தங்கம் வெள்ளி சேர பூஜை

gold and silver
- Advertisement -

எவ்வளவு வழிபாடுகள் செய்தும் எவ்வளவு முயற்சிகளை எடுத்தும் நம்மால் ஒரு குண்டுமணி அளவுக்கு கூட தங்கத்தையோ வெள்ளியையோ வாங்க முடியவில்லை என்று வருத்தப்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அந்த வருத்தத்தை போக்குவதற்கு பல வழிமுறைகளும், வழிபாடுகளும், பரிகாரங்களும் இருக்கின்றன. அந்த வகையில் ஒரு எளிமையான பூஜை முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

சமூகத்தில் ஒருவருடைய அந்தஸ்தை நிர்ணயிக்கக்கூடிய விஷயங்களாக திகழ்வதில் முதலிடம் பிடிப்பது தங்கமும் வெள்ளியும். பொது விசேஷத்திற்கு செல்லும் பொழுது யாரிடம் அதிக அளவு நகைகள் இருக்கிறதோ யார் ஆடம்பரமாக வருகிறார்களோ அவர்களுக்கு தான் அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதை பலரும் கண்கூடாக பார்த்திருக்கிறோம். இந்த தங்கம் வெள்ளி ஆடம்பர வாழ்க்கை இவை அனைத்திற்கும் காரண கர்த்தாவாக திகழக்கூடியவர்கள் மகாலட்சுமி தாயாரும் சுக்கிர பகவானும் தான்.

- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் மகாலட்சுமி தாயார் மற்றும் சுக்கிர பகவானின் அருள் இருந்தால் அவர் கண்டிப்பான முறையில் செல்வ செழிப்பிற்கு எந்த வித குறையும் இல்லாமல் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ முடியும். அப்படி ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வதற்குரிய பூஜையை பற்றி பார்ப்போம்.

இந்த பூஜையை வெள்ளிக்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். ஒரு பெரிய தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். அது முழுவதும் கஸ்தூரி மஞ்சள் தூளை போட்டு பரப்பிக் கொண்டு அதன் நடுவில் நம்முடைய மோதிர விரதால் ஸ்ரீம் என்று எழுத வேண்டும் அடுத்ததாக வாழைப்பூ மடல்கள் 8 எண்ணிக்கையில் தேவைப்படும். இதை எடுத்து சுத்தமான தண்ணீரில் சிறிது பன்னீரைக் கலந்து இந்த மடல்களை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இதற்கு மஞ்சள் குங்குமம் வைத்துவிட்டு வாழை மடலின் அடிப்பகுதியில் சந்தனத்தால் மோதிர விரலை பயன்படுத்தி ஸ்ரீம் என்று எழுத வேண்டும். இப்பொழுது இந்த வாழை மடல்களில் நாம் எழுதி இருக்கும் மந்திரம் தாம்பாளத்திற்கு உள்புறமாக இருக்குமாறு வட்ட வடிவில் 8 வைத்துக் கொள்ள வேண்டும். இந்த மடல்களுக்கு நடுவில் ஸ்ரீம் என்ற மந்திரம் இருக்கும் அல்லவா? அதற்கு மேல் ஒரு குத்துவிளக்கை வைத்து அந்த குத்து விளக்கிற்கு மலர்களால் அலங்காரம் செய்து மகாலட்சுமி ஆக அந்த குத்து விளக்கை பாவித்துக்கொள்ள வேண்டும்.

பிறகு இந்த குத்து விளக்கிற்கு சுத்தமான பசு நெய்யை ஊற்ற வேண்டும். பஞ்சு திரி போட்டுக் கொள்ள வேண்டும். அடுத்ததாக இந்த விளக்கில் 9 டைமண்ட் கற்கண்டுகளை சேர்த்து விட்டு ஒரு கிராம் அளவிற்கு தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை அதில் சேர்க்க வேண்டும். அந்த அளவிற்கு கூட தங்கமோ வெள்ளியோ இல்லை என்பவர்கள் அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூளையும் சேர்த்து தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

பிறகு இந்த குத்துவிளக்கிற்கு மகாலட்சுமியின் 108 போற்றிகளை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். இப்படி ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையில் இந்த பூஜையை செய்து வருபவர்களுடைய வாழ்க்கையில் மகாலட்சுமி மற்றும் சுக்கிர பகவானின் அருள் பரிபூரணமாக பெற்று செல்வ செழிப்புடன் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ முடியும்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர எளிய பரிகாரம்

முழு நம்பிக்கையுடன் எந்த பூஜையை நாம் செய்தாலும் அந்த பூஜைக்குரிய பலனை நம்மால் முழுமையாக பெற முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு இந்த பூஜையையும் மனதார செய்து பல நன்மைகளை பெறுவோம்

- Advertisement -