தங்க நகை சேர மந்திரம்

mahalakshmi lady
- Advertisement -

தங்க நகையை விரும்பாதவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்ன? இன்று எத்தனை கொடுத்தாலும் போதாத இடத்தில் தங்கமும் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. தங்கத்திற்கான மதிப்பு இன்று அந்த அளவிற்கு பெருகி உள்ளது. முன்பெல்லாம் தங்க நகை மீது பெண்களுக்கு தான் ஆர்வம் அதிகமாக இருக்கும். இப்போதெல்லாம் ஆண்களும் தங்க நகை அணிவதில் அதிக அளவில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

எப்படி வீடு, மனை, சொத்து சேர்க்க விரும்புவார்களோ அதைப் போல தங்கத்தையும் வாங்கி குவிக்க பலரும் ஆசைப்படுகிறார்கள். ஒரு குண்டுமணி தங்கம் கூட இல்லாதவர்களும் தங்க நகைகளை வாங்கி குவிக்க எளிய கூடிய ஒரு எளிய மந்திர வழிபாட்டை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

தங்கம் வாங்க சொல்ல வேண்டிய மந்திரம்

தங்கம் வாங்க வேண்டும் தங்க நகை சேர வேண்டும் அடகில் இருக்கும் தங்க நகையை மீட்க வேண்டும் என்றாலே நாம் வணங்க வேண்டிய தெய்வம் மகாலட்சுமி தாயார் தான். தங்கத் தாரகையான அவரின் அருட்பார்வை நமக்கு கிடைத்து விட்டாலே போதும். தங்கம் மட்டுமின்றி அனைத்து யோகங்களும் நம்மை தேடி வரும்.

அப்படியான அன்னையைப் போற்றி சொல்லக்கூடிய ஸ்ரீ சுத்திலிருந்து இந்த ஒரு மந்திர வார்த்தை சொல்ல வேண்டும். இந்த மந்திர வார்த்தையை சொல்லும் போதே அந்த மந்திர வார்த்தைக்கான அர்த்தத்தையும் நாம் மனதில் கற்பனை செய்து கொள்ள வேண்டும். இந்த மந்திரத்தை எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் சொல்லலாம் தங்கம் இவ்வளவு இருந்தால் போதும் என்று நினைக்கும் மனம் இல்லை தானே.

- Advertisement -

இந்த மந்திர வழிபாட்டை செய்யும் போது அசைவம் சாப்பிடாமல் இருந்தால் நல்லது அல்லது காலையிலே இந்த மந்திர வழிபாட்டை முடித்து விட்டு அதன் பிறகு சாப்பிடலாம். இந்த மந்திர வழிபாடு செய்வதற்கு பூஜை அறையில் மகாலட்சுமி தாயார் முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்று விடுங்கள். தாயாருக்கு பிடித்த நெய்வேத்தியம் ஏதேனும் ஒன்றை செய்து வைக்க வேண்டும். அன்னைக்கு மல்லிகை பூக்கள் சூட்டி விடுங்கள்.

மந்திரம்

ஓம் சொர்ணஸ்ரஜே நமஹ

 

- Advertisement -

பொருள்

தாமரை குளத்தில் தங்கத்தாமரையில் அமர்ந்து தங்க தாமரையை மாலையாக அணிந்த அன்னையே. இந்த வரிகளில் உள்ளது போல மகாலட்சுமி தாயார் தாமரை குளத்தில் தங்க தாமரையில் அமர்ந்திருப்பதாகவும் அவருடைய கழுத்தில் தங்க தாமரை மாலை அணிந்திருப்பதாகவும் பாவனை செய்து கொண்டே இந்த மந்திரத்தை 1008 முறை சொல்ல வேண்டும்.

தினமும் 1008 முறை சொல்ல வேண்டுமா? என்று யோசிக்கலாம் வேதங்களில் இத்தனை முறை தான் சொல்ல வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. உங்களால் முடிந்த எண்ணிக்கையில் சொல்லுங்கள் அது உங்கள் விருப்பம் . மந்திரத்தை சொல்லும் போது முழு மனதோடு அன்னையை வேண்டி சொல்லுங்கள்.

இதையும் படிக்கலாமே: தீராத பிரச்சினை தீர பரிகாரம்

இந்த மந்திர வழிபாட்டை தொடர்ந்து செய்யும் போது தங்கம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களை தேடி வரும். இந்த வாய்ப்புகள் வரும் போது அதை உங்கள் முயற்சியுடன் சேர்த்து வெற்றியாக மாற்றி தங்கத்தை வாங்கி குவிக்கும் யோகத்தை பெறுங்கள். இந்த மந்திர வழிபாட்டில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறுங்கள்.

- Advertisement -