இரவு தூங்கும் போது இந்த ஒரு பொருளை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால், எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும், அது மறுநாள் காலை ஒன்னுமே இல்லாமல் போய்விடும்.

sleep
- Advertisement -

வாழ்க்கையில் எல்லோருக்குமே பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். பிரச்சனைகள் இல்லாத மனிதர்களை நிச்சயம் பார்க்க முடியாது. ஆனால் ஒரு சில நேரங்களில் நம்மை அறியாமலேயே பெரிய பிரச்சனையிலிருந்து வெளிவர முடியாமல், பிரச்சனையிலிருந்து வெளியே வருவதற்கு வழி தெரியாமல், சிக்கித் தவிப்போம். மறுநாள் காலை, இந்த பொழுது விடியாமல் போய்விடக் கூடாதா என்று கூட சிலருக்கு தோன்றும். காலையில் எழுந்தால் இந்த பிரச்சினையை தீர்க்க என்ன செய்யப் போகின்றோம் என்று குழப்பமான நிலையில் இருக்கும்போது, உங்களுக்கு இந்த பரிகாரம் கைகொடுக்கும். எல்லாருக்கும் எல்லா சூழ்நிலையிலும் தீர்க்க முடியாத பிரச்சினை ஒன்றும் வரப்போவதில்லை. எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதற்கான தீர்வு ஒன்றை ஆண்டவன் காட்டிக் கொடுப்பான். அதனால் அதை எல்லாம் நினைத்து பயப்படாதீங்க.

தீராத பிரச்சனைக்கு தீர்வு தரும் எலுமிச்சை பரிகாரம்:
இரவு தூங்க செல்வதற்கு முன்பாக கிழக்கு பார்த்தவாறு நின்று கொள்ளுங்கள். வலது கையில் ஒரு எலுமிச்சம் பழம் வைத்துக் கொள்ளுங்கள். அந்த எலுமிச்சம் பழத்தில் கரும்புள்ளிகள் இருக்கக் கூடாது. கொஞ்சம் நல்ல பழமாக பார்த்து வாங்கி கொள்ளுங்கள்.

- Advertisement -

குலதெய்வத்தை நினைச்சுக்கோங்க. உள்ளங்கையில் எலுமிச்சம் பழம் இருக்கு. உங்களுடைய பிரச்சனை என்ன. அந்த தீர்க்க முடியாத பிரச்சனையை குலதெய்வத்திடம் சொல்லி அந்த பிரச்சனை எப்படியாவது நாளைக்கு சரியாக வேண்டும் என்று வேண்டுதல் வையுங்கள். வாய்ப்பு கிடைத்தால் அந்த பிரச்சனையை வாய் விட்டு எலுமிச்சம் பழத்திடும் சொல்லுங்கள். தெய்வ கனி, தேவ கனி என்று சொல்லப்படும் அந்த எலுமிச்சம் பழத்திற்கு உங்கள் பிரச்சனை நிச்சயம் புரியும்.

ஆனால் முழு நம்பிக்கையோடு இதை செய்ய வேண்டும். இப்படி உங்கள் வலது கையில் வைத்து வேண்டுதலை சொன்ன எலுமிச்சம் பழத்தை நீங்கள் தூங்க செல்லும் போது உங்களுடைய தலையணைக்கு அடியில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பரிகாரத்தை செய்யும்போது யார் கூடவும் படுக்காதீங்க. தனியா படுத்துகிறது நல்லது. தனியாக என்றால் உங்களுக்கு என்று தனி பாய் விரித்து கொள்ளுங்கள். உங்களுக்கு என்று ஒரு தலையணை விரித்துக் கொள்ளுங்கள். அந்த பாயில் யாரும் படுக்க வேண்டாம். அவ்வளவுதான்.

- Advertisement -

மறுநாள் காலை எழுந்தவுடன் அந்த எலுமிச்சம் பழத்தை கொண்டு போய் வீட்டிற்கு வெளியே நின்று உங்கள் தலையை மூன்று முறை சுற்றி, அந்த பழத்தை இரண்டாக உடைத்து(வெட்டி) தூக்கி போட்டு விட வேண்டும். பிறகு வந்து நீங்கள் எப்பவும் போல குளித்துக் கொள்ளுங்கள். தலைக்கு குளித்துக் கொள்ளவும். அவ்வளவுதான். நீங்கள் எந்த பிரச்சனையை சொல்லி இந்த பரிகாரத்தை செய்தீர்களோ, எந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியவில்லையோ, அதற்கு உண்டான தீர்வினை இந்த பிரபஞ்சம், உங்கள் குலதெய்வம், உங்களுக்கு காட்டிக் கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: குலதெய்வ கோவிலுக்கு செல்லும் பொழுது வீட்டில் இருக்கும் இந்த இரண்டு பொருளை மறக்காமல் கொண்டு செல்லுங்கள். நீங்கள் திரும்பி வரும் போது குலதெய்வம் நிச்சயம் உங்களுடனே வீட்டுக்கு வந்து விடும்.

ஒரு நாளில் இந்த பரிகாரம் பலனை கொடுக்குமா என்று சில பேருக்கு சந்தேகம் இருக்கும். அது உங்களுடைய பிரச்சனையை பொறுத்தது. ரொம்பவும் பெரிய பிரச்சனை என்றால் தொடர்ந்து ஒரு 11 நாட்கள் எலுமிச்சம் பழத்தை வைத்து இந்த பரிகாரத்தை செய்யலாம். பிரச்சனை கொஞ்சம் எளிமையானது எனும் பட்சத்தில் மூன்று நாட்கள் இந்த பரிகாரத்தை செய்தால் போதுமானது. ஆண்கள் பெண்கள் யார் வேண்டும் என்றாலும் இதை செய்யலாம். பண கஷ்டம், மன கஷ்டம், குடும்ப உறவுகள் ஒன்று சேர, தீர்க்க முடியாத சொத்து பிரச்சினை தீர, நல்ல வேலை கிடைக்க என்று எந்த நன்மைக்காகவும் பரிகாரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். நம்பிக்கை உள்ளவர்கள் எளிமையான ஆன்மீகம் சொல்லும் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -