செல்வம் பெருக சொர்ண ஆகர்சன பைரவர் வழிபாடு

bhairavar gold
- Advertisement -

ஒவ்வொரு தெய்வங்களுக்கெனவழிபாட்டிற்கு ஒவ்வொரு நாட்களும் திதிகளும் உண்டு. அந்த வகையில் பைரவர் வழிபாட்டை அஷ்டமி திதியில் செய்வது தான் சிறந்தது. இந்த வழிபாட்டையும் நாம் இரண்டு வகைகளாக பிரித்து செய்யலாம். இந்த அஷ்டமி வழிபாடு குறித்தும் பொன் பொருள் சேர நாம் செய்ய வேண்டிய எளிய வழிபாடு பற்றிய தகவலை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

பொன் பொருள் பெருக அஷ்டமி வழிபாடு

பொன் பொருள் சேர்க்கைகள் பெருகவும் நம்முடைய செல்வ வளத்தை மேற் கொண்டு பெருக்கிக் கொள்ளவும் வளர்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபாடு செய்ய வேண்டும். அதே போல் நம்முடைய துன்பங்கள், கடன்கள், பண பிரச்சனைகள் தீர தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்க வேண்டும்.

- Advertisement -

இன்றைய தினத்தில் அஷ்டமி திதியானது காலை முதல் நாளை அதிகாலை வரை உள்ளது. ஆகையால் இன்றைய நாள் முழுவதுமே பைரவர் வழிபாட்டிற்கு உகந்தது தான். ஆனால் பைரவர் வழிபாடு என்றாலே ராகு காலத்தில் செய்வது தான் சிறந்ததாக கருதப்படுகிறது. ஆகையால் முடிந்த வரையில் இந்த பரிகாரத்தையும் நீங்களும் ராகு கால நேரத்திலே செய்து கொள்ளுங்கள்.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இந்த பரிகாரத்தை செய்வதாக இருந்தால் அசைவத்தை தவிர்த்து விடுவது நல்லது. மாலை ராகு காலம் நேரமான நான்கு முப்பதிலிருந்து ஆறு மணிக்குள்ளாக வீட்டில் இருந்து சிறிதளவு கல்லு உப்பை கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் 6 முழு கிராம்பை எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு கண்ணாடி பௌலில் இந்த கல் உப்பை போட வேண்டும். உப்பு பவுலில் நிறைவாக இருக்க வேண்டும். அதற்கு ஏற்றார் போல் போட்டுக் கொள்ளுங்கள். அதன் மேல் ஆறு காம்பை நின்ற நிலையில் இருக்கும்படி சொருகி வைத்து விடுங்கள். கிராம்பின் மொட்டு போன்ற பகுதி மேல் புறம் வர வேண்டும். இப்போது இந்த உப்பு பவுலை பூஜை அறையில் வைத்து சொர்ண ஆகர்சன பைரவரை மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

வீட்டில் இருக்கும் பணப்பிரச்சனை தீர வேண்டும் என்றும் பொன் பொருள் சேர வேண்டும் எனவும் வேண்டிக் கொள்ளுங்கள். அதே போல் அடகில் இருக்கும் நகை உங்கள் இல்லம் தேடி வர வேண்டும் என்றும் பைரவரை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இந்த பவுலை நீங்கள் பூஜை அறையில் வைப்பதாக இருந்தாலும் வைக்கலாம்.

- Advertisement -

பூஜை அறையில் வைத்து இடமில்லாதவர்கள் சமையலறையில் ஏதேனும் ஒரு ஓரத்தில் வைத்து விடுங்கள். வாய்ப்பு இல்லாதவர்கள் வரவேற்பரையிலும் இதை வைக்கலாம் தவறு ஒன்றும் கிடையாது. இந்த கல் உப்பும், கிராம்பும் அடுத்த அஷ்டமி வரை அப்படியே இருக்கலாம். அதன் பிறகு இதை எடுத்து கால் படாத இடத்தில் கொட்டி விட்டு புதிதாக மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

கல் உப்பிற்கும் கிராம்பிற்கும் நேர்மறை ஆற்றலை கிரகித்து எதிர்மறை ஆற்றலை வெளியேற்றும் தன்மை உண்டு. அந்த வகையில் இந்த பரிகாரத்தின் மூலம் நம்முடைய செல்வ வளங்கள் அதிகரித்து வீட்டில் இருக்கும் தேவையற்ற அதிர்வலைகளை வெளியேற்றும்.

இதையும் படிக்கலாமே: வரங்களை அள்ளி தரும் வாராகி அன்னை வழிபாடு

இத்துடன் அஷ்டமி தினமான இன்று பைரவரை வேண்டி இந்த பரிகாரத்தை செய்யும் போது சொர்ணத்திற்கே அதிபதியான சொர்ணாகர்ஷண பைரவர் நம்முடைய செல்வ வளத்தை நிச்சயம் பெருக்கி தருவார் என்று நம்பப்படுகிறது. இந்த பரிகார முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து பலனை பெறுங்கள்.

- Advertisement -