உங்கள் பர்ஸில் பணம் தங்க வில்லையா? வீட்டில் பண புழக்கம் அதிகரிக்கவில்லையா? உடனே இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நடக்கும் அதிசயத்தை விரைவாக உணர்ந்து கொள்வீர்கள்

purse-money
- Advertisement -

மாதம் முழுவதும் வேலைக்கு சென்று, அடுத்த மாதம் முதல் தேதி எப்பொழுது வரும் என்று அனைவரும் காத்துக் கொண்டிருப்பார்கள். ஏனென்றால் பெரும்பாலும் மாதம் முதல் தேதியிலிருந்து 5ம் தேதி வரை அனைவருக்கும் சம்பளம் வந்துவிடும். சம்பளம் வருகின்ற முதல் நாள் மட்டுமே அனைவரின் முகத்திலும் மிகுந்த மகிழ்ச்சி நிலைத்திருக்கும். ஆனால் மறுநாளே அந்த மகிழ்ச்சி எங்கு போனது என்றே தெரியாது. அவ்வாறு வருகின்ற பணத்திற்கு ஏற்ற செலவுகள் அதிகமாக இருக்கும். பணம் வந்ததும், சென்றதும் விரைவாக நிகழ்ந்துவிடும். நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் அதிலிருந்து ஒரு ரூபாய் கூட சேமிப்பாக எடுத்து வைக்க முடியாது. இவ்வாறு பல பெண்கள் தங்கள் வீட்டில் பணப்புழக்கம் இல்லை, வருகின்ற பணம் முழுவதுமாக செலவாகி விடுகிறது, என்று புலம்புவதை கேட்டிருப்போம். இவ்வாறான நிலைமை மாறி, உங்கள் வீட்டில் பண புழக்கம் அதிகரிக்க இந்த எளிய பரிகாரத்தை செய்தால் போதும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

மாதத்தின் முதல் நாள் உங்கள் பண பர்ஸில் பணம் நிறைந்து பெரியதாக இருக்கும். ஆனால் இரண்டு நாட்களில் பணம் அனைத்தும் கரைந்து உங்கள் பாக்கெட்டில் மணிபர்ஸ் இருக்கின்றதா? இல்லையா? என்பதே தெரியாத அளவிற்கு லேசாக மாறிவிடும். அவ்வாறு பணத்திற்கான செலவுகள் முன்கூட்டியே வரிசையாக நிற்க ஆரம்பிக்கும்.

- Advertisement -

இந்த மாதமும் ஏதாவது பணம் மீதம் இருந்தால் இதை செய்ய வேண்டும் என்று நீங்கள் ஆர்வமாக இருந்தாலும் அதனை உங்களால் செய்ய முடியாது. இவ்வாறு பலரும் தங்கள் கனவுகளை நிறைவேற்ற முடியாமல் அதனை அவர்களின் மனதுக்குள்ளேயே வைத்துக் கொள்கிறார்கள். இதற்கு காரணம் பணம் மட்டும் தான். இந்தப் பணம் உங்களிடம் வருவது அதிகமாகி விட்டால் உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேறும்.

இந்தப் பணத்தை ஈர்ப்பதற்கு லட்சுமி கடாட்சம் நிறைந்த மங்களப் பொருட்கள் பெரும் துணையாக அமைகிறது. அதற்கு முதலில் நாட்டு மருந்துக் கடைக்குச் சென்று அங்கு புனுகு, ஜவ்வாது இவை இரண்டையும் வாங்கிக்கொள்ள வேண்டும். இந்த இரண்டு பொருட்களும் ஆன்மீக பூஜைகளில் பெரிதளவில் இடம்பெறுகின்றன.

- Advertisement -

அடுத்ததாக சிறிதளவு நெய்யை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சிறிதளவு ஜவ்வாது, சிறிதளவு பூனுகு, சிறிதளவு நெய் இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து மை போன்று தயார் செய்ய வேண்டும். பின்னர் குழந்தைகள் பயன்படுத்தும் சார்ட் பேப்பரை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆண்கள் தங்கள் பர்ஸில் வைப்பதாக இருந்தால் சார்ட் பேப்பரை வட்ட வடிவில் வெட்டிக்கொள்ள வேண்டும். பெண்கள் பயன்படுத்துவதாக இருந்தால் சார்ட் பேப்பரை நெற்றியில் வைக்கும் திலக வடிவில் வெட்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஆண்கள் பயன்படுத்தும் பேப்பரில் ஒரு புறம் ஓம் என்றும், மற்றொரு புறம் ஸ்ரீம் என்றும் எழுத வேண்டும். பெண்கள் பயன்படுத்தும் பேப்பரில் ஒரு புறம் ஸ்ரீம் என்றும், மறுபுறம் ம் என்றும் எழுத வேண்டும். பிறகு இந்த மையை பேப்பரின் இரு புறங்களிலும் தடவி அதனை ஒரு கவரில் வைத்து, பூஜை செய்து விட்ட பின்னர் உங்கள் பர்சில் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து வைத்துக் கொண்டால் விரைவில் உங்களிடம் பணம் அதிகரித்துக் கொண்டே இருப்பதை உணர முடியும்.

- Advertisement -