தங்கம் வாங்க போகும் போது இந்த 1 வார்த்தையை சொல்லிவிட்டால், வாங்கிய தங்கம் உங்கள் கையில் நிலையாக தங்காது. அடமானத்திற்கு தான் போகும் அல்லது விற்க வேண்டிய நிலைமை வந்துவிடும்.

- Advertisement -

நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும் என்று சொல்லுவார்கள். நல்லதையே பேசினாலும் நமக்கு நல்லது மட்டும்தான் நடக்கும். நாம் தங்கம் வாங்கும் போது முதலில் பேசக்கூடிய வார்த்தை என்ன தெரியுமா? ‘கையில் காசு பணம் இருந்தால் தங்கம் வாங்கி வைக்கலாம். அவசரத்திற்கு காசு இல்லாத போது அந்த தங்கத்தை அடமானம் வைத்து மீண்டும் பணமாக மாற்றிக் கொள்ளலாம்’. இந்த வார்த்தையை சொல்லாத வாயே இல்லை என்று சொல்லலாம். தங்கத்தை வாங்கும் போதே அதை அடமானம் வைப்பது பற்றி பேசுவோம்.

தங்கம் வாங்கும்போதே யாரும் தங்கத்தை அடமானம் வைப்பதை பற்றி பேசாதீங்க. தங்கம் என்பது அடமானத்தில் வைத்து பணமாக மாற்றுவதற்கு மட்டுமல்ல. அது நம் வீட்டிற்கு வரக்கூடிய ஐஸ்வர்ய லட்சுமி, அந்த தங்கத்தை அழகாக போட்டு வீட்டில் இருக்கும் மகாலட்சுமி சொரூபமான பெண்கள் அனுபவிக்க வேண்டும். அதற்காகத்தான் அதற்கு ஆபரணம் என்ற பெயர் வந்தது. ஆசையாக போட்டு அனுபவிக்க கூடிய பொருள் அது.

- Advertisement -

இனி தங்கம் வாங்க போகும்போது தயவுசெய்து யாரும் அதை அடமானம் வைப்பதை பற்றி யோசிக்கவே யோசிக்காதீங்க. அவசரத்துக்கு இந்த தங்க நகையை அடமானம் வைத்துக் கொள்ளலாம் என்ற வார்த்தையை சொல்லாதீங்க. சரி, அப்போ என்ன வார்த்தையை சொன்னால் நிறைய தங்கம் சேரும் அதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா.

நிறைய தங்கம் சேர சொல்ல வேண்டிய வார்த்தை:
ஒரு சொம்பில் சுத்தமான தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். செம்பு சொம்பாக இருந்தால் ரொம்பவும் சிறப்பு. அந்த சொம்பு தண்ணீரில் கொஞ்சமாக பன்னீர், வாசம் நிறைந்த மல்லிகைப் பூ, பச்சை கற்பூரம், வெட்டிவேர், உங்களுடைய வீட்டில் குண்டுமணி தங்கம் இருந்தால் அதையும் இந்த தண்ணீரில் போட்டுக் கொள்ளவும்.

- Advertisement -

பூஜை அறையில் விளக்கு ஏற்றி சுவர்ணலட்சுமியை மனதார வேண்டிக் கொண்டு இந்த தண்ணீருக்கு மேல் உங்கள் கையை வைத்துக் கொள்ளுங்கள், சொம்பின் வாய்ப்பகுதி இருக்கும் அல்லவா அதன்மேல் உங்கள் உள்ளங்கையை வைத்து ‘ஓம் சுதர்சனாய நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை உச்சரித்து விடுங்கள். மந்திரத்தின் சக்தி அந்த தண்ணீரில் இறங்கி விடும்.

ஒரு வெற்றிலை அல்லது மாயிலையை வைத்து இந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து விடுங்கள். பணம்வைக்கும் பெட்டியில், நகை வைக்கும் பெட்டியில் லேசாக இந்த தண்ணீரை தெளித்து விடுங்கள். உங்களை பிடித்த தரித்திரம் அனைத்தும் நீங்கி, கெட்டதாகவே உருண்டு ஓடு கொண்டிருக்கும் வாழ்க்கை சக்கரம், நல்லதாக சுற்றுத் தொடங்கிவிடும்.

- Advertisement -

இந்த மந்திரத்தை சொல்ல சொல்ல கெடுதல் அனைத்தும் உங்களை விட்டு தூர சென்று விடும். நல்லது அனைத்தும் உங்கள் பக்கம் வந்து விடும். பெருமாள் கையில் இருக்கும் இந்த சக்கரம் நம்முடைய வாழ்க்கை சக்கரத்தை நிர்ணயிக்கக் கூடியது. இந்த தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளித்துவிட்டு பாருங்கள். உங்களை விட்டுப் போன தங்க நகை பணம் பெயர் புகழ் எல்லாம் மீண்டும் உங்களை வந்து சேரும். தண்ணீரில் போட்ட தங்கத்தை பத்திரமாக எடுத்து நீங்கள் போட்டு கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கி உங்களுக்கு வெற்றி மேல் வெற்றிகள் குவிய விநாயகருக்கு எளிமையான இந்த எருக்கம் இலை வழிப்பாட்டை செய்தாலே போதும்.

வாரத்தில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை அன்று ஒரு பூஜை செய்து இந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளிக்கலாம். அல்லது மாதம் ஒரு முறை பௌர்ணமி தினத்திலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். இந்த மந்திரத்தை சொல்லி இந்த தீர்த்தத்தை வீட்டில் தெளித்து வந்தால் வீடு முழுவதும் பாசிட்டிவ் எனர்ஜி நிறைவாக இருக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம் என்ற தகவலோடு இன்றைய ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -