கடன் அடைய கொடுத்த பணம் திரும்ப வர தீப பரிகாரம்

kadan theera
- Advertisement -

இன்று ஒவ்வொருவர் வாழ்க்கையையும் பாடாய்படுத்திக் கொண்டிருப்பது இந்த கடன் தொல்லை தான். கடன் வாங்கி விட்டு தினம் தினம் துன்பப்படுபவர்கள் கோடான கோடி பேர். இப்படி கடன் வாங்கி துன்பப்படுபவர்கள் ஒரு புறம் என்றால், அவசர தேவைக்கு பணத்தை கொடுத்து விட்டு அதை திரும்ப வாங்க முடியாமல் தவிப்பவர்கள் இன்னொரு புறம்.

இந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் காரணம் பணம் தான். பணம் கைக்கு சரியான நேரத்தில் சரியான முறையில் வந்து விட்டால் இந்த பிரச்சனைகள் தீர்ந்து விடும். அப்படி நம்முடைய கடன்கள் அடையவும் கொடுத்த பணம் வீடு தேடி வரவும் எளிய ஒரு தீப பரிகார முறை உண்டு. அது என்ன எப்படி செய்ய வேண்டும் என்பதை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

கடன் அடையவும் கொடுத்த பணம் திரும்ப வரவும் ஏற்ற வேண்டிய தீபம்

இந்த தீப பரிகாரத்தை நீங்கள் எந்த நாளில் வேண்டுமானாலும் துவங்கலாம். அதே போல் இந்த காலை மாலை என எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஏற்றலாம். ஏனெனில் ஒருவருக்கு பணம் தொடர்பான பிரச்சனை எப்போது வரும் என்று சொல்ல முடியாது. பிரச்சனை வரும் நேரத்தில் உடனே இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

பரிகாரத்திற்கு நாம் கடுகு எண்ணெய் தான் பயன்படுத்த வேண்டும். வேறு எந்த எண்ணையும் பயன்படுத்தக் கூடாது. ஒரு கண்ணாடி பாட்டிலில் 300 கிராம் அளவு கடுகு எண்ணெய் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு சோழியை போட வேண்டும். இந்த சோழியானது மகாலட்சுமி தாயார் வாசம் செய்யும் பொருளாக கருதப்படுகிறது. அதே போல் தான் கடுகு எண்ணையும்.

- Advertisement -

மேலும் இதில் கொஞ்சமாக கருப்பு எள்ளையும் சேர்க்க வேண்டும். இந்த எள்ளுக்கும் அளவு கிடையாது சிறிதளவு கூட சேர்த்தால் போதும். இவை மூன்றையும் நீங்கள் முதல் நாள் இரவே ஊற வைத்து விட வேண்டும். மறுநாள் ஒரு அகல் விளக்கை எடுத்து சுத்தம் செய்து அதற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து இரண்டு திதிகளை ஒன்றாக சேர்த்து ஒரே திதியாக போட்டுக் கொள்ளுங்கள்.

அதில் நீங்கள் தயார் செய்து வைத்த எண்ணெயை ஊற்ற வேண்டும். இந்த தீபத்தை பூஜை அறையில் ஏற்றலாம் தவறில்லை. பூஜை அறையில் ஏற்ற முடியாது என்பவர்கள் உங்கள் வீட்டில் எங்கே ஏற்ற முடியுமோ, அந்த இடத்தில் வைத்து ஏற்றி கொள்ளலாம். ஆனால் எங்கு ஏற்றினாலும் இந்த தீபமானது தொடர்ந்து 20 நிமிடம் எரிய வேண்டும்.

- Advertisement -

20 நிமிடத்திற்கு மேல் இந்த தீபம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எறியலாம். ஆனால் அதற்குள்ளாக தீபம் அனையக் கூடாது.இப்படியாக இந்த தீபத்தை 90 நாட்கள் தொடர்ந்து ஏற்ற வேண்டும். அப்படி ஏற்றும் போது உங்களுக்கு வர வேண்டிய பணமும் அல்லது நீங்கள் கொடுத்த பணமோ திரும்ப கிடைக்க வேண்டுமென்று மனதார வேண்டிக் கொண்டு ஏற்றுங்கள்.

இதையும் படிக்கலாமே: பொன் பொருள் சேர அம்பாள் வழிபாடு

இந்த பரிகாரம் நிச்சயம் அதற்கான வாய்ப்புகள் உருவாகும் என்று நம்பப்படுகிறது. இந்த பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து இழந்த பணம், வாங்கிய கடன் இந்த இரண்டு பிரச்சனைகளில் இருந்து எளிதில் வெளி வந்து நிம்மதியாக வாருங்கள்.

- Advertisement -