நீங்கள் வாங்க நினைக்கும் தங்கத்தை விட பல மடங்கு அதிகமாக தங்கம் வாங்க ஞாயிற்றுக்கிழமையில் இதை செய்து விடுங்கள். தங்கம் மடமடவென்று குவிய தொடங்கி விடும்.

surya bhagavan gold
- Advertisement -

தங்கம் வாங்க வேண்டும் என்று ஆசைப்படாத ஆண் பெண் என ஒருவரும் இருக்க முடியாது. ஏனெனில் தங்கம் என்பது வெறும் அபரணம் என்பதையும் தாண்டி தங்கம் ஒரு சேமிப்பாக பார்க்கப்படுகிறது. ஆகையால் தான் பெரும்பாலும் தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள். இப்படி தங்கம் வாங்க வேண்டும் என்ற ஈர்ப்பு அனைவரிடம் இருந்தாலும் கூட, அதை வாங்கக் கூடிய யோகம் அனைவருக்கும் இருக்க வேண்டும். அதற்கான வாய்ப்பு கிடைக்க வேண்டும். இது இரண்டையும் ஏற்படுத்திக் கொள்வதற்கான ஒரு எளிய பரிகாரமாக இதை செய்து கொள்ளலாம்.

தங்கம் அதிகமாக சேர பரிகாரம்
தங்க நகை அதிகமாக சேர வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தால் போதாது. அதற்கான முயற்சி உழைப்பு என அனைத்தையும் நாம் கொடுக்க வேண்டும். அத்துடன் சேர்த்து இந்த பரிகாரத்தையும் செய்யும் போது இதற்கான வாய்ப்புகள் விரைவாகவும், வாய்ப்புகள் கை நழுவி போகாமலும் இருக்கும் என்பதை கவனத்தில் கொண்டு இந்த பரிகாரத்தை செய்ய தொடங்குங்கள்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமையில் தான் தொடங்க வேண்டும். இதற்கு ஒரு செம்பு டம்ளர் எடுத்துக் கொள்ளுங்கள். ஞாயிற்றுக்கிழமை காலையில் குளித்து முடித்த பிறகு செம்பு டம்ப்ளரை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து கொஞ்சம் கோதுமையை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த கோதுமையை நீங்கள் எடுத்து வைத்திருக்கும் செம்பு டம்பளரில் இந்த நம்பரை சொல்லியபடி ஒவ்வொன்றாக போட வேண்டும்.

70937205 என்ற இந்த எண்ணை நீங்கள் ஒவ்வொரு முறை கோதுமையை போடும் போதும் சொல்ல வேண்டும். அது எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லலாம் எண்ணிக்கை கிடையாது. அதன் பிறகு இந்த டம்ளரை தட்டு போட்டு மூடி நீங்கள் சமையல் பொருட்கள் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள்.இந்த எண்ணெய் மட்டும் மனப்பாடம் செய்து வைத்துக் கொண்டு உங்களுக்கு சமயம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லிக் கொண்டே இருங்கள். இந்த டம்ளர் முழுவதும் கோதுமை நிறைந்த பிறகு, அதை கொண்டு கோதுமை பாயாசம் செய்து உங்களுடைய குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்திற்கு நெய்வேத்தியமாக படைத்து வீட்டில் உள்ளவர்களுக்கு இதை பிரசாதமாக கொடுத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த கோதுமையை எடுத்து வணங்கும் நாள் அன்று மட்டும் அசைவம் சாப்பிடாமல் சுத்தபத்தமாக இருந்து செய்ய வேண்டும். மற்ற நாட்களில் எல்லாம் இது போல எந்த விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டியது கிடையாது. ஒவ்வொரு எண்ணிற்கும் ஒவ்வொரு ஆற்றல் உண்டு. அது போல இதில் உள்ள இந்த பிரபஞ்ச எண்ணிற்கு தங்கத்தை ஈர்க்கும் சக்தி உண்டு. அதே போல் ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்குரியது கோதுமை தானியமும் அவருக்கு உரியது.

இதையும் படிக்கலாமே: சுக்கிர பகவானுக்குரிய இந்த தானியத்தை வைத்து வெள்ளிக்கிழமை தோறும் இந்த மந்திரத்தை கூறி பரிகாரம் செய்தால் நமக்கு வந்த பிரச்சனைகள் இருக்கும் இடம் தெரியாமல் பறந்து போகும்.

தங்கம் போல பிரகாசிக்க கூடிய இந்த சூரிய பகவானை மனதார நினைத்துக் அவருக்குரிய பொருளை கையில் கொண்டு இந்த பிரபஞ்ச எண்ணையும் சொல்லி தங்கம் வாங்க வேண்டும் என்ற உங்களுடைய முழு ஈடுபாட்டையும் செலுத்தும் போது நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் தங்கும் உங்களைத் தேடி வரும் என்று நம் சொல்லப்படுகிறது. நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து நீங்கள் வேண்டிய தங்கத்தை பெறலாம் என்ற கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -