தீராத கடனையும் தீர்த்து வைக்கும் இந்த கணபதியை செவ்வாய்க் கிழமையில் இந்த 2 பொருளை வைத்து வழிபட்டால் போதுமே, கடன் தீர்ந்து வருமானமும் பெருகும்.

thorana-ganapathi-kadan-vilakku
- Advertisement -

ஒரு மனிதனுக்கு எத்தனையோ பிரச்சனைகள் இருந்தாலும் அதை அவன் சமாளித்து விடுவான். வருமானம் இல்லாமல் கடன் பிரச்சனை மேலோங்கி இருந்தால் அதனை சமாளிக்க அவன் நிச்சயம் போராட வேண்டியிருக்கும். பணமானது கைக்கு கை மாறிக் கொண்டே இருக்கும். நிலையில்லாத பணத்தை நிலைபெறச் செய்யவும், தீராத கடன் பிரச்சினையைத் தீர்க்கவும் நமக்கு உற்ற உறுதுணையாக இருப்பவர் தோரண கணபதி! அவரை செவ்வாய்க் கிழமையில் வழிபடுவது சிறப்பு! ஆனால் எப்படி முறையாக வழிபட வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

kadan

கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனையும் உடனே தீர தோரண கணபதி படத்தை வைத்து அவருக்கு உரிய மந்திரங்களை உச்சாடனம் செய்து வழிபட வேண்டும். இவரை முறையாக வழிபடுவதன் மூலம் கோடி கோடியாக கடன்கள் இருந்தாலும் அதை நீக்குவதற்கு உரிய வழியை எளிதாக நமக்கு காண்பித்து விடுவார். இவரை செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வழிபடுவது சிறப்பு. குறிப்பாக செவ்வாய்க்கிழமை தோறும் தோரண கணபதி வழிபாடு மேற்கொள்வது அற்புத பலன்களை கொடுக்கும்.

- Advertisement -

தோரண கணபதி கோவிலுக்கு சென்று வழிபட முடிந்தால் நிச்சயம் சென்று வாருங்கள். அப்படி செல்ல முடியாதவர்கள் கணபதியின் படத்தை வாங்கி வைத்து முறையாக வழிபடலாம். ஒவ்வொரு கணபதியும் ஒவ்வொரு விதமான பலன்களை நமக்கு கொடுக்கக் கூடியவராக இருக்கிறார். அதில் அரச மரத்தடியில் அமர்ந்திருக்கும் விநாயகர் நமக்கு பிள்ளைப்பேறு வழங்குகிறார். ஆலமரத்தடி விநாயகரை வழிபட்டு வந்தால் தீய சக்திகள் நம்மை விட்டு விலகி ஓடி விடும் என்பது ஐதீகம்.

thorana-ganapathy

வேப்ப மரத்தடி விநாயகரை வழிபட்டால் நாள்பட்ட நோய்கள் நீங்கும், உடல் ஆரோக்கியம் சீராகும். ஆலயங்களில் இருக்கும் ஸ்தல விருட்ச விநாயகரை வழிபட்டால் எல்லா தெய்வங்களின் அருளும் கிடைக்கும். அந்த வகையில் இந்த தோரண கணபதி கடன் பிரச்சினையைத் தீர்க்கக் கூடிய அற்புத பலன்களை கொடுக்கிறார். ருணம் என்றால் கடன் என்பது அர்த்தம். ஜடா மகுடமும், ருத்ராட்ச மாலையும் அணிந்திருக்கும் இந்த தோரண கணபதியை வழிபட்டால் ருணங்கள் யாவும் நீங்கும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை தோறும் அதிகாலையில் எழுந்து நீராடி சுத்தமான ஆடை உடுத்தி, பூஜை அறைக்கு சென்று அங்கு உள்ள தோரண கணபதி படத்திற்கு முன்பு வாழை இலை விரித்து கொள்ள வேண்டும். அதில் இரண்டு கைப்பிடி அளவிற்கு பச்சரிசி மற்றும் இரண்டு கைப்பிடி அளவிற்கு வெல்லம் ஆகியவற்றை கலந்து நிவேதனமாக வைக்க வேண்டும். இரண்டு அகல் விளக்குகளில் புது திரி இட்டு நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். நல்லெண்ணெய் கடன்களை நீக்கும் அற்புத ஆற்றல் கொண்ட எண்ணெய். நல்லெண்ணெய் தவிர வேறு எண்ணையை பயன்படுத்த வேண்டாம்.

vilakku2

நல்லெண்ணெய் தீபம் ஏற்றி கீழ்வரும் இந்த ருண விமோசன தோரண கணபதி மந்திரத்தை தொடர்ந்து 12 முறை உச்சரியுங்கள். அமைதியாக தியான நிலையில் அமர்ந்து உச்சரித்து பின்பு நீங்கள் நிவேதனம் வைத்த பச்சரிசி மற்றும் வெல்லத்தை கலந்து உருண்டையாக்கி அதனை காக்கைகளுக்கும், குருவிகளுக்கும் உணவிடுங்கள். மேலும் பசுக்களுக்கு அவற்றை தானம் அளியுங்கள். தொடர்ந்து ஒன்பது வாரங்கள் இதை செய்து வர எத்தகைய கடன்களும் எளிதாக நீங்கும். முழு நம்பிக்கையுடன், பக்தி சிரத்தையுடன் இந்த பரிகாரத்தை செய்தால் கடன்கள் அடைந்து வருமானம் பன்மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை.

thorana-ganapathy1

ருண விமோஷண ஸ்ரீ தோரண கணபதி மந்திரம்:
‘ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லாம் கலௌம் கம் தோரண கணபதயே
சர்வகார்ய கர்த்தாய ஸகல சித்திகராய ஸர்வஜன வசீகரணாய
ருணாமோசன வல்லபாய ஹ்ரீம் கம் கணபதயே ஸ்வாஹா.

- Advertisement -