தங்க நகையை வாங்க கூடிய யோகம் தள்ளிக்கொண்டே செல்கிறதா? தங்கமான யோகம் உங்களை தேடி வர, இந்த 3 பொருட்களை தானம் செய்தாலே போதும்.

gold
- Advertisement -

சில பேருக்கு தங்கம் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். கையில் காசு இருக்காது. அதனால் தங்கம் வாங்க முடியாத சூழ்நிலை அமைந்து விடும். சில பேர் தங்கம் வாங்க வேண்டும் என்று பணத்தை சேர்த்து வைப்பார்கள். ஆனால் இறுதியில் அந்த பணம் தங்கம் வாங்குவதற்கு பதிலாக, வேறு ஏதாவது ஒரு செலவுக்கு என்று மாறிவிடும். சில பேருடைய வீட்டில் தங்கம் வாங்கி அதை அடகு வைக்கும் சூழ்நிலையும் வந்துவிடும். இப்படி ஒரு வீட்டிற்கு தங்கம் ராசியே இல்லாமல் போனால் அதற்கு என்ன காரணம். அந்த காரணத்தை சரி செய்ய என்ன பரிகாரம் செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

ஒரு வீட்டில் தங்கம் தங்காமல் போகின்றது என்றால் அந்த வீட்டில் இருக்கும் யாரோ ஒருவருக்கு சுவர்ண தோஷம் இருப்பது என்று அர்த்தம். தோஷம் இருந்தால் அந்த வீட்டில் தங்கம் கட்டாயமாக தங்காது. இந்த சுவர்ண தோஷத்தை எப்படி சரிசெய்வது. இதற்கான பரிகாரமும் நமக்கு ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது. அது என்ன என்பதை இப்போதே பார்த்துவிடுவோம்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை அன்று குறிப்பிட்ட இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை வேளையிலேயே குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு வேண்டும்.  உங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு பச்சரிசி, துவரம் பருப்பு, கொண்டைக்கடலை இந்த மூன்று பொருட்களையும் கொண்டுபோய் முருகன் கோவிலில், முருகப் பெருமானின் பாதங்களில் வைத்து அர்ச்சனை செய்துவிட்டு, உங்களுக்கு இருக்கும் தங்க தோஷம் விலகிக் கொள்ளவேண்டும் என்று முருகப் பெருமானை மனதார வேண்டி, அங்கு உள்ள புரோகிதருக்கு இந்த மூன்று பொருட்களையும் தானமாகக் கொடுத்து விட வேண்டும்.

kondai-kadalai

இந்தப் பொருட்களையெல்லாம் திங்கட்கிழமை அன்று புதியதாக வாங்கி உங்களுடைய வீட்டில் வைத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. எல்லா பொருட்களிலும் ஒரு கிலோ அளவு வாங்கினால் கூட போதும்.

- Advertisement -

அங்கு உள்ள புரோகிதரிடம் செவ்வாய் கிரக பூஜை தானம் என்று சொல்லி, இந்த பொருட்களை தானமாக கொடுத்தால் அவர் பெற்றுக் கொள்வார். இந்த பரிகாரத்தை ஒரேஒரு செவ்வாய்க்கிழமை செய்துவிட்டு இந்த மூன்று பொருட்களையும் வாங்கி புரோகிதருக்கு தானமாக கொடுத்து விட்டு, முருகப்பெருமானுக்கு உங்களால் முடிந்த நிவேதனத்தை வைத்து உங்கள் பெயரைச் சொல்லி ஒரு அர்ச்சனை செய்து அந்த நிவேதனத்தை அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுத்து விட்டாலே போதும். உங்கள் குடும்பத்திற்கு இருக்கக்கூடிய சுவர்ண தோஷம் நீங்கிவிடும்.

murugan-om

இந்த பரிகாரத்தை செய்த பின்பு உங்களுக்கு நகை வாங்க கூடிய யோகம் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். அதுமட்டுமல்லாமல் நீங்கள் ஏதாவது நகையை அடகுவைத்து இருந்தாலும் அந்த நகையை மீட்க கூடிய யோகம் கூடிய சீக்கிரத்திலேயே உங்களுக்கு வந்துவிடும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -