பெருமாள் கோவிலில் இருந்து இந்த 1 பொருளை வாங்கி வந்து பீரோவில் வையுங்கள். போதும் போதும் என்றாலும் தங்கமும் பணமும் சேர்ந்து கொண்டே இருக்கும்.

perumal
- Advertisement -

வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கிறது என்பதற்கான அறிகுறிகள் என்ன. அந்த வீட்டில் பணம் காசு, தங்க வெள்ளி நகைகளும் நிறைந்திருக்க வேண்டும். அதேசமயம் சந்தோஷமும் நிறைந்திருக்க வேண்டும். இதற்காக கடன் வாங்கி தங்கம் வெள்ளி நகைகளை சேர்க்கக்கூடாது. நமக்கு செல்வச் செழிப்பு அதிகரிக்க அதிகரிக்க, வருமானம் உயர்ந்து கொண்டே செல்ல நம்முடைய வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாக தங்க நகைகளும் வெள்ளி நகைகளும் சேரத் தொடங்கும். ஒரு சில வீடுகளில் பணம் நிறைய இருக்கும் ஆனால் அவர்களால் ஒரு குண்டுமணி தங்கத்தை கூட வாங்க முடியாத சூழ்நிலை இருக்கும். காரணம் அவர்களுக்கு சுவர்ண யோகம் இருக்காது.

ஒரு சிலர் வீட்டில் வாங்கிய தங்கம் உடனடியாக அடகு கடைக்கு போய் விடும். லக்ஷ்மி கடாட்ஷம் நிறைந்திருக்க கூடிய வீட்டில் தங்கம் சேர்க்கையும் கட்டாயம் இருக்க வேண்டும். சுவர்ணம் என்பது ஐஸ்வர்யத்தை குறிக்கக் கூடிய ஒரு பொருள். உங்களுடைய வீட்டில் பணம் இருந்தும் தங்கம் சேரவில்லை என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். தங்கம் வாங்க பணம் இல்லை என்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்தால், தங்கம் வாங்குவதற்கு தேவையான பணம் காசு கைகளில் தங்கும். தங்கம் வாங்கும் யோகம் கைகூடி வரும்.

- Advertisement -

சனிக்கிழமை அன்று பெருமாள் கோவிலுக்கு செல்ல வேண்டும். பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து இருப்பார்கள். உதிரியான துளசி இலைகளையும் பெருமாள் பாதங்களில் போட்டு வைத்திருப்பார்கள். பெருமாளுக்கு உங்கள் கைகளால் கொஞ்சம் துளசியை வாங்கிக் கொடுத்துவிட்டு, பெருமாள் பாதத்தில் இருக்கக்கூடிய துளசியை அய்யரிடம் கேட்டு பிரசாதமாகப் பெற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் கேட்கவில்லை என்றாலும் பெருமாள் கோவிலில் நிச்சயமாக துளசி இலைகள் பிரசாதமாக கிடைக்கும்.

அதன் பின்பு தாயாரை தரிசனம் செய்வீர்கள். தாயார் சந்நிதியில் கட்டாயமாக குங்குமம், பூக்கள் பிரசாதமாக கொடுப்பார்கள். அதையும் வாங்கி கொள்ளுங்கள். குங்குமத்தினை நெற்றியில் இட்டுக் கொள்ளுங்கள். இந்த துளசியையும் மீதமிருக்கும் தாயார் சன்னதி குங்குமத்தையும் வீட்டிற்கு கொண்டு வந்து  ஒன்றாக ஒரு கிண்ணத்தில் போட்டு அப்படியே நீங்கள் பணம் வைக்கும் பெட்டியில் வைக்க வேண்டும்.இந்த கிண்ணத்தில் ஒரு துண்டு பச்சை கற்பூரத்தையும் போட்டு விடுங்கள்.

- Advertisement -

அடுத்த வாரம் சனிக்கிழமை அன்று காய்ந்த துளசி இலைகளை கால் படாத இடத்தில் போட்டுவிட்டு, இந்த குங்குமத்தை மட்டும் தினமும் நெற்றியில் இட்டுக்கொள்ளும் டப்பாவில் கொட்டி விடுங்கள். மீண்டும் சனிக்கிழமை கோவிலுக்கு சென்று புதியதாக குங்குமத்தையும் துளசியையும் கொண்டுவந்து பீரோவில் வைக்க வேண்டும்.

இப்படி பீரோவில் இந்த இரண்டு பொருட்களையும் வைத்துவிட்டு ‘ஸ்வர்ணம் வசி வசி’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும். பீரோவைத் திறந்து வைத்துவிட்டு இந்த மந்திரத்தை உச்சரிக்கவும். அதன் பின்பு பீரோவை மூடி வைத்துவிடுங்கள். தொடர்ந்து வாரந்தோறும் சனிக்கிழமை அன்று இப்படி செய்து வர உங்களுடைய வீட்டில் லட்சுமி கடாட்சம் கூடிக்கொண்டே செல்லும்.

சில பேர் வீடுகளில் சுபகாரியங்களுக்கு கூட தங்கம் வாங்க முடியாத சூழ்நிலை இருக்கும் அல்லவா. அதாவது பெண்ணுக்கு திருமணம் நடத்தி வைக்க தாலி வாங்க குண்டுமணி தங்கம் இல்லாதவர்கள் இந்த பரிகாரத்தை செய்யும்போது அவர்களுக்கு கூடிய விரைவில் தங்கம் வாங்கும் யோகம் கிட்டும். முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -