தரித்திரம் நீங்கி செல்வ செழிப்பு உண்டாக

mahalakshmi moodevi
- Advertisement -

செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்து வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு மகாலட்சுமியின் அருள் என்பது பரிபூரணமாக இருக்கும். ஒருவருடைய இல்லத்தில் இருக்கக்கூடிய தரித்திரம் நீங்கினால் தான் மகாலட்சுமியின் அருளான செல்வ செழிப்பு என்பது ஏற்படும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தரித்திர நிலை நீங்கி செல்வ செழிப்பு உண்டாக செய்ய வேண்டிய வழிமுறையை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக அக்கா மூதேவி இருக்கும் இடத்தில் ஸ்ரீதேவி இருக்க மாட்டாள் என்று கூறுவார்கள். அதனால் தான் குளித்து முடித்த பிறகு முதலில் முதுகை துடைத்து மூதேவியை வெளியேற்றி விட்டு முகத்தை துடைத்து ஸ்ரீதேவியை வரவழைக்க வேண்டும் என்று சொல்வார்கள். இதே போல் தான் காலையில் எழுந்ததும் வீட்டிற்குள் இருக்கக் கூடிய மூதேவியை வெளியில் அனுப்புவதற்காக பின் வாசல் கதவை திறக்க வேண்டும்.

- Advertisement -

பிறகுதான் முன் வாசல் கதவை திறந்து ஸ்ரீதேவியை உள்ளே அழைக்க வேண்டும் என்று கூறும் வழக்கமும் இருந்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் இது எல்லாம் நடைமுறைக்கு வருமா என்பது நமக்கு தெரியாது. ஆனால் நாம் அன்றாடம் செய்யக் கூடிய சில காரியங்களால் நம் வீட்டில் இருக்கக் கூடிய தரித்திர நிலை நீங்கும். அந்த வழிமுறையை பற்றி பார்ப்போம்.

பொதுவாக வியாழக்கிழமையில் வீட்டை சுத்தம் செய்யும் பழக்கம் பலருக்கும் இருக்கும். இன்னும் சிலரோ வெள்ளிக்கிழமையில் சுத்தம் செய்து பூஜை செய்வார்கள். வெள்ளிக்கிழமையில் வீட்டை துடைப்பது என்பது ஆகாது. வியாழக்கிழமையை வீட்டை துடைத்து விட வேண்டும். அவ்வாறு வீட்டை துடைக்கும் பொழுது ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து வீட்டை துடைப்பதன் மூலம் வீட்டில் இருக்கக் கூடிய மூதேவி, தரித்திரம், பீடை என்று சொல்லக் கூடிய அனைத்து விதமான தீய சக்திகளும் வீட்டை விட்டு வெளியேறி விடும்.

- Advertisement -

இதோடு மட்டுமல்லாமல் வெள்ளிக்கிழமை அன்று வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் போடும் பொழுது வெண்கடுகை அதனுடன் சேர்த்து போட வேண்டும். இப்படி செய்வதன் மூலமும் வீட்டில் இருக்கக் கூடிய தீய சக்திகள் வெளியேறி மகாலட்சுமி வீட்டிற்குள் வருவதற்குரிய வாய்ப்புகள் ஏற்படும். மேலும் மகாலட்சுமி தாயாரின் மூலமந்திரங்கள், காயத்ரி மந்திரங்கள், கனகதாரா ஸ்தோத்திரம் போன்ற மந்திரங்களை ஒழிக்கச் செய்வதன் மூலமும் ஸ்ரீதேவி வீட்டிற்குள் வருவார்கள்.

இதோடு மட்டுமல்லாமல் இந்த மந்திரத்தை பெண்கள் வீட்டில் விளக்கேற்றி வைத்து விட்டு மனதார ஐந்து முறை உச்சரிக்க மகாலட்சுமி கடாட்சம் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். “ஓம் ஸ்ரீம் க்ரீம் தனதாய காயை சர்வ ஆகர்சன தேவியை சர்வ தரித்திர நிவாரணாயை ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹா”.

இதையும் படிக்கலாமே: தொழில் சிறப்பாக நடைபெற ஷண்முக வழிபாடு

மிகவும் எளிமையான இந்த வழிபாட்டு முறையை பின்பற்றி நம் வீட்டில் இருக்கக்கூடிய சரித்திர நிலையை முற்றிலுமாக நீக்கி மகாலட்சுமியின் அருளை பரிபூரணமாக பெறுவோம்.

- Advertisement -