வீட்டை பிடித்த தரித்திரம் விலக பரிகாரம்

amman
- Advertisement -

வீட்டில் சந்தோஷமும் நிம்மதியும் நிலையாக இருக்க வேண்டும் என்றால், நம் வீட்டை பிடித்த தரித்திரம், பீடை, கண் திருஷ்டி, எதிர்மறை சக்தி இவைகள் எல்லாம் நெருப்போடு நெருப்பாக பொசுங்கிப் போக வேண்டும். வாரத்தில் ஆறு நாள் குடும்பத்திற்காக ஓடி ஓடி சம்பாதிக்கின்றோம். நம்மைப் பற்றி கவனம் செலுத்துவதே கிடையாது.

நம்மை சுற்றி என்ன நடக்கிறது, நம் உடம்பை சுற்றி இருக்கும் ஆரா சக்தி எல்லாம் எப்படி இருக்குது என்பதையெல்லாம் நாம் கவனிக்க போவது கிடையாது. நல்லதோ கெட்டதோ, ஓடி ஓடி பணம் சம்பாதிக்கின்றோம். இந்த எதிர்மறை ஆற்றலை விரட்டி அடித்தால் தான் முழுமையாக ஜெயிக்க முடியும் என்பதை நாம் மறந்து போகின்றோம்.

- Advertisement -

சேர்த்த பணமெல்லாம் வீண் செலவு ஆகிறது, வீட்டில் கஷ்டத்திற்கு மேல் கஷ்டம் என்றால் ஏன் வராது. கண் திருஷ்டி, பொறாமை, தரித்திரம், பீடை இவைகளை வாரத்தில் ஒரு நாளாவது நம் வீட்டில் இருந்தும், நம் உடம்பை விட்டு விரட்டி அடிக்க வேண்டாமா. வாரம் ஒரு முறை உங்க வீட்டிலும் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். வீட்டை பிடித்த தரித்திரம் விலகி உங்கள் குடும்பத்திற்கு நன்மை நடக்கும்.

வீட்டை பிடித்த தரித்திரம் விலக செய்ய வேண்டிய பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நமக்கு முழுசாக இருக்கும் மூன்று வர மிளகாய், கல் உப்பு ஒரு ஸ்பூன், வெண்கடுகு ஒரு ஸ்பூன் தேவை. இந்த மூன்று பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மூன்று பொருட்களையும் ஒரு சின்ன வெள்ளை துணியில் வைத்து முடிச்சாக கட்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

ஒரு சின்ன கிண்ணத்தில் நல்லெண்ணெய் ஊற்றி இந்த முடிச்சை ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே ஊற வைத்து விடுங்கள். அந்த துணியில் எண்ணெய் நன்றாக ஊறி இருக்கும் அல்லவா. இப்போது இந்த முடிச்சை கொண்டு போய் நிலை வாசலுக்கு வெளியில் வைத்து அப்படியே கொளுத்தி விட வேண்டும். இந்த முடிச்சை உங்கள் தலையை சுற்ற வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது.

இந்த நெருப்பு உங்கள் நிலை வாசலில் எறிந்தால் உங்கள் வீட்டை பிடித்த தரித்திரம் விலகும், உங்களைப் பிடித்த கண் திருஷ்டி உங்களை விட்டு விலகும். உங்களுக்கே தெரியாமல், நீங்கள் அழிய வேண்டும் என்ற எண்ணத்தில், யாராவது எதிரிகள் துரோகிகள் ஏவல் பில்லி சூனியம் வைத்திருந்தாலும், அந்த பிரச்சினையை சரி செய்யக்கூடிய சக்தி இந்த நெருப்புக்கு உண்டு என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த நெருப்பு எரியும் போது நீங்கள் சிறிது நேரம் அமர்ந்து அந்த அக்கினியை பார்க்கலாம். உங்கள் உடம்பை சுற்றி இருக்கும் ஆரா சக்தி உறுதி அடையும். ஆனால் ஞாயிற்றுக்கிழமை அன்று நீங்கள் செய்யத் தொடங்கிய இந்த பரிகாரத்தை, அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை எட்டு நாட்களுக்கு தொடர்ந்து செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: நல்ல வேலை கிடைக்க மந்திர வார்த்தைகள்

தினம் தினம் இந்த நெருப்பு உங்கள் நிலை வாசல் படியில் எரிய எரிய உங்கள் வீட்டில் இருக்கும் கெட்ட சக்தி எல்லாம் வீட்டை விட்டு வெளியே செல்ல தொடங்கிவிடும். வீட்டில் தெய்வ சக்தி ஆன்மீகம் குடியேறி விடும். பிறகு குடும்பத்தில் பிரச்சனைகள் வராமல் இருக்கும். எட்டு நாள் தொடர்ந்து இதை செய்துதான் பாருங்களேன். வீட்டில் என்ன மாற்றம் நிகழ்கிறது என்பதை.

- Advertisement -