கணவரின் வருமானம் அதிகரிக்க மனைவி செய்ய வேண்டிய பரிகாரம்

murugan jathikai
- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் அனைவரும் சம்பாதித்தாலும் கூட பொதுவாக கணவரின் வருமானமே பிரதானமானதாக கருதப்படுகிறது அப்படியான இடத்தில் அவருடைய வருமானம் நிலையானதாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் அந்த குடும்பம் நிச்சயம் பிரச்சனை உள்ளானதாக தான் இருக்கும் ஒரு வேலை நன்றாக சம்பாதிக்கும் இடத்தில் கூட பணம் தங்குவது தடையாக இருக்கும்.

இது போன்ற பிரச்சனைகள் இன்று பல்வேறு குடும்பங்களில் இருக்கத் தான் செய்கிறது. அதை எல்லாம் எப்படி சரி செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருப்பவர்கள் எளிமையான முறையில் செய்யக் கூடிய இந்த ஜாதிக்காய் பரிகாரத்தை செய்யலாம். இந்த ஜாதிக்காய் பரிகாரத்தை எப்படி செய்வது என்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கணவன் வருமானம் அதிகரிக்க

இந்தப் பரிகாரத்தை கணவனின் வருமானம் அதிகரிக்க வேண்டும் என்று நினைக்கும் மனைவி தான் செய்ய வேண்டும். வீட்டில் இருக்கும் மற்ற யாரும் இந்த பரிகாரத்தை செய்யக் கூடாது. இந்த பரிகாரம் செய்வதற்கு ஒன்பது ஜாதிக்காயின் வாங்கி ஒரு கவரில் வைத்து கட்டி விடுங்கள்.

அதே போல் ஒரு சிறிய பாக்கெட் சைஸ் முருகர் படத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு நீங்கள் வீட்டில் வைத்து பூஜை செய்த படம் தேவையில்லை. இந்தப் படத்தை உங்கள் கணவர் இரவு உறங்கும் இடத்திற்கு பக்கத்தில் சற்று உயரமாக இருக்கும் இடமாக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் இல்லை என்றால் அதன் பக்கத்தில் ஒரு மேசை போல போட்டு அந்த இடத்தில் முருகர் படத்தை வைத்து விடுங்கள்.

- Advertisement -

முருகர் படத்திற்கு முன்பாக நீங்கள் பாக்கெட் போட்டு வைத்திருக்கும் ஜாதிக்காய் வைக்க வேண்டும். இதை அடிக்கடி மாற்ற வேண்டாம் அங்கேயே இருக்கட்டும். இந்த ஜாதிக்காயில் எப்போது வண்டு வந்து வீணாகி விட்டது என்று தோன்றுகிறதோ அப்போது மட்டும் மாற்றினால் போதும்.

அது வரையில் இந்த முருகர் படமும் ஜாதிக்காயும் உங்கள் படுக்கை அறையிலே இருக்கட்டும். படுக்கை அறையில் சுவாமி படம் வைக்கலாமா என்ற சந்தேகம் தேவையில்லை ஏனெனில் இது ஒரு பரிகாரம் மட்டுமே. இது வைக்கும் போது மட்டும் படுக்கைக்கு மிக அருகில் வைக்காமல் சற்று தொலைவில் வையுங்கள் போதும்.

- Advertisement -

இதைக் கேட்கும் பொழுது இதெல்லாம் ஒரு பரிகாரமா இதன் மூலம் பணவரவு அதிகரிக்குமா என்றெல்லாம் தோணலாம். குபேரருக்கு உகந்த பொருளாக கருதப்படுவது தான் இந்த ஜாதிக்காய். அத்தகைய ஜாதிக்காயை இந்த முறையில் பயன்படுத்துவதன் மூலம் வீட்டில் பண ஈர்ப்பு அதிகரித்து நிச்சயம் பண வரவு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

அதுமட்டுமின்றி நீங்கள் விளக்கு ஏற்றும் எண்ணெயில் சிறிது அளவு ஜாதிக்காய் எண்ணெய் சேர்த்து தீபம் ஏற்றும் போது வீட்டில் பண வரவு அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. எந்த ஒரு பரிகாரத்தையும் நம்பிக்கையுடன் செய்யும் போது நிச்சயம் அதற்கான நல்ல பலனை பெறலாம்.

இதையும் படிக்கலாமே: அமாவாசைக்கு மறுநாள் செய்ய வேண்டியது

உங்களின் அயராத உழைப்பு முயற்சியுடன் எளிய இந்த பரிகாரத்தையும் தொடர்ந்து செய்து வாருங்கள் நிச்சயம் நல்ல பலனை பெறலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -