நாளை மாஹாளய அமாவாசை. பித்ரு தோஷம் நீங்க 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய பரிகாரம்.

amavasai
- Advertisement -

பித்ரு தோஷம். இது ஒரு குடும்பத்திற்கு தீராத துன்பத்தைக் கொடுக்கக்கூடிய தோஷம். ராகு தோஷம் கேது தோஷம், நவக்கிரகங்களால் தோஷம் என்றால் பரிகாரங்கள் செய்து அதிலிருந்து வரக்கூடிய துன்பத்திலிருந்து எளிமையாக தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் பித்ருக்களின் சாபம் ஒரு குடும்பத்திற்கு இருந்தால், அந்த குடும்பம் மட்டுமல்ல, அடுத்தடுத்த தலைமுறைகள் கூட இந்த தோஷத்தால் பெரிய அளவில் பாதிப்பைகளை எதிர்கொள்ளும்.

உதாரணத்திற்கு சில குடும்பங்களில் திருமணம் ஆகாமல் இருக்கும். திருமணம் நடந்தால் பிள்ளை பாக்கியம் இருக்காது. பிள்ளை பாக்கியம் இருந்தால் அந்த குடும்பம் சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழ முடியாது. தலைகுனிவை ஏற்படுத்தும். அவமானங்களை அந்த குடும்பங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இப்படி பல கஷ்டங்கள் அந்த குடும்பத்தை துரத்தி துரத்தி அடிக்கும்.

- Advertisement -

நீங்கள் உங்களுடைய முன்னோர்கள் மறைந்த திதியை மறந்து இருந்தாலும் சரி, அவர்களுக்கு வருடாந்திரம் செய்யக்கூடிய திதி சிரார்த்த காரியங்களை செய்யாமல் விட்டிருந்தாலும் சரி, நாளைய தினம் மகாளயா அமாவாசை தினத்தில் அவர்களை நினைத்து கொஞ்சமாக எள்ளும் தண்ணீரையும் இறைத்து, தர்ப்பணம் செய்து கொள்வது ரொம்ப ரொம்ப நல்லது.

பித்ருக்களின் மனது குளிர்ந்து உங்களுக்கு முன்னோர்களுடைய ஆசிர்வாதம் முழுமையாக கிடைத்து விடும். இந்த முன்னோர்கள் வழிபாட்டை ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரி செய்வாங்க. வசதி இருப்பவர்கள் பெரிய புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்வார்கள். வசதி இல்லாதவர்கள் ஆத்தங்கரை குளக்கரையில் செய்வார்கள். சில பேர் வீட்டிலேயே இந்த தர்ப்பணம் செய்வார்கள். எது எப்படியாக இருந்தாலும் சரி, தர்ப்பணம் கொடுக்கும் இடம் முக்கியமல்ல.

- Advertisement -

மனதார நீங்கள் உங்கள் முன்னோர்களை நினைத்த அந்த வழிபாட்டை மேற்கொள்வீர்கள் அல்லவா அதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம். சரி, பித்ரு தோஷத்திலிருந்து விடுபட நாளைய தினம் மஹாளய அமாவாசை அன்று 12 ராசிக்காரர்களும் எந்தெந்த பரிகாரங்களை செய்தால் முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெற முடியும் என்பதை பற்றிய தகவலையும் தொடர்ந்து இந்த ஆன்மீகம் பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் நாளைய தினம் ஏழைகளுக்கு உங்கள் கைகளால் அன்னதானம் செய்ய வேண்டும். உண்மையாகவே பசியோடு இருப்பவர்களுக்கு நாளை அன்னதானம் செய்தால் உங்கள் குடும்பம் சீரும் சிறப்பும் பெறும். பித்ரு தோஷம் நீங்கும்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு நாளைய தினம் ஏதாவது கோவில்களுக்கு உங்களால் முடிந்த பொருட்களை வாங்கி தானம் கொடுக்கலாம். குறிப்பாக உங்கள் வீட்டின் அருகில் ஏதாவது கோவில் கும்பாபிஷேகம் நடந்தால் அந்த கோவிலுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். ஒரு ரூபாய் முதல் எங்களால் எவ்வளவு முடியுமோ அந்த பணத்தை கொடுத்து உதவி செய்யலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் நாளைய தினம் குறைந்தபட்சம் ஐந்து பேருக்காவது உங்கள் கையால் தயிர் சாதம் வாங்கி தானமாக கொடுக்கலாம். அதிலும் வயதான முதியவர்களுக்கு, தயிர்சாதம் கொடுத்தால் பித்ரு தோஷம் நீங்கும்.

