வீட்டில் நீங்கள் இந்த தவறை தெரியாமல் செய்தால் கூட தரித்திரம் வருமாம்! நீங்களும் இந்த தவறை செய்கிறீர்களா என்ன?

paai-lakshmi
- Advertisement -

ஒரு வீட்டில் தரித்திரம் இருந்தால் அந்த வீட்டில் எந்த ஒரு நல்ல விஷயமும் தள்ளி சென்று கொண்டே இருக்கும். சுப காரிய தடைகள், செயல்களில் தடைகள், வாய்ப்புகள் பெறுவதில் தடைகள் போன்ற எண்ணற்ற தடைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தால் உங்கள் வீட்டில் தரித்திரம் குடி கொண்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். இதற்கு நாம் செய்யும் இந்த சில தவறுகளும் காரணமாக இருக்குமாம்! அப்படியான தவறுகள் என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

paai2

முதலில் வீட்டில் இருக்கும் பாயை சரியாக மடித்து வைக்க வேண்டும். இப்போதெல்லாம் நிறைய பேருடைய வீட்டில் பாய் போன்ற பொருட்கள் இருப்பது இல்லை ஆனால் பாய் போன்ற பொருட்கள் வீட்டில் இருந்தால் அதனை முறையாக மடித்து வைக்க வேண்டும். அப்படியே விரித்து வைத்து விட்டு நீங்கள் உங்கள் வேலைகளை செய்து கொண்டிருந்தால் அங்கு தரித்திரம் வந்து குடி கொள்ளும்.

- Advertisement -

நம் முன்னோர்கள் காலத்தில் எல்லாம் வெறும் பாயை விரித்து வைத்தால் அங்கு பேய் வந்து படுத்துக் கொள்ளும் என்று கூறி பயமுறுத்தி வைத்திருப்பார்கள். பேய், பிசாசு எல்லாம் வருமா? என்றெல்லாம் தெரியாது. ஆனால் பாயை விரித்து வைத்தால் அங்கு லட்சுமி கடாட்சம் குறைகிறது எனவே தரித்திரம் குடிகொள்ளும் என்பது மட்டும் உண்மையாக இருக்கிறது.

broom-thudaippam

மேலும் ஒருவர் அமர்ந்து இருக்கும் பொழுது நீங்கள் வீட்டை கூட்டி பெருக்கி கொண்டிருந்தால், அவர்களை தள்ளி போக சொல்லி பின்னர் வீட்டை கூட்டி பெருக்கி கொள்ள வேண்டும். அவர்கள் மீது படும்படியாக துடைப்பத்தை பயன்படுத்தினால் அங்கு தரித்திரம் வந்து குடி கொள்ளும். ஆண் பிள்ளைகளை தான் பொதுவாக இப்படி கூறுவார்கள். ஆண் பிள்ளைகள் மீது துடைப்பம் படும்படியாக செய்யக்கூடாது என்று நம் முன்னோர்கள் கூறக் கேட்டிருப்போம். ஆனால் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் துடைப்பத்தை ஒருவர் மீது படும்படி நாம் வீட்டை கூட்டக் கூடாது.

- Advertisement -

அதே போல ஒரு சிலருடைய வீடுகளில் எல்லாம் சீப்புகளை கழுவுவதே கிடையாது. நாம் தலைவாரும் சீப்பிலும் தரித்திரம் உண்டு. தலைவாறும் சீப்புகளில் அழுக்குகள் இருந்தால் கண்டிப்பாக அங்கு தரித்திரம் தாண்டவமாடும். அடிக்கடி கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும். நீங்கள் பயன்படுத்தும் சீப்பை சுத்தமாக வைத்துக் கொள்ளாவிட்டால் அங்கு கண்டிப்பாக வருமானத் தடை இருக்கும். இதனால் பொருளாதார ரீதியான பிரச்சனைகளை சந்திப்பீர்கள். கணவன் மனைவிக்குள் தேவையில்லாத சண்டை, சச்சரவுகள் இருக்கக்கூடும். மேலும் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அடிக்கடி ஏதாவது ஒரு பிரச்சனைகள் இருக்கும்.

hair-in-comb1

இது போன்ற பிரச்சனைகளுக்கு அங்கு தரித்திரம் இருப்பது தான் காரணம் எனவே சீப்பை கண்டிப்பாக அழுக்குகள் சேராமல் எப்பொழுதும் சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் அதில் முடிகளை சுற்றி வைப்பது, இருக்கும் முடிகளை அகற்றாமல் இருப்பது போன்ற தரித்திரம் தரக்கூடிய செயல்களையும் நீங்கள் கட்டாயம் தவிர்ப்பது உத்தமம். அது மட்டுமல்லாமல் சீப்பை கண்ட இடத்தில் போட்டு வைக்கக் கூடாது. அதே போல துடைப்பத்தையும் சரியான இடத்தில் நீங்கள் மாட்டி வைக்க வேண்டும். இந்த சில விஷயங்களை சரியாக கடைபிடித்தால் அங்கு தரித்திரம் உண்டாவது நிச்சயம் குறையும்.

- Advertisement -