தீராத கஷ்டத்தையும் தீர்க்கும் இந்த சக்தி வாய்ந்த பரிகாரத்தை செய்வதால் தரைமட்டமான வாழ்க்கையையும் மேல் நோக்கி எடுத்துச் செல்ல முடியும்

buss
- Advertisement -

இயற்கையாகவே கடவுள் நமக்கு கொடுத்த பல பொருட்களில் நேர்மறை சக்திகள் நிறைந்து இருக்கின்றன. நேர்மறை சக்தியை விட எதிர்மறை சக்திகளுக்கே அதிக ஈர்ப்பு தன்மை இருக்கிறது. எனவே எப்போதும் நல்ல சிந்தனையுடன் இருக்க வேண்டும். நமது சிந்தனையில் எந்தவித கெடுதலும் கலந்திருந்தால் அவை நம் வாழ்க்கையை சிதைத்து விடுவதாக மாறி விடும். எனவே எப்பொழுதும் அனைவரும் நலமாக இருக்க வேண்டும், அனைவருக்கும் நல்லதே நடக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட வேண்டும். ஒரு சிலர் துரோகத்தினாலும் உடல் ஆரோக்கிய குறைபாடினாலும் அவதியுற்று தனது வாழ்க்கையில் தடுமாறி தரைமட்ட நிலைமைக்கு வந்திருப்பார்கள். இவ்வாறானவர்கள் மறுபடியும் தங்களின் நிலையை உயர்த்தி முன்னேறி வருவதற்கு இந்த பரிகாரத்தை முறையாக செய்திட வேண்டும். வாருங்கள் இந்த பரிகாரத்தை எவ்வாறு செய்து பலன் பெற வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

viyabaram

பலரும் தங்களின் வாழ்வில் இவ்வாறான சூழ்நிலையை கடந்துதான் வந்திருப்பார்கள். சந்தோஷமான வாழ்க்கை நமக்கு அமையும் பொழுது எவ்வாறு நாம் அதனை மகிழ்ச்சியாக அனுபவிக்கிறோமோ, அது போல துன்பம் வரும் வேளையிலும் மன தைரியத்துடன் அதனை சமாளித்து எதிர்கொள்ள வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் என்பது மனிதரின் வாழ்க்கையில் மாறிமாறி வந்து கொண்டுதான் இருக்கும். அதற்கு ஏற்றார் போல் பக்குவமாக வாழ்க்கையை நடத்தி செல்ல வேண்டும்.

- Advertisement -

வாழ்க்கையில் ஏற்படும் ஒருசில நஷ்டங்களையும், துரோகங்களையும், கஷ்டங்களையும் இறைவனை நம்பிக்கையுடன் வணங்குவதன் மூலம் அவற்றில் இருந்து எளிதாக விடுபட முடியும். அவ்வாறு ஒரு கல்லையும் கடவுளாக நினைத்து வழிபட்டோம் என்றால் அந்த கல்லும் கடவுளாக மாறி நமக்கு அருள்புரியும். எனவே நாம் செய்யவேண்டிய பரிகாரத்தை எந்த அளவிற்கு நம்பிக்கையுடன் செய்கின்றோமோ அந்த அளவிற்கான நமக்கான பலன் கிடைத்திடும்.

eyes-closed

இந்த பரிகாரம் செய்வதற்கு முதலில் சிவன் கோவிலில் இருக்கும் வில்வ மரத்தில் இருந்து தானாக கீழே விழுந்திருக்கும் வில்வக்காயை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதன் மேல் பகுதியை ஒரு மூடி போன்று வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் அந்த வில்வகாயினுள் இருக்கும் சதைப் பற்றுள்ள பகுதிகளை சுத்தம் செய்து வெளியே எடுத்துவிட வேண்டும். இப்பொழுது அந்த வில்வகாய் ஒரு டப்பா போன்று தோற்றமளிக்கும். அதன் பின் அதனுள் இரண்டு கோமதி சக்கரம், ஒரு மஞ்சள் நிற சோழி, சிறிய துண்டு பட்டை, 3 கிராம்பு, சிறிய துண்டு வசம்பு, ஒன்பது குன்றின்மணி, மூன்று ஏலக்காய் இவை அனைத்தையும் சேர்த்து விட்டு இவற்றிற்கும் மேலாக சிறிதளவு வெட்டிவேரையும் அழுத்தி வைத்து விட வேண்டும்.

vilvakai

பிறகு நமது இஷ்ட தெய்வத்தின் திருக்கோவிலில் இருந்து வாங்கி வந்த திருநீரை சிறிதளவு சேர்த்துக் கொண்டு ,சிறிதளவு பச்சை கற்பூரம் இறுதியாக சிறிதளவு ஜவ்வாது சேர்த்து மூடி போன்று வெட்டி வைத்துள்ள வில்வகாயின் மேல் பகுதியை எடுத்து மூடிவிட வேண்டும்.

vibuthi

பின்னர் இதனை ஒரு மஞ்சள் துணியில் மூட்டையாகக் கட்டிக் கொண்டு, அதனை வீட்டின் நுழை வாசல் படி அல்லது பூஜை அறை அல்லது தொழில் செய்யும் இடம் இவ்வாறு எந்த இடத்தில் நமக்கு பிரச்சனை இருக்கிறதோ அந்த இடத்தில் வைத்துவிட வேண்டும். இதனை மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாற்றி புதியதாக செய்து வைக்க வேண்டும். முழு நம்பிக்கையுடன் உங்கள் இஷ்ட தெய்வத்தை வேண்டி தொடர்ந்து செய்து வாருங்கள்.
உங்களின் கஷ்ட நிலை மறைந்து உங்களுக்கு வளமான வாழ்வு கிடைத்திடும்.

- Advertisement -