தொழில் சிறப்பாக நடைபெற ஷண்முக வழிபாடு

shanmuga valipadu
- Advertisement -

வாழ்க்கையில் சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காக சொந்தமாக தொழிலை ஆரம்பித்து அந்த தொழிலை சிறப்பாக நடத்துவதற்காக பல போராட்டங்களை மேற்கொள்ளும் நபர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய தொழில் சிறப்பாக நடைபெறுவதற்கும், தொழிலில் இருக்கக்கூடிய தடைகளை நீங்குவதற்கும் கடினமாக உழைத்தாலும் அந்த உழைப்பிற்குரிய பலனை பெறுவதற்கு முருகப்பெருமானை எந்த முறையில் வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கண்கண்ட தெய்வமாகவும் கலியுக தெய்வமாகவும் திகழக்கூடியவர்கள் முருகப்பெருமான். முருகப்பெருமானை நாம் மனதார வழிபடும் பொழுது நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. இது பலருக்கும் அனுபவரீதியாக நடந்த ஒன்று. அப்படிப்பட்ட முருகப்பெருமானை எந்த முறையில் வழிபட்டால் தொழிலில் ஏற்பட்ட தடைகள் அனைத்தும் நீங்கும் என்று பார்ப்போம்.

- Advertisement -

முருகப் பெருமானுக்கு ஆறுமுகங்கள் இருக்கிறது என்று நம் அனைவருக்கும் தெரியும். அந்த ஆறுமுகங்களையும் நாம் ஒரு சேர வழிபடுவதன் மூலம் நமக்கு பல நன்மைகள் உண்டாகும். அவற்றுள் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்வதுதான் தொழில் சிறப்பாக நடைபெறுவது. முருகப்பெருமானின் ஆறுமுகங்களான சத்யோஜாதக முகம், வாமதேவ முகம், அகோர முகம், தத்புருஷ முகம், ஈசானிய முகம், அதோ முகம். இவை அனைத்தையும் ஒருசேர நாம் வழிபட வேண்டும்.

வளர்பிறையில் வரக்கூடிய சுபமுகூர்த்த நாளாக பார்த்து இந்த வழிபாட்டை நாம் மேற்கொள்ள வேண்டும். அல்லது முருகப்பெருமானுக்கு உகந்த சஷ்டி, கிருத்திகை போன்ற நாட்களிலும் இந்த வழிபாட்டை ஆரம்பிக்கலாம். வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய முருகன் படத்தை சுத்தம் செய்து அவருக்கு ஆறு குங்கும பொட்டுகளை வைக்க வேண்டும். ஒரு முகம் இருந்தாலும் அந்த முகத்தில் ஆறு முறை சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு அவருடைய படத்திற்கு முன்பாக ஒரு தாம்பாள தட்டை வைத்து அதில் வெற்றிலை பாக்கு வாழைப்பழம் என்று ஆறு செட்டுகளை வைக்க வேண்டும். இதே போல் ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொரு பழம் என்று மொத்தம் ஆறு பழங்களை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். எந்த பழத்தை வேண்டுமானாலும் வைக்கலாம். அது தங்களின் விருப்பம் தான். அடுத்ததாக முருகப் பெருமானின் ஆறுமுகத்திற்கும் நாம் அர்ச்சனை செய்ய வேண்டும்.

முதல் முகத்திற்கு மல்லிகை பூவை எடுத்து 11 முறை முருகா சரணம் என்று கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். இரண்டாவது முகத்திற்கு துளசியை வைத்து 11 முறை அர்ச்சனை செய்ய வேண்டும். மூன்றாவது முகத்திற்கு அரளிப்பூவை வைத்து 11 முறை அர்ச்சனை செய்ய வேண்டும். நான்காவது முகத்திற்கு செம்பருத்தி அல்லது வாசனை மிகுந்த மலர்களை வைத்த அர்ச்சனை செய்ய வேண்டும். ஐந்தாவது முகத்திற்கு வில்வ இலைகளை வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும். ஆறாவது முகத்திற்கு மேலே கூறிய இந்த ஐந்து வகையான அர்ச்சனை பொருட்களையும் ஒன்றாக சேர்த்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -

அர்ச்சனை முடித்த பிறகு ஆறு கற்பூரங்களை ஒரு தாம்பாளத்தில் தனி தனியாக வைத்து ஆறு கற்பூரத்தையும் ஏற்றி முருகப் பெருமானுக்கு ஆரத்தி காட்ட வேண்டும். இப்படி தொடர்ந்து ஆறு நாட்கள் முருகப்பெருமானை நாம் வழிபடுவதன் மூலம் முருகப்பெருமானின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். இயன்றவர்கள் அருகில் இருக்கும் முருகன் ஆலயத்திற்கு சென்று முருகப்பெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். இவ்வாறு செய்வதன் மூலம் தொழில் வெற்றி அடையும்.

இதையும் படிக்கலாமே: வீண் விரயத்தை தடுத்து சேமிப்பை உயர்த்தும் பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த ஷண்முக வழிபாட்டை முழு மனதுடன் செய்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் அவர்கள் தொழிலில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கி லாபம் ஏற்படும்.

- Advertisement -