ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த 3 பொருட்களை தலையை சுற்றி போட்டால் தீராத நோய் தீரும். தினம் தினம் மருந்து மாத்திரை சாப்பிட்டே நாட்களை கடத்தி செல்பவர்கள் இதை ஒரு முறை செய்து பாருங்கள்.

sivan
- Advertisement -

ஒரு குடும்பத்தில் எவ்வளவு பெரிய பணக்கஷ்டம் வந்தாலும் அதை சரி செய்ய, அந்த குடும்பத்தில் இருப்பவர்கள் போராடி எப்படியோ அந்த பிரச்சனையில் இருந்து வெளிவந்து விடுவார்கள். ஆனால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ஏதோ ஒரு உடல் உபாதை வந்துவிட்டது. தீராத நோய் வந்துவிட்டது. உடம்பு சரியில்லை என்றால் அந்த குடும்பமே ஆட்டம் கண்டு போய்விடும். என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியாமல் திணறி போவார்கள். இந்த அனுபவம் நம்மில் பல பேருக்கு இருக்கிறது. இன்றும் நம்முடைய வீடுகளில் வரக்கூடிய வருமானம் மருத்துவ செலவுக்கே வீண்விரயமாக கூடிய சூழ்நிலை கூட இருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் எல்லாம் பின் சொல்லக் கூடிய எளிமையான ஆன்மீகம் சொல்லும் இந்த பரிகாரங்களை பின்பற்றி பாருங்கள்‌. தீராத நோய் தீருவதற்கு இந்த பரிகாரங்கள் நிச்சயமாக ஏதாவது ஒரு வகையில் நன்மையை செய்யும்.

தீராத நோய் தீர எளிமையான சிவன் பரிகாரம்:
நீங்க நீண்ட நாட்களாக ஒரு தீராத வியாதிக்கு மருத்துவரிடம் டிரீட்மென்ட் எடுத்துக் கொள்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். மாதத்தில் ஒரு முறை மருத்துவரை பார்க்க செல்ல வேண்டும் என்றால், அந்த நாள், திருவாதிரை நட்சத்திரம் வரக்கூடிய நாளாக பார்த்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். திருவாதிரை நட்சத்திரத்தன்று மருத்துவரைப் பார்த்துவிட்டு புதுசாக மருந்து மாத்திரை வாங்கி சாப்பிட தொடங்கினால், அந்த நோய்க்கான தீர்வு சீக்கிரமே கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

இப்படி இந்த திருவாதிரை நட்சத்திரத்தன்று சிவபெருமானையும் அல்லது நடராஜரையோ வழிபாடு செய்துவர தீராத நோய் விலகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாதம் தோறும் வரக்கூடிய திருவாதிரை நட்சத்திரத்தன்று மறக்காமல் சிவன் கோவிலுக்கு சென்று அங்கு தரும் விபூதி பிரசாதத்தை நெற்றியில் பூசிக்கொள்ளுங்கள்.

இது மட்டுமல்லாமல் தீராத நோய் வருவதற்கு நம்முடைய கர்ம வினைகள் கூட காரணமாக இருக்கலாம். நம்முடைய முன்னோர்கள் விட்ட சாபம் கூட காரணமாக இருக்கலாம். இதிலிருந்து வெளிப்பட ஒரு தாந்திரீக பரிகாரமும் உள்ளது. இதை நீங்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு மேல் செய்ய வேண்டும். யார் தொடர்ந்து மருந்து மாத்திரை சாப்பிட்டு வருகிறார்களோ அவர்களுக்கு இந்த பரிகாரம் செய்யப்பட வேண்டும்.

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு மேல் பாதிக்கப்பட்டவரை வரவேற்பறையில் கிழக்கு பார்த்தவாறு அமர வைத்து விடுங்கள். கல் உப்பு 1 கைப்பிடி, மிளகு 11, சீரகம் 1 ஸ்பூன், வைத்து இந்த மூன்று பொருட்களையும் உள்ளங்கைகளில் ஒன்றாக வைத்து பாதிக்கப்பட்டவரின் தலையை மூன்று முறை சுற்றி இதை கொண்டு போய் அப்படியே எரிகின்ற நெருப்பில் போட்டு விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: தாராளமாக வீட்டில் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டுமா? பூஜை அறையில் இந்த 1 பூவை மட்டும் வைத்து வழிபாடு செய்தால், நீங்கள் தவறவிட்ட தங்கத்தை கூட மீண்டும் மீட்டு எடுக்கலாம்.

ஒரு கற்பூரம் கொளுத்தி, ஒரு கொட்டாங்குச்சியில் நெருப்பு பற்ற வைத்து அந்த நெருப்பில் கூட இந்த 3 பொருட்களையும் போடலாம். 11 வார ஞாயிற்றுக்கிழமை இப்படி திருஷ்டி கழித்தால் உங்களை பிடித்த தீராத நோய் விலகும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். எளிமையான இந்த இரண்டு பரிகாரங்களுமே கை மேல் பலன் கொடுக்கக் கூடிய பரிகாரங்கள் தான். நம்பிக்கை உள்ளவர்கள் இதை பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -