வரங்களை அள்ளி தரும் வாராகி அன்னை வழிபாடு

varahi manjal
- Advertisement -

வாராகி அன்னையின் மகிமையை அறிந்து இன்று பெரும்பாலானோர் அன்னையை வழிபாடு செய்கிறார்கள். வாராகி அன்னையை பொறுத்த வரையில் சப்த கன்னிகைகளில் ஒருவர் என்று மட்டும் அனைவரும் நினைக்கிறார்கள். இவர் புவனேஸ்வரி தாயாரின் படைத்தளபதியாக விளங்கியவர்.

சப்த கன்னிகளில் யாரை வணங்கினாலும் அவர்களுக்கெல்லாம் வாராகி அன்னையின் பரிபூரண அருள் கிடைக்கும். அதே போல் புவனேஸ்வரி அன்னையை வழிபாடு செய்பவர்களுக்கும் தாயாரின் அனுகிரகம் பரிபூரணமாக கிடைக்கும். வாராகி அன்னையை இன்று அனைவரும் வணங்க காரணம் பக்தர்கள் அழைத்த குறளுக்கு உடனே ஓடி வரக் கூடிய தாய் உள்ளம் படைத்த அன்னையாக திகழ்வதால் தான்.

- Advertisement -

அப்பேர்ப்பட்ட அன்னையை நம் வீட்டில் நிரந்தரமாக தங்க வைக்கக் கூடிய எளிய பூஜை முறை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

வாராகி அன்னையின் அருளை பெற வழிபாடு

இந்த வழிபாடு நீங்கள் வெள்ளி செவ்வாய் போன்ற தினங்களில் செய்யலாம். ஆனால் தாயாரின் வழிபாட்டிற்கு உகந்த நாள் பஞ்சமி திதி தான். முதன் முதலில் ஆரம்பிப்பவர்கள் பஞ்சமி திதி அன்று ஆரம்பியுங்கள். வீட்டில் படம், விக்ரகம் வைத்திருப்பவர்கள் செய்யுங்கள் இல்லாதவர்கள் அகல் விளக்கை ஏற்றி வைத்தே அன்னையாக வணங்கலாம்.

- Advertisement -

வாராகி அன்னையின் இந்த வழிபாட்டை துவங்கும் நாள் அன்று அன்னையின் படத்தை வைக்கும் இடத்தை கஸ்தூரி மஞ்சள் கலந்த தண்ணீரில் சுத்தமாக துடைத்து விடுங்கள். அதன் பிறகு ஒரு மனை வைத்து அதன் மேல் பட்டிலான ஒரு துணியை விரித்து அதற்கு மேல் அன்னையின் விக்கிரகமோ அல்லது சிலையோ வையுங்கள்.

விளக்கு மட்டும் வைப்பதாக இருந்தால் ஒரு சிறிய தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். வாராகி அன்னைக்கு பஞ்ச தீபம் ஏற்றுவது சிறந்தது.அன்னைக்கு நெய்வேதியமாக திணைகளால் செய்து உணவுப் பொருட்களை வைத்து வணங்கலாம். அதிலும் வரகு அரிசி பொங்கல் மிகவும் உகந்ததாக சொல்லப்படுகிறது.

- Advertisement -

அன்னைக்கு விரலி மஞ்சள் மாலை கட்டி போடுவது வழக்கம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அன்னைக்கு இன்னும் விசேஷமானது வர மஞ்சள் என்ற சொல்லப்படும் பொருள் தான் இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த வரமஞ்சலை கட்டையாக வாங்கிக் கொள்ளுங்கள். கடைகளிலே வர மஞ்சள் கட்டை என்று கேட்டாலே தருவார்கள்.

அதை வாங்கி வந்து சுத்தம் செய்து அதற்கு மஞ்சள் சந்தனத்தை குழைத்து தடவி விடுங்கள். அடுத்து ஒற்றை எண்ணிக்கையில் குங்குமத்தால் பொட்டு வைத்து அதை வாராகி அன்னையின் படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள். இப்போது நீங்கள் பூஜைக்கு தயார் செய்து வைத்து அனைத்தையும் அன்னையின் முன்பு வைத்து வழிபாடு செய்யுங்கள். இந்த வழிபாடு செய்யும் போது உங்களுக்கு தெரிந்த அன்னையின் மந்திரங்களை சொல்லுங்கள்.

மந்திரம் தெரியாதவர்கள் ஓம் வாராஹி அன்னையே போற்றி என்ற இந்த ஒரு மந்திரத்தையே 108 முறை சொன்னால் கூட போதும். பூஜை முடிந்த பிறகு வர மஞ்சள் கட்டையை மஞ்சள் நிற துணியில் வைத்து கட்டுங்கள்.அந்தத் துணிக்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து அதை பூஜை அறையில் பத்திரமாக வைத்து விடுங்கள்.

ஒவ்வொரு பஞ்சமியில் அன்னையை வழிபாடு செய்யும் போது இந்த கட்டையை எடுத்து அன்னைக்கு முன்பாக வைத்து வழிபாடு செய்து வாருங்கள். ஒரு முறை பூஜை செய்த இந்த கட்டை உங்கள் பூஜை அறையில் இருக்கும் போது உங்கள் வீட்டில் தெய்வீக ஆற்றல் நிறைந்திருக்கும் அன்னையின் பரிபூரண அருள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: வேண்டுதல் நிறைவேற நரசிம்மர் வழிபாடு

அது மட்டும் இன்றி அன்னை உங்கள் இல்லத்தை விட்டு அகலாதிருந்து செல்வ வளங்களை வாரி வழங்குவார் என்றும் சொல்லப்படுகிறது. அன்னையை இந்த முறைப்படி வழிபட்டால் நம்முடைய வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் அனைத்தும் நீங்வதுடன் அன்னை நம் இல்லத்தில் நிரந்தரமாக தங்கி அருள் புரிவார்.

- Advertisement -