தங்கம் சேர விளக்கு ஏற்றும் முறை

mahalashmi8
- Advertisement -

தங்கம் சேர, அந்த காலத்தில் சித்தர்கள் சொன்ன ஒரு விசித்திரமான வழிபாட்டை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். அந்த காலத்தில் மன்னர்கள் பெரிய அளவில் செய்த இந்த வழிபாட்டினை மிக எளிமையான முறையில் நம் வீட்டு பூஜை அறையில் செய்யப் போகின்றோம். இந்த வழிபாட்டை உங்கள் வீட்டில் செய்யத் தொடங்கி விட்டால் போதும். அன்றிலிருந்து தங்கம் சேரும் யோகம் உங்களுக்கு கிடைத்து விடும். அது என்ன வழிபாடு ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

தங்கம் சேர வெள்ளிக்கிழமை வழிபாடு

பொதுவாகவே வெள்ளிக்கிழமை என்றால் வீட்டில் பூஜையறையில், பூஜை செய்வதற்கு எல்லாம் தயாராக இருக்கும். ஆகவே நீங்க புதுசா இந்த பூஜைக்காக எந்த வேலையும் தனியாக செய்ய வேண்டாம். நீங்கள் முதலில் செய்ய வேண்டிய ஒரு விஷயம். வாழைப்பூவுக்கு மேலே மடல் இருக்கும் அல்லவா. அது எடுத்து வர வேண்டும். வாழைப்பூக்கும் மேலே சிவப்பு நிறத்தில் ஒவ்வொன்றாக பிரித்து எடுத்து உள்ளே இருக்க பூவை நாம சமைத்து சாப்பிடுவோம்.

- Advertisement -

அந்த சிவப்பு கலர்ல இருக்க அந்த மடல் ஒன்று கட்டாயம் தேவை. வாரம் வாரம் இதை புதுசா தான் நீங்க எடுத்துட்டு வரணும். ஒரு தாம்பூல தட்டில் இந்த வாழைப்பூ மடலை வைத்து, அதன் மேலே கொஞ்சம் கஸ்தூரி மஞ்சளை பரப்பி அதன் மேலே ஒரு மண் அகல் விளக்கு வைத்து, நல்லெண்ணெயோ அல்லது நெய்யோ ஊற்றி திரி போட்டு தீபமேற்றி வைக்க வேண்டும்.

மகாலட்சுமியை நினைத்து இந்த விளக்கை ஏற்றி வைத்துவிட்டு மனம் உருகி, உங்கள் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்க வேண்டும், தங்கம் சேர வேண்டும், வெள்ளி சேர வேண்டும் என்ற பிரார்த்தனை வைத்தால் நிச்சயம் உங்கள் வீட்டில் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும். அடமானத்தில் வைத்த தங்கத்தையும் சீக்கிரம் மீட்டு எடுக்கலாம். தங்கத் தட்டில் விளக்கை ஏற்றும் அளவுக்கு உங்கள் வீட்டில் தங்கம் சேர்ந்தாலும் அது ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

- Advertisement -

அந்த காலத்தில் இந்த பூஜையை மிகப்பெரிய அளவில் செய்வார்கள். அந்த வாழைப்பூ மடல் எட்டு என்ற எண்ணிக்கையில் எடுத்து, எட்டு குத்து விளக்குகளை வைத்து, அதை சுற்றி இந்த வாழைப்பூ மடலை அடுக்கி, அலங்காரம் செய்து பெரிய அளவில் இந்த பூஜைகள் மன்னர் காலத்தில் செய்யப்பட்டது.

அவர்களுடைய அரண்மனையில் தங்கம் கொழிக்கவும், வெள்ளிக் கொழிக்கவும், நவரத்தினங்கள் மின்னவும் செல்வ வளம் பெருகவும், இந்த வழிபாட்டை மேற்கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு இன்றைய சூழ்நிலையில் நம்மால் நம் வீட்டில் எட்டு குத்து விளக்கை வாழ்க்கை எல்லாம் பூஜை செய்ய முடியாது.

இதையும் படிக்கலாமே: வீட்டில் ஐஸ்வர்யம் நிரந்தரமாக தங்க தசமி திதியில் செய்ய வேண்டிய பூஜை

ஆகவே வெள்ளிக்கிழமைகளில் ஒரே ஒரு வாழைப்பூ மடலை எடுத்து, அதன் மேலே மண் அகல் விளக்கு வைத்து, ஏற்றிப் பாருங்கள். ஒரே ஒரு வெள்ளிக்கிழமையில் இந்த விளக்கை ஏற்றிவிட்டு பலனை எதிர்பார்க்கக் கூடாது. தொடர்ந்து 48 நாள் இந்த வழிபாட்டை செய்து பாருங்கள். நிச்சயம் நல்ல மாற்றம் தெரியும் என்ற நம்பிக்கையில் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -