தங்கம் வாங்கும் யோகம் தானாக உங்கள் வீடு தேடி வரும். இந்த 3 பூக்களை ஒன்றாக நகை வைக்கும் இடத்தில் வையுங்கள்.

mahalakshmi-selvam-gold-coins
- Advertisement -

காசு பணம் கையில் இருந்தாலும் தங்கம் வாங்கக்கூடிய யோகம் என்பது ஒரு சில பேருக்கு மட்டுமே அமையும். மகாலட்சுமியின் ஆசீர்வாதம் எந்த குடும்பத்திற்கு இருக்கிறதோ அந்த குடும்பத்தில் சுவர்ணத்தின் சேர்க்கையும் இருக்கும். காசு பணத்தை கையில் வைத்திருந்தால் மட்டும் போதுமா. அந்த காசு பணத்தை தங்கமாக மாற்றுவதற்கும் ஒரு அதிர்ஷ்டம் தேவையில்லையா. அதற்கான ஒரு பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்க போகின்றோம். சில பேர் வீடுகளில் தங்கம் வாங்கி பல வருடங்கள் ஆகி இருக்கும். தங்கம் வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள், ஆனால் முடியாது. வீட்டில் இருக்கும் பெண்ணுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டிருக்கும். திருமணத்திற்காக நகை வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் நகை வாங்கக் கூடிய அந்த சந்தர்ப்பம் என்பது அமையாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும். (கையில் வைத்திருந்த பணம் வேறு எதற்காவது வீண் செலவு ஆகி விடும்.)

இப்படி தங்கம் வாங்கக்கூடிய யோகம் ஒருவருக்கு இல்லை என்றால் அவர்களுக்கு கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு ஸ்வர்ண தோஷம் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அதை சரி செய்ய ஒரு பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். இந்த பரிகாரத்திற்கு நாம் பயன்படுத்த போகும் பொருட்கள் 3. தாமரை பூ, துளசி இலை, பன்னீர் ரோஜா இந்த மூன்றுமே மகாலட்சுமிக்கு மிக மிக விருப்பமான பொருட்கள் தான்.

- Advertisement -

ஒரு சிறிய எச்சில் படாத சொம்பில் ஒரு தாமரை பூ, மூன்று பன்னீர் ரோஜா, துளசி இலை ஒரு கைப்பிடி அளவு போட்டுக் கொள்ளுங்கள். (பித்தளை சொம்பு, செம்பு சொம்பை கூட இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்தலாம்.) இந்த மூன்று பொருட்களையும் அந்த சொம்பில் போட்டு, அந்த சொம்புக்குள் நீங்கள் பயன்படுத்திய ஏதாவது ஒரு நகையை போட்டு வைக்க வேண்டும். எந்த நகையாக இருந்தாலும் சரி, நீங்கள் பயன்படுத்தும் கம்பல் மூக்குத்தி மோதிரம் எதுவாக இருந்தாலும் அதை மஞ்சள் தண்ணீரில் ஒரு முறை கழுவி விட்டு இந்த சொம்புகள் போட்டு, இந்த சொம்பை அப்படியே பீரோவில் நகை வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள்.

மூன்று நாட்கள் இந்த சொம்பு அப்படியே பீரோவில் இருக்கட்டும். சொம்புக்கு உள்ளே இருக்கும் பூக்கள் வாடத்தான் செய்யும். இருந்தாலும் பரவாயில்லை. அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. மூன்று நாட்கள் கழித்து சொம்புக்கு உள்ளே இருக்கும் நகையை மட்டும் நீங்கள் பத்திரமாக திரும்பவும் எடுத்து விடுங்கள். சொம்புக்கு உள்ளே இருக்கும் வாடிய பூக்களை கால் படாத இடத்திலோ அல்லது செடி கொடிகள் கீழேயோ போட்டு விடுங்கள்.

- Advertisement -

வாரத்தில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்து வைக்கலாம். திங்கட்கிழமை எடுத்து நகையை நீங்கள் மீண்டும் அணிவதற்காக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பரிகாரத்தை ஐந்து வாரங்கள் தொடர்ந்து செய்து வரும்போது உங்களுக்கு புது தங்கம் வாங்க யோகம் வரும்.

இந்த பரிகாரத்தை செய்யும் போது மகாலட்சுமியை மனப்பூர்வமாக நினைத்து குலதெய்வத்தை மனப்பூர்வமாக நினைத்து செய்யுங்கள். ஒரு சிலர் வீட்டில் தங்கத்தை அடமானம் வைத்து அதை மீட்க முடியாத நிலைமை இருக்கும். அப்படிப்பட்டவர்கள் இந்த சொம்புக்கு உள்ளே தங்கம் அடமானம் வைத்த சீட்டை சுருட்டி போட்டு பீரோவில் வைத்து விடுங்கள். அடமானம் வைத்த நகைகள் சீக்கிரம் மீண்டு வருவதற்கும் இந்த பரிகாரம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

- Advertisement -