கோடீஸ்வரனாக தாந்த்ரீக பரிகாரம்

sukura mochai payaru
- Advertisement -

ஒவ்வொருவரும் பணம் சம்பாதிக்க வேண்டும் பணத்தை சேர்க்க வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். அதையும் தாண்டி தான் வாழும் இடத்தில் நல்ல சமூக மதிப்புடன் பெரிய செல்வந்தராய் அந்த அந்தஸ்துடன் வாழ வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். இதை பேராசை என்று சொல்வதற்கில்லை இந்த ஆசை நிறைவேறுவதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும் அது தான் முக்கியம்.

ஆசை தான் துன்பத்திற்கான முதல் படி இதை நாம் கேள்விப்பட்டிருந்தாலும் இது போன்ற ஆசைகள் இல்லா விட்டாலும் வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை எட்ட முடியாது என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆசைகளை பொருத்த வரையில் நம்முடைய இந்த எண்ணங்களாலும் முயற்சிகளாலும் பிறர் துன்ப படாத வகையில் இருந்தாலே போதும்.

- Advertisement -

சரி இப்போது சமூகத்தில் இப்படி வாழ வேண்டும் எனில் நமக்கு நல்ல பண வரவும் அதற்கான வாய்ப்புகளும் கிடைக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை நாம் எடுக்க வேண்டும். இதையெல்லாம் செய்வதுடன் அவை சீக்கிரம் கை போடுவதற்கு சில தாந்த்ரீக பரிகாரங்களும் உள்ளது. அதை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

கோடீஸ்வர யோகம் பெற

கோடீஸ்வர யோகம் பெற வேண்டும், சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்க வேண்டும், நல்ல மதிப்பு மரியாதையுடன் வாழ வேண்டும். இவற்றையெல்லாம் நமக்கு அருளக் கூடியவர் சுக்கிர பகவான். சுக்கிரனின் அருள் இருந்து விட்டால் போதும் நம்மை வாழ்க்கையில் நினைத்துப் பார்க்காத அளவிற்கு உயர்த்தி விடுவார்.

- Advertisement -

இதை மையமாகக் கொண்டு தான் ஒருவர் நல்ல நிலைக்கு உயரம் போது அவருக்கென்ன சுக்கிர திசை அடித்து விட்டது என்று ஒரு வார்த்தையும் சொல்வார்கள். சுக்கிரனுடைய அருளைப் பெற மகாலட்சுமி தாயாரின் அனுகிரகமும் வேண்டும் என சுக்கிரனுடைய அதி தேவதையானவர் தான் இந்த மகாலட்சுமி தாயார். ஆகையால் இந்த தாந்திரீக பரிகாரத்தை இவர்கள் இருவருக்கும் உகந்த வெள்ளிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும்.

வெள்ளிக்கிழமையில் எப்பொழுதும் போல காலையில் எழுந்து குளித்து முடித்து பிரம்ம முகூர்த்த நேரத்தில் முதலில் பூஜையறையில் ஒரு விளக்கு ஏற்றி விடுங்கள். இது பிரதானமான ஒரு வழிப்பாட்டு முறை. அன்றைய தினத்தில் நீங்கள் மகாலட்சுமி தாயாரை எப்படி வழிபாடு செய்வீர்களோ அதை எல்லாம் முறைப்படி செய்து விடுங்கள்.

- Advertisement -

அடுத்து வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஹோரை வரும். இது காலை ஆறிலிருந்து ஏழு, மதியம் ஒன்றிலிருந்து இரண்டு, இரவு எட்டிலிருந்து ஓன்பது இந்த மூன்று நேரத்தில் ஏதாவது ஒரு நேரத்தில் நீங்கள் இந்த பொருளை கடைக்கு சென்று வாங்க வேண்டும். அது வேறொன்றும் இல்லை நம் சமையலுக்கு பயன்படுத்தும் மொச்சை பயிறு தான். இந்தப் பொருளை வெள்ளிக்கிழமை தோறும் தவறாமல் வாங்க வேண்டும்.

இதை சமைப்பது எந்த நாளில் வேண்டுமானாலும் சமைக்கலாம். ஆனால் வெள்ளிக்கிழமையில் இந்த மூன்று நேரத்தில் ஏதாவது ஒரு நேரத்தில் இந்த மொச்சை பயிரை வாங்குவதை வழக்கமாக கொள்ளுங்கள். பொதுவாக இந்த நேரங்களில் கல் உப்பு வாங்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். அதே போல பண ஈர்ப்பை அதிகரித்து நம்முடைய அந்தஸ்து உயர்த்தக் கூடிய தன்மை இந்த மொச்சை பயிருக்கு உண்டு.

நம் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு கிரகத்தின்ஆதிக்கம் உண்டு. அந்த வகையில் மொச்சைக்கு சுக்கிரனுடைய ஆதிக்கம் அதிகம் உண்டு. அதை மகாலட்சுமி தாயாருக்கு உகந்த அந்த நாளில் சுக்கிரன் ஆதிக்கம் உடைய அந்த ஹோரையில் வாங்கும் போது நிச்சயம் நீங்கள் எதிர்பார்த்த செல்வந்தரான வாழ்க்கை வாழ முடியும். தாந்த்ரீக பரிகாரங்கள் அனைத்தும் மிகவும் எளிமையானதாக இருக்கும் ஆனால் பலன் அதிகமாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: வீட்டின் இறை சக்தியை அதிகரிக்க

இந்த பரிகாரத்துடன் உங்கள் முயற்சியும் கைவிடாமல் தொடர்ந்து செய்யும் போது நீங்கள் எதிர்பார்த்த வாழ்வு எதிர்பார்த்ததை விட சீக்கிரத்தில் கிடைக்கக் கூடிய அனுகூலத்தை பெறலாம். இந்த தகவலில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நீங்களும் பின்பற்றி பலனடையலாம் என்ற கருத்துடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -