ருத்ராட்சத்திற்கு சக்தியை கொடுப்பது எப்படி?

sivan6
- Advertisement -

சிவபெருமானின் அம்சம் ருத்ராட்சம். ருத்ராட்சம் அணிந்து கொண்டிருப்பவர்கள் அனைவருமே சிவன் அடியார்கள் தான். நீங்கள் உங்களுடைய கழுத்தில் ருத்ராட்சம் அணிந்திருப்பவர்களாக இருந்தால், அந்த ருத்ராட்சத்திற்கு சரியான முறையில் சக்தியூட்ட இந்த வழிபாட்டு முறையை கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

எந்த ஒரு ஆன்மீகம் சார்ந்த பொருளாக இருந்தாலும் அதற்கு 48 நாட்களுக்கு ஒரு முறை நாம் சரியான முறையில் சக்தி ஏற்ற வேண்டும். இல்லையென்றால் அந்த பொருளுக்கு இருக்கும் நேர்மறை ஆற்றல் குறைந்து விடும் என்று சொல்லப்பட்டுள்ளது. அந்த வரிசையில் உங்கள் கழுத்தில் கட்டி இருக்கும் ருத்ராட்சத்திற்கு சிவபெருமானின் அருளை பெற்று தர, சிவ உரு ஏற்ற செய்ய வேண்டிய ஆன்மீகம் சார்ந்த ஒரு வழிபாட்டு முறையை தான் இன்று நாம் பார்க்க போகின்றோம்.

- Advertisement -

ருத்ராட்சத்திற்கு சக்தி ஏற்றும் முறை

உங்களுக்கு நேரம் இருக்கும் போது வீட்டில் இந்த ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். எந்த நாள், எந்த நேரம், எந்தக் கிழந்மையாக இருந்தாலும் சரி, இந்த வழிபாட்டிற்கு எந்த ஒரு கட்டுப்பாடும் கிடையாது. பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு குல தெய்வத்தை நினைத்து பஞ்சபாத்திரத்தில் கொஞ்சமாக சுத்தமான தண்ணீர், கொஞ்சமாக பசும்பால், நெய், தேன், தண்ணீர், வில்வ இலை ஒன்று போட்டுக் கொள்ளுங்கள்.

இந்த தீர்த்தத்தில் உங்கள் கழுத்தில் கட்டி வைத்திருக்கும் ருத்ராட்சத்தை போடுங்கள். இந்த பஞ்சபாத்திர தண்ணீரை அப்படியே உங்கள் உள்ளங்கையில் எடுத்துக் கொள்ளுங்கள். பஞ்ச பாத்திரத்தின் வாய்ப்பகுதியில், வலது உள்ளங்கையை மேலே வைத்து மூடிக்கொண்டு ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். சிவபெருமானை மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.

- Advertisement -

பிறகு ஒரு நாள் முழுவதும் அந்த ருத்ராட்சம் தண்ணீரில் பூஜை அறையிலேயே இருக்கட்டும். அடுத்த நாள் எடுத்து அதை உங்களுடைய கழுத்தில் கட்டிக் கொள்ளலாம். ரொம்ப நாளாக கழுத்தில் கட்டி இருக்கும் பழைய ருத்ராட்சத்திற்கும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். இப்பதான் புதுசா ருத்ராட்சம் வாங்கி இருக்கீங்க அப்படி என்றாலும் அதற்கு மேல் சொன்ன முறைப்படி ஒரு சக்தி ஏற்றிவிட்டு அதன் பிறகு கழுத்தில் கட்டிக் கொண்டாலும் உங்களுக்கு அந்த சிவபெருமானின் அருள் முழுசாக கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: தீராத நோய் தீர முருகர் மந்திரம்

48 நாட்களுக்கு ஒரு முறை கழுத்தில் இருக்கும் ருத்ராட்சத்தை மேல் சொன்ன முறைப்படி இப்படி சிவபெருமானின் நாமத்தைச் சொல்லி உரு ஏற்றி கழுத்தில் கட்டிக் கொண்டால், அந்த சிவபெருமான் எந்த நேரமும் உங்களுக்கு துணையாக உங்களுடனே இருப்பார் என்பதும் நம்பிக்கை. ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் எம்பெருமானை வேண்டி இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -