எந்த வித துர்சக்திகளையும், பகைவர்களையும் நம்மை நெருங்க விடாமல் காத்து கொள்ள சரபேஸ்வரர் நினைத்து எளிமையான இந்த வழிபாட்டை வீட்டிலே செய்தாலே போதும் கெட்ட சக்திகள் நம் அருகில் வரவே நடுங்கும்.

- Advertisement -

ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான சக்தி இருக்கும். இந்த தெய்வத்தை வணங்கினால் நமக்கு இந்த பிரச்சினையில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று நாம் வணங்குகிறோம். அந்த வகையில் ஆன்மிகம் குறித்த இந்த பதிவில் நாம் எந்த தெய்வத்தை வணங்குவதன் மூலம் நம்முடைய பிரச்சனைகள் அனைத்தும் விலகி நன்மையுடன் வாழலாம் என்று தான் பார்க்கப் போகிறோம்.

கெட்டதை அழிக்க அவதாரம் எடுத்த உக்கிர நரசிம்ம மூர்த்தியை லக்ஷ்மி நரசிம்ம மூர்த்தியாக மாற்றுவதற்காக சிவப்பெருமான் எடுத்த அவதாரமே சரபேஸ்வரர் அவதாரம். இந்த சரபேஸ்வரர் குறிப்பிட்ட சில ஆலயங்களில் மட்டுமே வீற்றிருக்கிறார். இருப்பினும் அவரை நம் உள் மனதார நினைத்து வழிபடுவதால் நமக்கு அவர் பல நன்மைகளை வழங்குவார்.

- Advertisement -

சரபேஸ்வரர் வழிபாடு:
மிருகத்தின் தலையையும் பறவையின் இறக்கையையும் மனிதனின் உடலையும் சிங்கத்தின் நான்கு கால்களையும் கொண்ட விசித்திரமான உருவத்தில் இருக்கக் கூடியவரே சரபேஸ்வரர். இவரை நாம் ஞாயிற்றுக்கிழமை ராகு காலமான மாலை 4.30 முதல் 6.00 மணிக்குள் வழிபட வேண்டும். இந்த சரபேஸ்வரர் நரசிம்மரின் கோபத்தை தணிப்பதற்காக பிரதோஷ வேளையில் அவதரித்ததால் பிரதோஷ நாளில் பிரதோஷ நேரத்தில் அவரை வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியது. மேலும் பௌர்ணமி, அமாவாசை, மாதப் பிறப்பு போன்ற நாட்களிலும் இவரை வழிபடலாம்.இவருக்கு நாம் நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், வேப்ப எண்ணெய் கலந்த தீபத்தை ஏற்ற வேண்டும். வடை மாலை, பாசிப்பருப்பு பாயாசம், கற்கண்டு, பேரிச்சை பழம் போன்றவற்றை கலந்து நெய்வேத்தியமாக படைக்க வேண்டும்.

“ஹராய பீமாய ஹரிப்ரியாய
பவாய சாந்தாய பராத்பராய
ம்ருடாய ருத்ராய த்ரிலோசனாய
நமோஸ்து துப்யம் சரபேச்வராய”

- Advertisement -

என்ற மந்திரத்தை ஒரு முறையோ அல்லது 21 முறையோ கூற வேண்டும். இதைக் கூற இயலாதவர்கள் “ஓம் சரபேஸ்வராய நமஹ” என்று 108 முறை கூறலாம். இதுவே இவருக்கு உரிய வழிபாட்டு முறை ஆகும். இவரின் புகைப்படத்தை வீட்டு பூஜை அறையில் வைத்து ராகு காலத்தில் இந்த முறைப்படி நாம் வழிபாடு மேற்கொள்ளலாம்.

சரபேஸ்வரரை நாம் வழிபடுவதன் மூலம் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய சத்ருக்கள் (பகைவர்கள்) அனைவரும் விலகுவார்கள். மனதில் உள்ள பயம் அகழும். லட்சுமி நரசிம்மராக மாற்றியதால் மகாலட்சுமியின் கடாட்சம் கிடைக்கும். தடைகளும், தடங்கல்களும் விலகும். திருமண தடை அகலும். குழந்தை பேரு உண்டாகும். குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவர். தீராத நோய்களும் தீரும், கடன் பிரச்சனையில் இருந்து விடுபடுவர்.

இதையும் படிக்கலாமே: இந்த தூபம் போடும் வீட்டில் சகலமும் வசியமாகி நீங்கள் வேண்டுவது எல்லாம் தடையில்லாமல் உங்களை வந்து சேரும். சகல ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்கும் தெய்வீக தூபம்.

சரபேஸ்வரரை கண்மூடி ஒரு நொடியாவது தியானிப்பதன் மூலம் மேற்சொன்ன அனைத்து தடங்கல்களும் நீங்கி நம் வாழ்க்கையில் நன்மைகள் ஏற்பட்டு நம் தலைவிதியையே மாற்றி தன் கண் போல நம்மை காத்து ரட்சிப்பார்.

- Advertisement -