தரித்திரம் நிறைந்த கடன், உங்களை விட்டு தானாக விலக கல் உப்பை தண்ணீரில் இப்படி கரைத்தால் போதும்.

uppu-cash-salt
- Advertisement -

தரித்திரம் பிடித்தால் தான் கடன் பிரச்சனை வரும். அதென்ன கடனில் ஒரு, தரித்திர கடன் என்ற சந்தேகம் நிறைய பேருக்கு வந்திருக்கும். கையில் நிறைய வருமானம் வரும். பணம் காசு புரளும். ஆனால் நாம் என்றோ வாங்கிய அந்த ஒரு கடனை மட்டும் திருப்பி அடைக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருவோம். இப்படி வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றோம் அல்லவா அந்த குறிப்பிட்ட கடனுக்குப் பெயர்தான் தரித்திர கடன். இவ்வளவு பெரிய தரித்திரம் நிறைந்த கஷ்டங்களை கொடுக்கும் கடனை கூட சுலபமான கரைக்கக்கூடிய சக்தி கல்லுப்புக்கு தான் உண்டு.

பணம் இருந்தும் நீண்ட நாட்களாக திருப்பிக் கொடுக்கவே முடியாத அப்பேர்பட்ட தரித்திர கடனை கரைக்க கல் உப்பை வைத்து என்ன பரிகாரம் செய்யலாம் என்பதை பற்றிய ஒரு சிறிய குறிப்பை தான் இன்று நான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கல்லுப்புக்கு எந்த அளவுக்கு கடனை கரைக்கின்ற சக்தி உள்ளதோ, அதே அளவுக்கு வெற்றியை கொடுக்கக்கூடிய சக்தி வெற்றிலைக்கு உண்டு. ஆக இந்த இரண்டு பொருட்கள் நமக்கு தேவை. கொஞ்சம் பெரிய அளவில் இருக்கும் வெற்றிலை. 1 ஸ்பூன் கல் உப்பு அவ்வளவு தான்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை அன்று காலை 6 மணிக்கு பூஜை அறையிலேயே இந்த பரிகாரத்தை செய்யுங்கள். ஒரு வெற்றிலையை எடுத்து, அதில் கடன் கரைய வேண்டும் என்று எழுத வேண்டும். அதாவது நீண்ட நாட்களாக அடைக்க முடியாத கடன் இருக்கிறது அல்லவா. நீங்கள் யாரிடம் கடன் வாங்கினீர்கள். அவர்களுடைய பெயரை எழுதி அவரிடம் வாங்கிய கடன் தீர வேண்டும் என்று அந்த வெற்றிலையில் எழுதிக் கொள்ளுங்கள்.

உதாரணத்திற்கு ‘கணேஷிடம் வாங்கிய கடனை சீக்கிரம் அடைக்க வேண்டும்’ என்று பேனாவில் சிறிய அளவில் வெற்றிலை மேல் எழுதுங்கள் வெற்றிலை கிழியாத அளவிற்கு லேசாக எழுதிக் கொள்ளுங்கள். வெற்றிலை கிழிந்தாலும் எந்த ஒரு அபசகுனமும் கிடையாது. இப்படி எழுதிய வெற்றிலையின் மேல் ஒரு ஸ்பூன் கல்லுப்பை வைத்து அப்படியே சுருட்டி ஒரு நூல் போட்டு கட்டிக் கொள்ளுங்கள். உப்பு கீழே கொட்டாமல் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் அடியில் இன்னொரு வெற்றிலையைக் கூட வைத்துக் கட்டி இந்த பொட்டலத்தை பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

அடுத்த செவ்வாய் கிழமை எடுத்தால் வெற்றிலை வாடி போய் இருக்கும். அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு வெற்றிலைக்கு உள்ளே இருக்கும் கல் உப்பை தண்ணீரில் போட்டு கரைத்து விட வேண்டும். பழைய வெற்றியை கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். மீண்டும் இதே போல ஒரு வெற்றிலை கல்லுப்பு பொட்டலத்தை கட்டி வைக்க வேண்டும். இதே போல ஐந்து வாரங்கள் தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்து, வெற்றிலைக்கு உள்ளே இருக்கும் கல் உப்பை தண்ணீரில் கரைத்து வர உங்களுடைய கடன் சீக்கிரத்தில் கரையும்.

இந்த பரிகாரத்தை செவ்வாய் கிழமை காலையில் வரக்கூடிய செவ்வாய் ஓரையில் தான் செய்ய வேண்டும். அதாவது செவ்வாய்க்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் பரிகாரத்தை செய்து முடித்து விடுங்கள். நம்பிக்கையோடு இந்த ஒரு சின்ன பரிகாரத்தை செய்து பாருங்கள்.

பார்ப்பதற்கு இவ்வளவு சுலபமான பரிகாரமாக உள்ளதே இதை செய்தால் கடன் அடையுமா என்ற சந்தேகத்தோடு பரிகாரத்தை செய்யக்கூடாது. இந்த கல்லுப்பை கரைக்கும் போது குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டு, இந்த கல்லுப்பு கரைவது போல என் கடனும் கரைந்து போகட்டும் என்று சொல்லிக் கொண்டே ஆத்மார்த்தமாக கரையுங்கள். கடன் அடைந்த வழியே தெரியாது. தரித்திரம் பிடித்த அந்த கடன் உங்களை விட்டு தூர ஓடிவிடும்.

- Advertisement -