நம் கையில் எப்போதும் இதை வைத்திருந்தால், நம் கையை விட்டு, நம் வீட்டை விட்டு, லட்சுமி கடாட்சம் வெளியே சென்று விடும். ஏழ்மை நம் வீட்டிற்குள் ஏழேழு ஜென்மத்திற்கும் தங்கி விடும்.

mahalashmi
- Advertisement -

நம்மை அறியாமல் செய்யக்கூடிய இந்த ஒரு சிறிய தவறு கூட, வீட்டில் இருக்கும் லட்சுமி கடாட்சத்தை குறைத்து விடும். வீட்டில் லட்சுமி கடாட்சம் குறைந்து விட்டால், பிறகு கடன் சுமை, மன கஷ்டம், பணக்கஷ்டம், நோய்நொடி பிரச்சனை, சண்டை சச்சரவு, என்று நம் வீட்டை விட்டு நிம்மதி என்ற ஒரு வார்த்தை வெளியே சென்று விடும். எவ்வளவோ கஷ்டப்பட்டு, உழைத்து, பூஜை புனஸ்காரங்கள் செய்து, அடுத்தவர்களுக்கு நல்லது செய்து, வீட்டுக்குள் இந்த லட்சுமி கடாட்சத்தை அழைத்து வருகின்றோம். ஆனால், அந்த ஐஸ்வர்ய கடாட்சத்தை இந்த ஒரு தவறை மட்டும் செய்து வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடாதீர்கள். அது என்ன தவறு என்று தெரிந்து கொள்ள உங்களுக்கும் ஆர்வமாக உள்ளதா. இந்த தவறை நீங்கள் செய்பவர்களாக இருந்தால் இன்று இந்த தவறுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள்.

வீட்டில் ஏழ்மை நுழைய காரணம் என்ன:
நகம், வெட்டாத நீள நீளமான நகம் வீட்டிற்கு தரித்திரத்தை கொடுக்கும். உங்கள் வீட்டில் இருக்கும் மகாலட்சுமியை அடித்து வெளியே விரட்டிவிடும். உங்களுடைய கையில் நீங்கள் நகத்தை வைத்து இருந்தால், நிச்சயம் லட்சுமி தேவி உங்களுடன் வாசம் செய்ய மாட்டாள். நகம் தரித்திரத்தை கொடுக்கக் கூடியது. இது சாஸ்திர ரீதியாக முன்னோர்களால் நமக்கு சொல்லப்பட்டுள்ள ஒரு விஷயம்.

- Advertisement -

சரி, அப்போது மாடலிங் செய்பவர்கள், சினிமா துறையில் இருப்பவர்கள் அழகுக்காக இந்த நகத்தை வளர்த்துக் கொள்கிறார்களே அவர்களுக்கு என்ன தரித்திரம் பிடிக்கிறது. அவர்கள் எவ்வளவு பணம் சம்பாதித்து எவ்வளவு ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். நாம் மட்டும் ஏன் இதை தரித்திரமாக நினைக்க வேண்டும். அது அவர்களுடைய தொழில். தொழில் சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு எந்த தோஷமும் நம்மை வந்து சேரப் போவது கிடையாது. தொழில் தர்மம் அது. ஆகவே அவர்களையும் வீட்டில் இருப்பவர்களையும் ஒப்பிட வேண்டாம்.

ஆனால் வீட்டில் இருப்பவர்களுக்கு அந்த நகத்தின் மூலம் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. சனாதான தர்மத்தின் படி, வீட்டில் இருக்கக் கூடிய பெண்களோ ஆண்களோ அழகுக்காக ஒரு விரலில் நகம் வளர்ப்பது அல்லது ஐந்து விரலிலும் நகம் வளர்த்து அதை ஷேப் செய்து பெருசு பெருசா வைத்துக் கொண்டு பல வண்ணங்களை தீட்டி நைல் பாலிஷ் வைத்துக் கொள்வது போன்ற தவறை மட்டும் செய்யாதீங்க. இந்த நகத்தின் அழகு உங்களுக்கு ஆபத்தை தான் கொண்டு வந்து சேர்க்கும்.

- Advertisement -

அதற்காக நெயில் பாலிஷ் போடக்கூடாது என்று சொல்லவில்லை. தேவையான நகத்தில் நெயில் பாலிஷ் போட்டுக் கொள்ளுங்கள். சிலபேர் நகத்தை பார்க்கும்போது பேய் பிசாசு நகம் போல வளைந்து இவ்வளவு நீளம் இருக்கும். அது நிச்சயம் தவறான ஒரு பழக்கம்‌ இந்த நகத்தை வெட்டுவதற்கு முன்பு கூட நகத்தை சிறிது நேரம் தண்ணீரில் வைத்து ஊற வைத்துவிட்டு அதன் பின்பு வெட்ட வேண்டும் என்று சொல்லுவார்கள். (நகத்தை வெட்டும் போது கொஞ்சம் சுலபமாக இருக்கும் காயம் ஏற்படாது எந்த என்பதற்காகவும் இதை சொல்லி இருக்கலாம்.) அது எகிறி அடித்து வீட்டின் மூளை முடுக்குகளில் எங்காவது விழுந்துவிட்டால் அது கூட வீட்டிற்கு தரித்திரத்தை உண்டாக்கி விடும். நகத்தை வீட்டிற்கு வெளியே சென்று வெட்டி ஒரு பேப்பரில் வைத்து மடித்து குப்பையில் தூக்கி போட்டு விடுங்கள்.

இதை செய்தால் உங்கள் வீட்டில் வளர்க்கக்கூடிய தரித்திரத்தை நீங்களே வெட்டி விடுகிறீர்கள் என்று அர்த்தம். செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் கட்டாயம் நகம் வெட்டக்கூடாது. அமாவாசை பௌர்ணமி பிறந்தநாள் இன்னும் சில விசேஷ நாட்கள் உள்ளது. அந்த நாட்களில் எல்லாம் நிச்சயமாக நகம் வெட்டக்கூடாது.

இதையும் படிக்கலாமே: துர்க்கை அம்மனுக்கு செவ்வாய்க்கிழமை இந்த 2 பொருளை மட்டும் நெய்வேதியமாக வைத்து விட்டால் போதும். எல்லா கஷ்டமும் உங்கள் குடும்பத்தை விட்டு நீங்கிவிடும்.

ஒருவகையில் பார்த்தால் நகம் வளர்ப்பதும் நகம் வீட்டிற்குள் விழுவதும் நம்முடைய ஆரோக்கியத்திற்கு குறைபாடு ஏற்படுத்தக்கூடிய விஷயங்கள் தான். இருப்பினும் இன்று நாம் ஆன்மீகத்தில் இந்த விஷயத்தை பார்க்கிறோம் என்பதால் சாஸ்திர ரீதியாக தயவு செய்து யாரும் நகம் வளர்க்காதீர்கள். அது நிச்சயம் குடும்பத்திற்கு நன்மையை தராது. ஏழ்மையை தான் கொண்டு வந்து சேர்க்கும் என்ற இந்த ஆன்மீகம் தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -