தீராத நோயில் இருந்து விடுபட உதவும் மந்திரம்

dhanvanthiri manthiram
- Advertisement -

இப்பொழுதெல்லாம் நோய்க்கு மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ளாத வீடு என்பதே கிடையாது என்று சொல்லலாம் அந்த அளவிற்கு வியாதிகள் பெருகிக் கொண்டே செல்கிறது. என்ன வென்று பெயர் கூட தெரியாத பல வியாதிகள் புதிது புதிதாக உருவாகி மனித இனத்தை வாட்டிக் கொண்டிருக்கிறது. அந்த நோயிலிருந்து விடுபட வேண்டி நாமும் எத்தனையோ மருந்து மாத்திரைகளை எடுத்தாலும் கூட சில வியாதிகள் சரியாவதும் இல்லை. சில வியாதிகள் என்னவென்று இன்னும் கண்டுபிடிக்க கூட முடிவதில்லை. அப்படியான பிரச்சனைகளில் சிக்கி இருப்பவர்கள் கூட தங்களுடைய வியாதியிலிருந்து மீண்டு வர எளிமையான மந்திர முறையைப் பற்றி தான் இந்த மந்திரம் பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

நோயிலிருந்து விடுபடக் கூடிய தன்வந்திரி மந்திரம்

நோயிலிருந்து காக்கக் கூடிய அனைவருமே தெய்வத்திற்கு சமமானவர்கள் இதில் மருத்துவர்கள் மருத்துவப் பணி செய்பவர்கள் என அனைவரும் அடங்குவர். ஆனால் ஒரு சிலருக்கோ என்ன வகையான மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டாலும் அது பலனும் அளிக்காது அவர்களை நோயிலிருந்து மீட்டும் கொண்டு வராது. இப்படி சிலர் அவதிப்பட்டு கொண்டிருப்பார்கள் இன்னும் சிலரோ என்ன மருந்து எடுத்துக் கொண்டாலும் தனக்கு சரியாகாது என்ற ஒரு ஆழமான நம்பிக்கையுடன் இருப்பார்கள் இவர்களுக்கும் இந்த நோயிலிருந்து மீள வழி பிறக்காது.

- Advertisement -

இதனால் இவர்கள் மட்டும் இன்றி இவர்களை சுற்றி உள்ளவர்களும் பெரும் அவதிக்கு உள்ளாவார்கள். அப்படி ஆனவர்களை காக்கக் கூடிய ஒரு அருமையான மந்திரம் தான் இந்த தன்வந்திரி மந்திரம். இதைத் தொடர்ந்து படித்துக் கொண்டே தங்களுடைய நோய்க்கான சிகிச்சையை தொடரும் பட்சத்தில் இது வரை சிகிச்சை எடுத்தும் தீராத வியாதிகளும் தீரும் எனவும் தனக்கு வியாதியே தீராது என்று குழப்பத்தில் இருப்பவர்களும் மீண்டும் நாம் சரியாக விடுவோம் என்று நம்பிக்கையுடன் இருப்பார்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இப்போது அந்த மந்திரத்தை தெரிந்து கொள்வோம்.

மந்திரம்:

ஓம் நமோ பகவதே
வாசுதேவயா தன்வந்த்ரயே
அமிர்தகலாஷா ஹஸ்தியா
சர்வாமய வினஷானயா
த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மகாவிஷ்ணுவே நமஹ:

- Advertisement -

தன்வந்திரி மந்திரத்திற்கான பொருள்:

எல்லோருக்கும் வரம் தருபவரும் வாசுதேவராக இருப்பவரும்
அமிர்த கலசத்தை கையில் ஏந்திய வரும்
சகல நோய்களை தீர்க்க மூவுலகத்தை காண்பவரும்
மகாவிஷ்ணுவாக அவதரித்திருப்பவரும் ஆகிய
தன்வந்திரி கடவுளே உன்னை வணங்குகிறேன்
எனக்கு வந்திருக்கும் நோய்களை
கண்ணுக்குத் தெரியாமல் நீக்குவாயாக

இதில் தன்வந்திரி மந்திரத்தையும் அந்த மந்திரத்திற்கான பொருளும் தரப்பட்டுள்ளது. இந்த மந்திரத்தை படிக்க முடிந்தவர்கள் படிக்கலாம். ஒரு வேளை அது தன்னால் படிக்க முடியவில்லை என நினைப்பவர்கள் அதன் பொருளை மட்டுமாவது படித்து கொள்ளுங்கள். இதுவும் அதே போன்ற பலனை தரும். இந்த மந்திரத்தை தினமும் காலையில் எழுந்தவுடன் சொல்லலாம் அல்லது உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லிக் கொண்டே இருங்கள. உங்கள் நோயிலிருந்து விரைவில் விடுபடுவதற்கான நேரம் விரைவில் அமையும்.

இதையும் படிக்கலாமே: உங்கள் பணம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வைத் தரும் மூன்றெழுத்து மந்திரம்.

தீராத நோய் தீர மேற்கொள்ளப்படும் மந்திர வழிபாட்டு முறையை இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் அறிந்து கொண்டிருப்பீர்கள். இந்த மந்திர வழிபாட்டு முறையை நம்பிக்கையுடன் செய்து நோயிலிருந்து விடுபட்டு நல்ல ஆரோக்கியமான மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கையை வாழுங்கள் என்ற இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -