் தடைகள், தொழில் லாபம் பெறுவதில் சிரமம், திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாமல் கஷ்டப்படுதல், குழந்தை நன்றாக படிக்காமல் மந்தமாக இருப்பது, பணத்தடை, சாதாரண செயலாக இருந்தாலும் அந்த செயலை செய்வதற்கு பல விதங்களில் தடைகள் ஏற்படுவது, வாழ்க்கையில் முன்னேற்றமே இல்லாத நிலை இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த பிரச்சனைகள் அனைத்தையும் நீக்கி நாம் நினைத்தது நடக்கவும் அதுவும் வெற்றிகரமாக நடக்கவும் ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

இந்த தீபத்தை புதன்கிழமை அன்று தான் ஏற்ற வேண்டும். வீட்டில் இருக்கக்கூடிய பெருமாள் படத்தை சுத்தம் செய்து அவருக்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். காலையில் புதன் ஹோரையான ஆறு மணியிலிருந்து ஏழு மணிக்குள் இந்த தீபத்தை ஏற்றி விட வேண்டும்.

இந்த தீபத்தை ஏற்றுவதற்கு ஒரு பீங்கான் கிண்ணம் வேண்டும். இந்த பீங்கான் கிண்ணத்தில் கருப்பு கல் உப்பை போட்டு நிரப்பிக் கொள்ள வேண்டும். கருப்பு கல்லுப்பு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த கல்லுப்பிற்கு மேல் ஒரு சிறிய தாம்பாலத்தை வைத்துக் கொள்ள வேண்டும். அந்த தாம்பாலத்தில் மஞ்சள் கலந்த பச்சரிசியை அதாவது அச்சதையை பரப்பி அதற்கு மேல் ஒரு வெற்றிலையை வைக்க வேண்டும்.

- Advertisement -

வெற்றிலைக்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து அந்த அகல் விளக்கில் இலுப்பை எண்ணெயை ஊற்ற வேண்டும். பிறகு மஞ்சள் நிற திரியை போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபமானது வடக்கு பார்த்தவாறு தான் எரிய வேண்டும். இந்த முறையில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தீபமேற்றி வழிபட வாழ்க்கையில் இருக்க கூடிய எப்பேற்பட்ட தடையாக இருந்தாலும் அந்த தடைகள் நீங்குவதோடு மட்டுமல்லாமல் நாம் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெறும்.

முதல் வாரம் உபயோகப்படுத்திய கல் உப்பை கால்படாத இடத்தில் போட்டு விட்டு அடுத்த வாரம் புதிதாக வாங்கி வைத்து ஏற்ற வேண்டும். கருப்பு உப்பிற்கு காரிய தடையை நீக்கும் ஆற்றல் உள்ளது. மேலும் எடுத்த காரியத்தை விரைவில் முடிக்கும் தன்மையும் உள்ளது. இலுப்பை எண்ணெய்க்கு குலதெய்வத்தின் அருளை பெறுவதற்குரிய ஆற்றல் உள்ளது. இவை இரண்டையும் சேர்த்து வைத்து நாம் பெருமாளின் படத்திற்கு முன்பாக ஏற்றும் பொழுது பெருமாளின் அருளும் பரிபூரணமாக கிடைத்து காரிய தடைகள் நீங்கும்.

இதையும் படிக்கலாமே: பண வரவு அதிகரித்து செல்வ செழிப்புடன் வாழ விநாயகர் வழிபாடு

மிகவும் எளிமையான இந்த தீப வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுடைய வாழ்க்கையில் காரிய தடைகள் நீங்கும்.

- Advertisement -