வீட்டில் இருக்கும் தரித்திரம் நீங்கி செல்வ நிலை உயர

lakshmi deepam
- Advertisement -

ஒருவருக்கு செல்வநிலை நன்றாக இருக்கிறது என்றால் அவருக்கு சுக்கிரன் மற்றும் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கிறது என்று அர்த்தம். அப்படி கிடைக்காத பட்சத்தில் அந்த வீட்டில் மகாலட்சுமியின் சகோதரியான மூதேவி இருக்கிறார் என்று அர்த்தம். மூதேவி இருக்கும் வீட்டில் தரித்திரம் குடியிருக்கும். அப்படிப்பட்ட தரித்திரத்தை நீக்குவதற்கும் அதேசமயம் செல்வநிலை உயர்வதற்கும் செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிமுறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தரித்திரம் தாண்டவம் ஆடும் வீட்டில் மகாலட்சுமி குடியிருக்க மாட்டாள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அப்படிப்பட்ட தரித்திரத்தை விரட்டியடிக்கவும் அதேசமயம் மகாலட்சுமி மற்றும் சுக்கிரனின் அருளை பெறுவதற்கும் செய்யக்கூடிய எளிமையான வழிமுறைகளை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த வழிமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்றுவதன் மூலம் நம் வீட்டில் என்றென்றைக்கும் தரித்திர நிலை என்பது வரவே வராது. செல்வ செழிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கும். இது மிகவும் எளிமையான வழிமுறை என்பதால் இதை நாம் தினமும் பின்பற்றுவது மிகவும் சிறப்பு.

தெய்வீக அம்சம் பொருந்திய மரங்கள் என்று நாம் பார்க்கும் பொழுது அதில் முதலிடத்தில் வருவது வேப்பமரம் தான். அன்றைய காலத்தில் அனைவரின் இல்லங்களிலும் வேப்பமரம் என்பது கண்டிப்பான முறையில் இருக்கும். அந்த வேப்ப மரத்தை தெய்வமாகவே பாவித்து மஞ்சள் குங்குமம் வைத்து வழிபாடு செய்வார்கள்.

- Advertisement -

அதோடு மட்டுமல்லாமல் அன்றைய காலத்தில் யாருக்காவது பேய் பிடித்திருந்தாலோ அல்லது எதையாவது ஒன்றைப் பார்த்து பயந்து இருந்தாலும் அதாவது ஒருவரிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களை விலக்குவதற்கு வேப்பிலையை வைத்து தான் அடித்து விரட்டுவார்கள். இதுவும் இன்றளவும் கிராமப்புறங்களில் நடந்து கொண்டிருக்கும் ஒரு வழிமுறையாகவே இருக்கிறது.

அவ்வளவு அற்புதமான தெய்வீக சக்தி மற்றும் மருத்துவ சக்தி மிகுந்ததாக தான் இந்த வேப்ப மரமும், இலையும் திகழ்கிறது. நம் வீட்டில் காலையிலும் மாலையிலும் விளக்கேற்றும் பொழுது கண்டிப்பாக முறையில் நிலை வாசலில் தீபம் ஏற்றும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

ஒன்றோ இரண்டோ தங்களால் இயன்ற தீபத்தை ஏற்ற வேண்டும். அவ்வாறு தீபத்தை ஏற்றும் பொழுது வேப்பிலைகளை வைத்து அதற்கு மேல் அகலை வைத்து தீபம் ஏற்றும் பொழுது வீட்டில் இருக்கக்கூடிய தரித்திரம் என்று சொல்லக்கூடிய எதிர்மறை சக்திகள் அனைத்தும் வெளியேறும்.

இதோடு நாம் செய்யக்கூடிய இன்னும் ஒரு வழிமுறை நம் வீட்டில் செல்வ செழிப்பை உயர்த்தும். அதுதான் அத்திமரம். அத்திமரக் குச்சிகள் கிடைக்கும் பட்சத்தில் அந்த குச்சிகளை எடுத்து மஞ்சள் கலந்த தண்ணீரில் சுத்தம் செய்துவிட்டு, அந்த குச்சி முழுவதும் மஞ்சளை தடவி குங்குமம் வைத்து வீட்டு பூஜை அறையில் வைப்பதன் மூலம் சுக்கிரன் மற்றும் மகாலட்சுமியின் அருள் நமக்கு கிடைக்கும்.

அத்திமரம் என்பது சுக்கிரனுக்குரிய மரமாக கருதப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் அத்தி மரத்தால் செய்யப்பட்ட மரப்பலகைகளை வாங்கி வீட்டு பூஜை அறையில் வைத்து அதற்கு மேல் நாம் தெய்வத்தை வைத்து வழிபட எந்த தெய்வத்தை வைத்தோமோ அந்த தெய்வத்தின் அருளும் சுக்கிர பகவானின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைத்து வீட்டில் என்றென்றைக்கும் செல்வ நிலை என்பது குறையாமல் உயர்ந்து கொண்டே இருக்கும்.

இதையும் படிக்கலாமே: அதிர்ஷ்டம் தரும் மருதாணி பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த வழிமுறைகளை நம்முடைய வாழ்வில் நாம் பின்பற்றி தரித்திரம் நீங்கி செல்வ நிலை உயர்ந்து நற்பலன்களை பெறுவோம்.

- Advertisement -