சகல பாவங்களில் இருந்தும் விடுபட ஸ்ரீ அகோர மூர்த்தி மந்திரம்

akora murthy manthiram
- Advertisement -

கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று சொல்வார்கள். கண்ணாடி மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் ஒருவருடைய முன்னேற்றத்தை அப்படியே தடுத்து நிறுத்தக்கூடியதாகவும் உள்ளது. அதில் பலரும் பலவிதமான அனுபவத்தையும் பெற்றிருக்கிறார்கள். இருப்பினும் இது அவரவரின் நம்பிக்கையை பொறுத்தே. மற்றவரின் தீய பார்வையினால் தனக்கு ஏற்படும் பாதிப்பை பெரும்பாலான உணர்ந்து இருப்பார்கள்.

இது மட்டும் இன்றி ஒருவரின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த மற்றவர் செய்யும் செயல்கள் அனைத்தும் தீய செயல்களாகவே கருதப்படுகிறது. அதுவும் மாந்திரீகத்தின் மூலம் செய்யப்படும் செயல்கள் ஒருத்தரின் வாழ்க்கை வேரோடு அழித்து விடக் கூடியதாக உள்ளது. இது போன்ற தீய செயல்களில் இருந்து வெளிவருவது மிகவும் கடினமான செயல் தான்.

- Advertisement -

இது பிறரால் நமக்கு வரக்கூடிய துன்பங்கள் நம்மால் நமக்கே வரக்கூடிய துன்பங்களில் அது நம்முடைய கர்மாவும் நாம் தெரியாமல் செய்யும் பாவங்களும் தான். தவறு செய்யாத மனிதன் உலகில் இருக்கவே முடியாது. தவறு செய்து விட்டோம் என்று உணரும் போது கட்டாயமாக திருந்த வேண்டும். இதை உணர்ந்து வாழ்ந்தாலே பெரும்பாலும் தப்பித்து விடலாம்.

இப்படி பிறரால் வரக்கூடிய துன்பங்கள் தன்னால் நேரக்கூடிய துன்பங்கள் அனைத்தையும் தகர்த்தெறிந்து நம்மை நல்ல முறையில் வாழ வைக்கக் கூடிய சக்தி கொண்ட ஒரு மந்திரத்தை பற்றி தான் மந்திரம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

கண் திருஷ்டி தீய செயல்களில் இருந்து தப்பிக்க மந்திரம்

மந்திர வழிபாடுகளை பொறுத்த வரையில் பெரும்பாலும் அதற்கான நேரங்கள் நியமனம் செய்யப்படுவதில்லை. நாம் பூஜை செய்யும் அனைத்து நேரத்திலும் இந்த மந்திரங்களை ஜெபிக்கலாம். அந்த வகையில் இந்த மந்திரத்தையும் நீங்கள் பூஜை செய்யும் வேளையிலே சொல்லலாம்.

ஸ்ரீ அகோர மூர்த்தியின் மந்திரம்

ஸகல கன ஸமாபம்
பீமதம்ஷ்ட்ரம் த்ரிநேத்ரம்
புஜகதரம கோரம்
ரக்த வஸ்த்ராங்க தாரம்
பரசு டமரு கட்கம்
கேடகம் பாணச்சாயை
திரிசிகநர கபாலை
விப்ரதாம் பாவயாமி

என்ற இந்த மந்திரத்தை 108 முறை தினமும் பாராயணம் செய்ய வேண்டும். இதை பாராயணம் செய்பவர்கள் வாழ்க்கையில் சகல பாவங்களையும் தோஷங்களையும் பெற்று வாழ்க்கையில் ஏற்றங்களை பெறுவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்கலாமே: பண தேவை பூர்த்தி செய்ய மந்திரம்

இந்த அகோர மூர்த்திக்கான ஆலயம் திருவெண்காட்டில் அமைந்துள்ளது. கண் திருஷ்டி ஏவல் காரிய தடைகள் போன்றவை நீங்குவதற்காகவே இவரை அனைவரும் வழிபட்டு வருகிறார்கள். நாமும் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் துன்பங்கள் நீங்க இவரின் மந்திரத்தை ஜெபித்து நன்மைகளை பெறலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -