தை மாத கடைசி வெள்ளி செய்ய வேண்டிய வழிபாடு

theertham
- Advertisement -

நிறைய தங்கத்தை பீரோவில் சேர்த்து வைக்க வேண்டும். வெள்ளி, வைர, வைடூரிய நகைகளை சேர்க்க வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இல்லை. கோடி கோடியாக சேர்க்க முடியவில்லை என்றாலும் நம்மால் முடிந்தவரை நம் சக்திக்கு ஏற்ப நம் வீட்டில் கொஞ்சம் தங்கம், கொஞ்சம் வெள்ளி இருப்பது லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். உங்களுடைய வீட்டில் இருக்கின்ற தங்கம் நிரந்தரமாக தங்க, இந்த பரிகாரத்தை செய்யலாம்.

வீட்டில் இருந்த கொஞ்ச நஞ்ச தங்கம் வெள்ளி கூட அடகு கடையில் போய் உட்கார்ந்து கொண்டது, அதை மீட்க வேண்டும் என்று நினைப்பவர்களும் இன்று இந்த பரிகாரத்தை செய்யலாம். இன்று வெள்ளிக்கிழமை. அதுவும் தை மாதத்தில் வந்திருக்கக்கூடிய கடைசி வெள்ளிக்கிழமை. அமாவாசை திதியோடு சேர்ந்து இருக்கிறது. இன்று நீங்கள் பிரபஞ்சத்திடம் வைக்கும் வேண்டுதல் உடனே பலிக்கும்.

- Advertisement -

தை மாத கடைசி வெள்ளி வழிபாடு

இன்று தை அமாவாசை. காலையிலேயே முன்னோர்கள் வழிபாடு, திதி தர்ப்பண முறைகளை முடித்துவிட்டு, மதியம் மறைந்த முன்னோர்களுக்கு படையல் போட்டு வழிபாட்டை நிறைவு செய்து விடுவீர்கள். இன்று மாலை வழக்கம் போல பூஜை அறையில் விளக்கு ஏற்றிக் கொள்ளுங்கள். பஞ்சபாத்திரத்தில் தீர்த்தம் வைத்திருப்பீர்கள்.

அதாவது பஞ்ச பாத்திரத்தில் பூஜை அறையில் தண்ணீர் இருக்கும் அல்லவா. அதில் 2 துளசி இலைகள், 1 ஏலக்காய், 1 சின்ன துண்டு பச்சை கற்பூரம், போட்டு தீர்த்தம் தயார் செய்து கொள்ளுங்கள். மகாலட்சுமியை மனதார வேண்டி, முடிந்தால் அடமானம் வைத்திருப்பீர்கள் அல்லவா, அந்த சீட்டை கொண்டு வந்து மகாலட்சுமி தாயாரின் பாதங்களில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த நகையை சீக்கிரம் மீட்டு எடுக்க வேண்டும் என்று மகாலட்சுமியையும் குலதெய்வத்தையும் இந்த பிரபஞ்சத்தையும் மனமுருகி வேண்டிக்கோங்க. அப்படி இல்லை உங்களுக்கு நிறைய தங்கம் சேர வேண்டும். குழந்தை திருமணத்திற்கு தங்கம் வாங்க வேண்டும். இப்படி ஏதாவது வேண்டுதல் இருந்தால் அந்த வேண்டுதலையும் சொல்லி பிரார்த்தனை செய்யலாம்.

அதன் பிறகு ‘ஓம் சுதர்சனாய நமஹ, ஓம் ஸ்வர்ண லக்ஷ்மியே நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை சொல்லுங்கள். பிறகு பஞ்ச பாத்திரத்தில் இருக்கும் அந்த தீர்த்தத்தை கொண்டு போய் பணம் வைக்கும் பெட்டியில், நகை வைக்கும் பெட்டியில் லேசாக தெளித்து விடுங்கள். நிறைய தண்ணீரை கொண்டு போய் கொட்டிடாதிங்க. பிறகு உள்ளே பூசனம் பிடித்து விடும்.

- Advertisement -

உள்ளே இருக்கக்கூடிய பொருட்கள் எல்லாம் வீணாகிவிடும். லேசாக இந்த தீர்த்தம் பீரோவுக்குள் படும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இந்த தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளித்து விடுங்கள். வீடு சுபிட்சம் பெரும். உங்களுடைய வேண்டுதல் சீக்கிரம் பலிக்கும். நாளை முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கக்கூடிய அமாவாசை திதியும் சேர்ந்து இருக்கிறது.

இதையும் படிக்கலாமே: ராகு கேதுவால் யோகம் பெறும் ராசிகள்

நாளை மாலை 6 மணிக்கு இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். நிச்சயம் உங்கள் பணம், நகை, கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நல்லதொரு விடிவுகாலம் பிறக்கும் என்ற இந்த தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -