இந்த முறையில் தங்கத்தை வைத்தால் பல மடங்கு தங்கம் சேரும்.

gold
- Advertisement -

இன்றைய காலத்தில் தங்களின் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தங்கத்தில் முதலீடு செய்து அதிகமாக தங்கத்தை வாங்கி சேர்த்துக் கொள்வார்கள். சிலரோ இருக்கும் தங்கத்தை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக போராடுவார்கள். இன்னும் சிலரோ ஒரு குண்டுமணி தங்கமாவது வாங்க வேண்டும் என்று போராடுவார்கள். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தங்கத்தை அதிக அளவில் சேர்ப்பதற்கு எந்த பொருளுடன் சேர்த்து வைத்து வழிபட வேண்டும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

தங்கத்தை வாங்க ஆசைப்பட்டால் மட்டும் பத்தாது. தங்கத்தை வாங்குவதற்கு போதுமான அளவு பணம் தேவை. பணமிருந்தால் மட்டும் தங்கத்தை வாங்க முடியும் என்று நினைக்க வேண்டாம். சிலருக்கு எவ்வளவு தான் பணம் இருந்தாலும் அதை தங்கம் வாங்க உபயோகப்படுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். ஆக தங்கம் நமக்கு சேர வேண்டும் என்றால் இறைவனின் அருள் பரிபூரணமாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் தங்கம் நம்மை வந்து சேரும்

- Advertisement -

இந்த பரிகாரத்தை வியாழன், வெள்ளி, ஞாயிறு போன்ற கிழமைகளில் செய்யலாம். இதில் மிகவும் குறிப்பாக வியாழக்கிழமையில் செய்யும்பொழுது அதன் பலன் பல மடங்காக இருக்கும். வியாழக்கிழமை குபேர பூஜை செய்யக்கூடிய நேரமான 5 மணியில் இருந்து 7 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். சுத்தமான மஞ்சளில் பன்னீரை ஊற்றி நன்றாக குலைத்து பிள்ளையார் பிடிப்பது போல் பிடிக்க வேண்டும். அவ்வாறு பிடிக்கும் பொழுது அதற்குள் குண்டுமணி தங்கத்தை போட்டு பிடிக்க வேண்டும். இவ்வாறு மஞ்சளை பிடிக்கும் பொழுது நம்முடைய குலதெய்வத்தையோ அல்லது இஷ்ட தெய்வத்தையோ அல்லது மகாலட்சுமி தாயாரையும் மனதார வேண்ட வேண்டும்.

இதை போல் இன்னும் பல மடங்கு தங்கம் எனக்கு சேர வேண்டும் அப்படி சேரும் பட்சத்தில் இதை உனக்கே தருகிறேன் என்று மனதார நினைத்துக் கொண்டு மஞ்சளில் பிடிக்க வேண்டும். பிடித்த இந்த மஞ்சளை ஒரு மஞ்சள் நிற துணியில் வைத்து நன்றாக கட்டி பூஜை அறையில் வைத்து விட வேண்டும்.

- Advertisement -

தெய்வத்திடம் நாம் செய்த பிரார்த்தனையை நினைவு கூறும் வகையில் இந்த தங்கம் சேர்வதற்காக சிறப்பாக ஒரு தீபத்தை ஏற்ற வேண்டும். இதற்கு ஒரு கண்ணாடி கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது நிரம்ப கோதுமையை வைக்க வேண்டும். அதற்கு மேல் ஒரு மண் அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சிவப்பு திரி போட்டு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இந்த தீபத்தை நாம் தினமும் ஏற்ற வேண்டும்.

ஒருவருக்கு தங்கம் சேர வேண்டும் என்றால் குரு பகவானின் அருளும் சூரியபகவானின் அருளும் பரிபூரணமாக வேண்டும் என்று கூறப்படுகிறது. குருபகவானின் அருளை பெறுவதற்காக வியாழக்கிழமை மஞ்சளில் தங்கத்தை வைத்து பிடித்து வைத்து விட்டோம். அதேபோல் சூரிய பகவானின் அருளை பெறுவதற்காக தினமும் கோதுமையின் மேல் அகல் தீபத்தை ஏற்றி வழிபடுகிறோம்.

இதையும் படிக்கலாமே: குலதெய்வத்தின் அருளை பெற உதவும் தீபம்.

இப்படி குருபகவான் மற்றும் சூரிய பகவானின் அருளை பெற்று நமக்கு தங்கம் அதிகமாக சேரும் பட்சத்தில் மஞ்சளுக்குள் நாம் வைத்திருந்த தங்கத்தை எந்த தெய்வத்திடம் கோரிக்கை வைத்தோமோ அந்த தெய்வத்திடம் ஒப்படைத்து விட வேண்டும்.

- Advertisement -