சிவன் அருள் பெற வழிபாடு

sivan vilavam maan
- Advertisement -

சிவபெருமானை வணங்குவதற்கும் அவரின் அருளை பெறுவதற்குமே அவருடைய ஆசி இருந்தால் தான் முடியும். அதனால் தான் அவன் அருளாலே அவன் தாள் பணிந்து என்றதொரு அற்புதமான வாசகத்தை மூலம் அறிய முடிகிறது. அப்பேர்ப்பட்ட பேரொருளாகிய சிவபெருமானின் அருளை நம்முடைய இல்லத்திற்கு கொண்டுவர அவரின் அருள் பெற்ற இந்த ஒரு பொருள் இருந்தால் போதும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது என்ன பொருள் எப்படி கொண்டு வர வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மிகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

சிவ அருளைப் பெற செய்ய வேண்டியது

சிவ அருளைப் பெற வேண்டும் எனில் அது அத்தனை சுலபமான காரியம் கிடையாது. சிந்தையிலும் செயலிலும் சிவனையே நினைத்து ஒவ்வொரு காரியத்தையும் செய்ய வேண்டும். அப்பேர்ப்பட்ட சிவபெருமானின் அருளை பெற எளிமையான ஒரு வழியை தான் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை நாம் பிரதோஷ நாளில் தான் செய்ய வேண்டும். அது தேய்பிறை பிரதோஷம் வளர்பிறை பிரதோஷம் என எந்த நாளில் வேண்டுமானாலும் இருக்கலாம். இதற்கு பிரதோஷ காலமான நான்கு முப்பதிலிருந்து ஆறு முப்பது வரையிலான நேரத்தில் வன்னி மரம் இருக்கும் சிவாலயத்திற்கு செல்ல வேண்டும். வேறு கோவிலில் இந்த வழிபாட்டை செய்ய முடியாது.

அங்கு சென்று வன்னி மரத்தை தொட்டு வணங்கி மூன்று முறை மரத்தை வளம் வர வேண்டும் அதன் பிறகு மறுபடியும் வன்னி மரத்தை தொட்டு வணங்கிய பிறகு அந்த மரத்தின் அடியில் இருந்து ஒரு கைப்பிடி அளவு மண்ணை வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். இப்போது இந்த மண்ணை ஒரு தட்டில் வைத்து உங்கள் பூஜை அறையில் வைத்து உங்களுக்கு தெரிந்த ஏதேனும் ஒரு சிவ மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும்.

- Advertisement -

எந்த மந்திரமும் தெரியாது என்பவர்கள் ஓம் சிவாய நமக என்று இந்த மந்திரத்தை 108 முறை சொன்னால் கூட போதும் அதன் பிறகு இந்த மண்ணை உங்கள் வீட்டில் நிலை வாசலுக்கு வெளியே தூவி விடுங்கள் போதும். இதை அனைத்தையும் பிரதோஷ நேரத்தில் தான் செய்ய வேண்டும். பிரதோஷ நேரத்தில் செய்யும் பொழுது தான் இந்த வழிபாட்டிற்கு அதிக பலம் உண்டு.

பிரதோஷ காலத்தில் இறையருள் நிறைந்திருக்கும் ஆலயத்திலிருந்து அவரின் அருள் பெற்ற வன்னி மரத்தின் கைப்பிடி மண் உங்கள் வீட்டிற்குள் வரும் பொழுது இறையருளை உங்கள் வீட்டிற்குள் வந்தது போல ஆகும். அந்த மண் உங்கள் இல்லத்தை சுற்றி பரவும் பொழுது உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் எந்த தீய சக்தியும் எதுவும் நெருங்காமல் சிவபெருமானே முன்னின்று காப்பார் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: வீட்டில் பண வரவு அதிகரிக்க

சிவ அருளை பெறுவதற்கான எளிய இந்த வழிபாட்டு முறையில் நம்பிக்கை இருக்குமேயானால் நம்பிக்கையுடன் செய்து பலன் பெறலாம். இந்த வழிபாட்டையும் அடிக்கடி செய்ய வேண்டியதில்லை வருடத்திற்கு ஒரே ஒரு பிரதோஷ நாளில் செய்தாலும் கூட போதும். வருடம் எல்லாம் சிவபெருமான் உங்களுக்கு காவலாய் இருப்பார்.

- Advertisement -