வேண்டுதல் நிறைவேற வழிபாடு

perumal dheepam
- Advertisement -

நம்முடைய தேவைகள் நிறைவேறவும் நினைத்த காரியங்கள் கைகூடவும் அனைவரும் சென்று சரணடையும் இடம் தெய்வங்கள் தான். நம்முடைய பிரச்சனைகளை யாருமே தீர்க்க முடியாத சூழ்நிலையிலும் நமக்காக நம்முடைய துன்பங்களை களைந்து நம்முடன் இருப்பவர்கள் தான் தெய்வங்கள்.

ஆகையால் தான் நாம் இறைவழிபாட்டிற்கு அத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஒரு மனிதன் நன்மை தீமையின் முக்கியத்துவத்தை உணர்ந்து அறநெறியில் வாழ்வதற்கான வழிமுறைகளை பின்பற்றுவதும் இந்த இறை நம்பிக்கையின் பெயரினாலே தான். அத்தகைய இறைவனை நம்முடைய பிரச்சனைகள் தீர மட்டுமின்றி நாம் நிம்மதியாக வாழவும் அனுதினமும் வணங்குவோம்.

- Advertisement -

இந்த வழிபாடு செய்வதற்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் தான் ஆலயங்கள். அவைகளில் பல பிரசித்தி பெற்ற ஆலயங்கள் உலகின் பல்வேறு இடங்களிலும் உள்ளது. அந்தந்த ஆலயத்தின் தல வரலாற்றை அறிந்தோமேயானால் ஆலயத்தின் சிறப்புகளை பற்றி நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். அப்படி ஒரு பிரசித்தி பெற்ற நம் பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய ஒரு ஆலயத்தின் வழிபாட்டு முறையைப் பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

நினைத்த காரியம் நிறைவேற வழிபாடு

நம்முடைய வேண்டுதல்களை உடனே நிறைவேற்றி தரக் கூடிய அந்த ஆலயமானது திருப்பத்தூருக்கு அருகில் உள்ள திருக்கோஷ்டியூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ள சௌமிய நாராயண பெருமாள் கோவில் தான். இந்த ஆலயத்தின் வழிபாடு குறித்து தான் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

இந்த ஆலயத்தில் மாசி மகம் மிக விமர்சையாக கொண்டாடப்படும். இந்த நாளில் பல்லாயிரம் கோடி பக்தர்கள் இந்த ஆலயத்தில் கோவில் பெருமாளை வழிபடுவார்கள். அப்போது அங்கு பெருமாளுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேற வேண்டுமெனில் அந்த ஆலயத்தில் இருந்து கொண்டிருக்கும் ஒரு விளக்கை நாம் வீட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

பிறர் ஏற்றிய விளக்கை வீட்டிற்கு கொண்டு வரலாமா? என்றால் இந்த ஆலயத்தின் விளக்கை வீட்டிற்கு கொண்டு வரலாம். இந்த விளக்கை நம் சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து நம் பூஜை அறையில் வைத்து தினந்தோறும் தீபம் ஏற்று உங்களுடைய வேண்டுதல் அல்லது தேவை திருமண தடை காரியத்தடை எதுவாக இருப்பினும் அது சரியாக வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு வேளை தினமும் தீபம் ஏற்றி வழிபட முடியாது என்ற சூழ்நிலையில் இருப்பவர்கள் இந்த விளக்கை ஒரு மஞ்சள் நிற துணியில் கட்டி வைத்து விடுங்கள். அந்த விளக்கின் முன்பு நின்று தினமும் உங்களுடைய வேண்டுதல்களை வையுங்கள். இப்படி வணங்கும் வேலையில் ஓம் நமோ நாராயணா என்ற மந்திரத்தை மனதார பாராயணம் செய்ய வேண்டும்.

நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறியவுடன் அந்த ஆலயத்திற்கு சென்று நீங்கள் கொண்டு வந்த விளக்கை அங்கு வைத்து விட்டு புதிதாக வேறு ