வீட்டை சூழ்ந்து கொண்டிருக்கும் பீடை தரித்திரம், தீய சக்திகள் இவற்றையெல்லாம் பிடரியில் அடித்து ஓட விட வெள்ளிக்கிழமை மாலை வேளையில் தவறாமல் இந்த தூபத்தை போட்டு விடுங்கள்.

mahalakshmi thoobam
- Advertisement -

ஒரு மனிதன் முன்னேற ஒரு வருடம் பாடுபடுகிறான் என்றால் அவனுடைய முன்னேற்றத்தை ஒரே நிமிடத்தில் தவிடு பொடி ஆக்கக்கூடியது தான் இந்த தீய தீய சக்திகள். தீய சக்திகள் என்பது பிறர் உங்களை பார்த்து பொறாமை பார்வை வீசி செல்வது, கண் திருஷ்டிகள், பிறர் நம்மை வாழ விடக்கூடாது என்பதற்காக செய்யும் தீய செயல்கள் இவை எல்லாம் அடங்கும். இவற்றையெல்லாம் அறவே ஒழித்தால் தான் நம்முடைய முன்னேற்ற தடையில்லாமல் செல்லும். இவற்றையெல்லாம் விரட்டி அடிக்கக் கூடிய ஒரு அற்புதமான தூபமுறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்க போகிறோம்.

ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சனைகள் பல விதங்களில் வரும். ஒன்று அவனுடைய நேர கோளாறால் தானாக உருவாகுவது. அதே நேரத்தில் தன்னுடைய சோம்பேறித்தனத்தால் சரியான முறையில் வீட்டை பராமரிக்காமல் தரித்திரத்தை ஏற்படுத்திக் கொள்வது. இதையெல்லாம் ஏதோ ஒரு வகையில் நாம் சரி செய்து கொள்ளலாம் என்றாலும் கூட பிறர் வகையால் வரும் தொல்லைகளை நீக்குவது கொஞ்சம் சிரமம் தான். அது யார் என்ன செய்திருக்கிறார்கள் என்றே கண்டுபிடிக்க முடியாதல்லவா? அப்படியான சூழ்நிலையில் இருந்து எளிமையாக தப்பிக்க இந்த தூபமுறையை முறையாக கடைப்பிடித்தாலே போதும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

- Advertisement -

வீட்டில் இருக்கும் தீய சக்திகள் பீடை தரித்திரம் அனைத்தும் போக தூபம்
இந்தத் தூபத்தை வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு மேல் வீட்டில் விளக்கு வைத்த பிறகு தான் போட வேண்டும். இந்தத் தூபத்தை போட நமக்கு சுத்தமான பால் சாம்பிராணி, குங்கிலியம், லவங்க பட்டை தூள் இது மூன்றையும் வாங்கி தூள் செய்து ஒன்றாக பொடித்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

வெள்ளிக்கிழமை மாலையில் பூஜை எல்லாம் முடித்த பிறகு ஆறு மணிக்கு மேல் சாம்பிராணி போடும் தூபக்கால் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நன்றாக நெருப்பு மூட்டிக் கொள்ளுங்கள். இந்த தூபம் போடுவதற்கு வெறும் கம்ப்யூட்டர் சாம்பிராணி போன்றவற்றை போட்டு புகை மூட்டக் கூடாது. ஏனெனில் இதன் போடும் தூபத்தில் புகையானது வீட்டில் நன்றாக பரவ வேண்டும். எனவே கொட்டாங்குச்சி அல்லது கறி துண்டு கட்டை இவற்றை கொண்டு நெருப்பை மூட்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதில் கலந்து வைத்திருக்கும் இந்த பொடியை சேர்த்து வீட்டின் மூளை முடுக்கு அனைத்திலும் தூபம் காட்ட வேண்டும். வீட்டில் இந்த தூபத்தில் இருந்து வரும் புகைப்படாத இடமே இருக்கக் கூடாது. அந்த அளவிற்கு தூபம் போட வேண்டும். இந்த தூபமானது மகாலட்சுமி தாயாரை வசியப்படுத்தும் என்பதுடன் வீட்டில் இருக்கும் இது போன்ற கெட்ட சக்திகள், பீடை போன்றவற்றை விரட்டி அடிக்க கூடிய சக்தி வாய்ந்த தூபமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இந்த குச்சியை வைத்து தூபம் போட்டால் குடும்ப ஒற்றுமை ஏற்பட்டு, செல்வ செழிப்பில் சிறந்து விளங்கலாம்.

இந்த தூபத்தை வெள்ளிக்கிழமை போடலாம், அதே போல் அமாவாசை, பெளர்ணமி போன்ற நாட்களிலும் இதை தவறாமல் போட வேண்டும். இந்த தூபத்தை உங்களால் முடிந்தால் தினமும் கூட போடுங்கள் இல்லை எனில் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் கட்டாயமாக இந்த தூபம் போடுங்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள், மாற்றங்கள் அனைத்தும் நடப்பதற்கான வாய்ப்புகள் வரும். இந்த தூப முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து மகாலட்சுமி தாயாரின் அருள் ஆசி பெற்று நல்ல முறையில் வாழலாம் என்று இந்த கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -