தரித்திரம் தான் உங்கள் தலை எழுத்து என்று எழுதி இருந்தாலும், அதை அழித்துவிட்டு தாராளமான பண வரவை கொடுக்கும் திலகம்.

thilgam
- Advertisement -

சில பேருடைய தலையெழுத்தை என்னதான் பரிகாரம் செய்தாலும் மாற்றவே முடியாது. அவர்கள் வாழ்க்கையில் சிறுவயதிலிருந்தே கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பார்கள். வளர்ந்த பின்பும் கஷ்டம் தான் இருக்கும். வாழ்க்கையின் இறுதி கட்டத்திலும் கஷ்டம்தான் இருக்கும். இப்படி எல்லா தருணத்திலும் ஒரு மனிதன் கஷ்டப்பட்டு கொண்டே இருந்தால், அதை அவனுடைய தலைவிதி என்று சொல்லலாம். ஆனால் ஒரு சில பேருக்கு அப்படி கிடையாது. முதல் 30 வருடம் கஷ்டம் இருக்கும். அடுத்த 30 வருடம் சந்தோசமான வாழ்க்கை அமையும் என்று சொல்லுவார்கள்.

உங்களுடைய தலைவிதியில் பணக்கஷ்டம் தான் என்று ஆண்டவன் எழுதிவிட்டானா? நீங்கள் தினம் தினம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா. இந்த திலகத்தை தினமும் நெற்றியில் இட்டு வாருங்களேன். அந்த குரு பகவானின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். சாமுத்திரிகா லட்சணம் உங்களுக்கு கிடைக்கும். பணகஷ்டம் தீரும்.

- Advertisement -

பணக்கஷ்டம் தீர நெற்றியில் வைக்க வேண்டிய திலகம்:
இந்த பரிகாரம் செய்ய பெரிய அளவில் கஷ்டப்படத் தேவை கிடையாது. நமக்குத் தேவை ஒரு மஞ்சள், கிழங்கு மஞ்சள். விரலி மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், எந்த மஞ்சளாக இருந்தாலும் சரி, அது கிழங்கு வடிவத்தில் இருக்க வேண்டும். பொடி செய்த மஞ்சளாக இருக்கக் கூடாது. மஞ்சளை பொடி செய்து விட்டால் அதில் இருக்கும் பவர் குறைந்து விடும். ஆகவே கிழங்கு மஞ்சளாக பார்த்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த மஞ்சளை உரசுவதற்காகவே சின்ன கல் கடைகளில் விற்கும். மஞ்சள் இழைக்கும் கல் என்று சொல்லுவார்கள் அல்லவா. அதையும் ஒரு சிறிய கல் வாங்கிக் கொள்ளுங்கள். தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு பூஜை அறைக்கு வந்து இந்த மஞ்சளை கொஞ்சமாக பன்னீர் விட்டு கல்லில் இழைக்க வேண்டும். மஞ்சள் திலகம் நமக்கு கிடைத்துவிடும்.

- Advertisement -

இந்த மஞ்சள் திலகத்தை குரு பகவானை நினைத்து குலதெய்வத்தை நினைத்து தினமும் உங்கள் நெற்றியில் இட்டு வந்தால், உங்கள் தலையில் எழுதி இருக்கும் தலையெழுத்து மாறும். கஷ்டம் கஷ்டம் என்று இருக்கக்கூடிய உங்கள் வாழ்க்கையில் சந்தோஷம் பிறக்கும். பணத்தடை விலகும். தரித்திரம் விலகும். ஒரு நாள் இரண்டு நாள் செய்துவிட்டு பலனை எதிர்பார்க்கக் கூடாது.

நம்பிக்கையோடு இதை மூன்று மாதம் செய்து வாருங்கள். வாழ்வில் நீங்கள் நம்ப முடியாத நல்ல மாற்றங்களை எதிர்கொள்வீர்கள். மஞ்சளுக்கு அவ்வளவு பவர் இருக்குங்க. பன்னீர் இல்லையா. கவலையே படாதீங்க. வெறும் தண்ணீரை ஊற்றி குழைத்து நெற்றியில் இட்டுக் கொள்ளுங்கள். தவறு கிடையாது.

இதையும் படிக்கலாமே: இந்த வார்த்தையை ஒருமுறை சொல்லிப் பாருங்கள். அரசாங்க வேலையில் இருந்து அப்பாயின்மென்ட் ஆர்டர் உங்கள் வீடு தேடி வரும். நாலு பேரு மதிக்கும் அளவுக்கு கை நிறைய சம்பாதிக்கலாம்.

உங்களுடைய வாழ்க்கையில் நீங்களும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நினைத்தால் இந்த எளிமையான பரிகாரம் உங்களுக்காக மட்டும் தான். ஆன்மீகம் சொல்லும் இந்த பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -