தீய சக்திகள் விலக தாந்த்ரீக பரிகாரம்

lemon thirisoolam
- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையை புரட்டிப் போடும் அளவிற்கு சக்தி வாய்ந்ததாக திகழ்வதுதான் எதிர்மறை ஆற்றல்கள். இந்த எதிர்மறை ஆற்றல்கள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மிகவும் முதன்மையாக திகழக்கூடியது நம்முடைய முன்னேற்றம் பிடிக்காத நபர்கள் நமக்கு செய்யக்கூடிய சில தீய சக்திகளே. இந்த தீய சக்திகளால் வீட்டில் எந்த வித நிம்மதியும் இல்லாமல் சண்டை சச்சரவுகளுடன் முன்னேற்றம் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போய்விடும். அப்படிப்பட்ட வீட்டில் எலுமிச்சம் பழத்தை வைத்து எந்த முறையில் பரிகாரம் செய்ய தீய சக்திகள் அனைத்தும் விலகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒரு வீட்டில் கெட்ட வாடை அடிக்கிறது என்றாலும் என்னதான் வீட்டை சுத்தம் செய்தாலும் சுத்தமற்ற நிலை ஏற்பட்டு கொண்டே இருக்கிறது என்றாலும் அந்த வீட்டில் தீய சக்திகள் இருக்கிறது என்று அர்த்தம். கண் திருஷ்டியும் ஒரு வகையில் தீய சக்தி தான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இப்படி தீய சக்திகள் இருக்கிறது என்று நமக்கு ஒரு ஐயம் ஏற்பட்டு விட்டால் இந்த பரிகாரத்தை நாம் செய்துவிடலாம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை அமாவாசை அல்லது பௌர்ணமி நாட்கள் தான் செய்ய வேண்டும். அதுவும் சூரிய அஸ்தமனம் ஆன பிறகு தான் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்திற்கு புள்ளிகள் இல்லாத நல்ல எலுமிச்சம் பழமாக பார்த்து 27 எலுமிச்சம் பழங்களை வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த எலுமிச்சம் பழங்களை முதலில் சுத்தமான தண்ணீரை ஊற்றி கழுவி கொள்ளுங்கள். பிறகு ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து அந்த பாத்திரத்தில் இந்த எலுமிச்சம் பழத்தை வைக்க வேண்டும்.

பிறகு இதில் அரை கிலோ விபூதியை கொட்ட வேண்டும். இதனுடன் சிறிது பன்னீரை தெளித்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். அதிகமாக பன்னீரை ஊற்ற வேண்டாம். எலுமிச்சம் பழத்துடன் விபூதி சேரும் அளவிற்கு பன்னீர் ஊற்றி குழைத்து சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த எலுமிச்சம் பழம் இருக்கும் பாத்திரத்தை வீட்டின் மையப் பகுதியில் வைக்க வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்திகள் அனைத்தும் விலக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த எலுமிச்சம் பழம் வீட்டின் மையப் பகுதியில் குறைந்தது அரை மணி நேரமாவது இருக்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து இந்த எலுமிச்சம் பழங்களை அப்படியே எடுத்துக்கொண்டு அருகில் இருக்கக்கூடிய திரிசூலம் இருக்கும் அம்மன் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். பிறகு அந்த அம்மனிடம் மனதார வேண்டிக்கொண்டு இந்த எலுமிச்சம் பழங்கள் அனைத்தையும் திரிசூலத்தில் ஒன்றன்பின் ஒன்றாக குத்த வேண்டும்.

வீட்டிற்கு திரும்பும் பொழுது கை கால்களை சுத்தமாக கழுவி விட்டு வீட்டிற்குள் வரவேண்டும். வீட்டிற்கு வந்த பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை பிடித்து ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை அதில் கரைத்து வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். இந்த முறையில் நாம் செய்வதன் மூலம் நம் வீட்டில் இருக்கக் கூடிய தீய சக்திகளும் எதிர்மறை ஆற்றல்களும் தோஷங்களும் நீங்கி நிம்மதியான வாழ்க்கை அமையும்.

இதையும் படிக்கலாமே: கடன் அடைய கொடுத்த பணம் திரும்ப வர தீப பரிகாரம்

தெய்வீக சக்தி மிகுந்த எலுமிச்சம் பழத்தை இந்த முறையில் நம்பிக்கையுடன் பரிகாரம் செய்ய வீட்டில் இருக்கக் கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கும்.

- Advertisement -