தங்கம் சேர மகாலட்சுமி வழிபாடு

thangam sera
- Advertisement -

இன்றைய காலத்தில் பெண்களுக்கு நிகராக ஆண்களும் தங்கம் அணிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். மேலும் திருமணம், சுப நிகழ்ச்சிகள் என்று வரும்பொழுது எல்லாம் இந்த தங்கம் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கிறது. சாதாரணமாக ஒரு குழந்தை பிறந்த உடனேயே அந்த குழந்தைக்கு தங்கத்திலான மோதிரம் செயின் என்று பலரும் வாங்கி போடுவார்கள்.

பிறப்பு முதல் ஏற்படக்கூடிய அனைத்து விதமான சுப நிகழ்வுகளுக்கும் இந்த தங்கம் முதலிடம் வகிக்கிறது. அப்படிப்பட்ட தங்கத்தை சேர்ப்பதற்கு பல வழிகள் இருந்தாலும் அது நம்முடன் நிரந்தரமாக தங்க வேண்டும் என்றால் அதற்கு மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக வேண்டும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் மகாலட்சுமி தாயாரை எந்த முறையில் வழிபட்டால் நம்முடைய வாழ்வில் தங்கத்திற்கு எந்த வித குறையும் இருக்காது என்று தான் பார்க்க போகிறோம்.

- Advertisement -

தங்கத்திற்கு அதிபதியாக திகழக்கூடியவர் மகாலட்சுமி தாயார். தன்னுடைய கரங்களில் தங்கப் பொற்காசுகளை வைத்திருக்கும் தெய்வமாக மகாலட்சுமி தாயார் திகழ்கிறார். அதோடு மட்டுமல்லாமல் இந்த தங்கம் அதிக அளவில் சேர வேண்டும் என்றால் குருவின் அருளும், சுக்கிரனின் அருளும் பரிபூரணமாக வேண்டும் என்று கூறப்படுகிறது. இப்படி குரு, சுக்கிரன் மற்றும் மகாலட்சுமி தாயாரின் பரிபூரணமான அருளை பெறுவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பற்றி பார்ப்போம்.

இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஹோரையில் தான் செய்ய வேண்டும். புதிதாக ஒரு வெள்ளைத் துணியை எடுத்துக் கொள்ளுங்கள். வெள்ளைத்துளி என்பது சுக்கிரனின் அம்சமாக கருதப்படுகிறது. அதில் மஞ்சள் தடவி மஞ்சள் துணையாக மாற்றி காயவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இந்த மஞ்சள் என்பது குருவின் அம்சமாக திகழ்கிறது. இதில் 101 ஒரு ரூபாய் நாணயங்களை வைக்க வேண்டும். இந்த ஒரு ரூபாய் நாணயம் என்பது மகாலட்சுமி தாயாரை குறிக்கிறது. இப்படி இவர்கள் மூவரையும் ஒரு சேர சேர்த்து ஒரு மூட்டையாக கட்டி மகாலட்சுமி தாயாரின் பாதத்திற்கு கீழ் வைத்து விட வேண்டும்.

- Advertisement -

பிறகு “ஓம் மகாலட்சுமியே போற்றி” என்னும் மந்திரத்தை தங்களால் இயன்ற அளவு 27, 54, 108 என்ற எண்ணிக்கையில் கூற வேண்டும். பிறகு தங்கம் அதிகளவில் சேர வேண்டும் என்ற வேண்டுதலை மகாலட்சுமி தாயார் இடம் வைத்து விட வேண்டும். அவ்வளவுதான் தினமும் நாம் வீட்டில் விளக்கேற்றி வழிபடும் பொழுது இந்த மூட்டைக்கும் தூப தீப ஆராதனை காட்டி தொட்டு வணங்கிக் கொண்டு மகாலட்சுமியின் மந்திரத்தை முதல் நாள் எத்தனை முறை கூறினோமோ அத்தனை முறை கூற வேண்டும்.

இப்படி தொடர்ந்து 48 நாட்கள் நாம் செய்து வர வேண்டும். 48 நாட்கள் முடிந்த பிறகு இந்த மூட்டையை அவிழ்க்காமல் அப்படியே கொண்டு போய் அருகில் இருக்கும் மகாலட்சுமி தாயாரின் சன்னதியில் இருக்கும் உண்டியலில் போட்டு விட வேண்டும். இப்படி நாம் செய்வதன் மூலம் தங்கமானது வீட்டில் சேர்வதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக ஏற்படும்.

இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சினை தீரவும் செல்வ செழிப்பு உயரவும் லஷ்மி நரசிம்மர் வழிபாடு

மிகவும் எளிமையான முறையில் முழு நம்பிக்கையுடன் செய்யக்கூடிய இந்த வழிபாட்டை நாமும் செய்து நம் வீட்டில் தங்கம் அதிக அளவில் சேர மகாலட்சுமியின் அருளை பெறுவோம்.

- Advertisement -