கடகம்

பித்ரு தோஷம் நீங்க கடக ராசிக்காரர்கள் நாளைய தினம் யாராவது வயதானவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும். ஒரு நாள், குழந்தைகள் ஆசிரமம், முதியோர் ஆசிரமம், இது போன்ற இடங்களுக்கு சென்று அங்கு இருப்பவர்களுக்கு பணிவிடை செய்தால் ரொம்ப ரொம்ப நல்லது. அதே சமயம் நீங்களும் உங்கள் கையால் அன்னதானம் செய்யுங்கள் பித்ரு தோஷம் நீங்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் நாளைய தினம் கொடைதானம் செய்யவும். வெயிலில் ரோட்டோரங்களில் கடை வைத்து நடத்துவார்கள். அவர்களால் கொடை வாங்க முடியாத சூழ்நிலை இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு நல்ல பெரிய கொடையாக வாங்கி தானம் கொடுத்தால் ரொம்ப ரொம்ப நல்லது. பழக்கடை பூக்கடை இப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் உதவி செய்யலாம். சில பேர் வெயிலில் அமர்ந்து செருப்பு தைப்பாங்க. அவர்களுக்கு கூட நீங்கள் தானம் செய்வது ரொம்ப சிறப்பு.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் பித்ரு தோஷம் நீங்க நாளைய தினம் வஸ்திர தானம் செய்ய வேண்டும். தாய் தந்தை இல்லாமல் வாழக்கூடிய குழந்தைகள் எவ்வளவோ பேர் இந்த பூலோகத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு உங்களால் முடிந்த புது துணியை வாங்கி நாளைய தினம் தானம் கொடுங்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் நாளைய தினம் அன்னதானம் செய்வது பித்ரு தோஷத்தில் இருந்து விடுபட ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். இதோடு சேர்த்து கஷ்டப்படும் ஏழை குழந்தைகளுக்கு உங்களால் முடிந்த படிப்புக்கு உதவி செய்யுங்கள். அவர்களுக்கு நோட்டுப் புத்தகம் வாங்கிக் கொடுப்பது அல்லது யூனிபார்ம் வாங்கிக் கொடுப்பது அல்லது செருப்பு வாங்கி கொடுப்பது புத்தகப் பை வாங்கிக் கொடுப்பது போன்ற தானங்களை நாளை செய்வது சிறப்பான பலனை கொடுக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் நாளை புளி சாதம் செய்து உங்கள் கைகளால் அன்னதானம் கொடுக்க வேண்டும். இது ஒரு சேர்த்து வயதானவர்களுக்கு வஸ்திர தானம் செய்வது நல்ல பலனை கொடுக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் பித்ரு தோஷம் நீங்க நவதானியங்கள் அரிசி பருப்பு வகைகள் இதில் ஏதாவது ஒன்றை வாங்கி ஆசிரமங்களுக்கு நாளைய தினம் உங்கள் கைகளால் தானம் கொடுங்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று நாளை உங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும். அதோடு அங்கு வெளியில் யாசகம் கேட்பவர்களுக்கு உங்கள் கைகளால் செய்த தயிர் சாதத்தை தானம் கொடுப்பது சிறப்பான பலனை கொடுக்கும். பித்ரு தோஷத்தை நீக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் நாளைய தினம் வஸ்திர தானம் செய்ய வேண்டும். திருமணம் ஆகாத சின்ன வயதில் இருக்கும் ஏழை குழந்தைகளுக்கு இந்த வஸ்திர தானம் செய்வது சிறப்பான பலனை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: பித்ரு தோஷம் நீங்க நாளை மகாளய அமாவாசை தினத்தில் இந்த ஒரு காரியத்தை மறக்காமல் செய்து விடுங்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் நாளை மறைந்த உங்கள் தாய் தந்தை ஸ்தானத்தில் இருக்கும் இரண்டு வயதான தம்பதி இருக்கு வயிறார சாப்பாடு போட்டு, தாம்பூலம் கொடுத்து, அவர்களுக்கு புதுசாக துணிமணி எடுத்துக் கொடுப்பது சிறப்பான பலனை கொடுக்கும். முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெற்று தரும்.

- Advertisement -