தீய சக்திகள் விலக சக்திவாய்ந்த பரிகாரம்

venkadugu kunkumam
- Advertisement -

இந்த உலகத்தில் நன்மைகள் நடைபெறுவதற்கு நல்ல சக்திகள் இருக்கிறது என்பதை போலவே தீமைகள் நடைபெறுவதற்கு தீய சக்திகளும் இருக்கிறது என்பது முற்றிலும் உண்மையே. இதை அனைவரும் ஏதாவது ஒரு ரூபத்திலாவது தங்கள் வாழ்க்கையில் உணர்ந்திருப்பார்கள். தீய சக்திகள் என்று பார்க்கும் பொழுது அதில் பல வகைகள் இருக்கின்றன. அது எந்த ரீதியான சக்தியாக இருந்தாலும் அந்த சக்தியால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் குங்குமம் மற்றும் வெண் கடுகை வைத்து எப்படி பரிகாரம் செய்து அதிலிருந்து வெளிவர முடியும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வீட்டிற்குள் தீய சக்திகள் ஏதாவது ஒரு ரூபத்தில் இருந்தால் அந்த வீட்டில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படாது. அது மட்டுமல்லாமல் வீட்டில் என்றும் சண்டை சச்சரவுகள், தேவையில்லாத பிரச்சினைகள், பணவிரயம், மருத்துவ செலவு என்று பல வகைகளில் ஆட்டிப்படைக்கும். இதை வீட்டை விட்டு விரட்டி அடித்தால் தான் தெய்வ சக்தியின் அருளால் நமக்கு நன்மைகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். இதை விரட்டி அடிப்பதற்கு பல பரிகாரங்களும் வழிமுறைகளும் இருக்கின்றன. அவற்றில் ஒரு எளிமையான வழிமுறையை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை தீய சக்திகளின் பாதிப்பால் பெரிதும் கஷ்டப்படுபவர்கள் மாதத்திற்கு ஒருமுறை செய்தால் போதும். பாதிப்புகள் குறைய ஆரம்பித்த பிறகு மூன்று மாதத்திற்கு ஒரு முறை விடாமல் செய்து வரவேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதற்கு நாம் நிறைந்த அமாவாசையை பயன்படுத்தி கொள்ளலாம் அல்லது ஞாயிற்றுக்கிழமையை பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பூக்களே போட்டு வைக்க உருளி பயன்படுத்துவோம் அல்லவா? அந்த அளவிற்கு பாத்திரத்தை எடுத்து அதில் சுத்தமான தண்ணீரை நிரப்பிக் கொள்ளுங்கள்.

அந்த தண்ணீரில் ஒரு கைப்பிடி அளவு குங்குமத்தை சேர்த்து கலக்க வேண்டும். பிறகு ஒரு கைப்பிடி அளவு வெண்கடுகை போட்டு விட வேண்டும். அதற்கு மேல் ஒரு வாழை இலையை வைக்க வேண்டும். அந்த வாழை இலைக்கு மேல் ஒரு கற்பூரத்தை வைத்து தீபம் ஏற்ற வேண்டும். அந்த கற்பூரம் எரியும் பொழுது வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து நபர்களின் பெயர்களையும் நட்சத்திரங்களையும் கூறி பூக்களால் அர்ச்சனை செய்து வீட்டில் இருக்கக் கூடிய அனைத்து விதமான தீய சக்திகளும் விலக வேண்டும் என்று துர்க்கை அம்மனை மனதார வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

பெரிய கற்பூரம் ஆக வைத்து ஏற்றினால் வீடு முழுவதும் இந்த கற்பூரத்தை காட்டலாம். சிறு குழந்தைகள் இருக்கும் வீட்டில் அந்த குழந்தைகளுக்கு அந்த பாத்திரத்தோடு எடுத்து ஆராத்தி காட்டுவது போல் காட்டலாம். இவ்வாறு காட்டிவிட்டு அந்த உருளியில் இருக்கக்கூடிய தண்ணீரை இரண்டு சொட்டு நிலை வாசலில் விட்டுவிட்டு இதை அப்படியே கொண்டு போய் ஓடுகின்ற நீரிலோ அல்லது தெரு முக்கிலோ ஊற்றிவிட்டு திரும்பி வந்து அந்த பாத்திரம், கை, கால், முகம் அனைத்தையும் சுத்தமாக கழுவி விட்டு வீட்டிற்குள் வரவேண்டும். இப்படி செய்வதன் மூலம் ஏவல் பில்லி சூனியம் துர்சக்திகள் கெட்ட ஆவிகள் என்று எப்பேர்பட்ட தீய சக்திகளாக இருந்தாலும் அந்த சக்திகள் வீட்டை விட்டு விலகி ஓடும்.

இதையும் படிக்கலாமே: ருத்ராட்சத்திற்கு சக்தியை கொடுப்பது எப்படி?

மிகவும் அதிசக்தி வாய்ந்த இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் நம்முடைய வீட்டில் நாம் செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் தீய சக்திகளின் ஆதிக்கத்திலிருந்து விடுபட முடியும்.

- Advertisement -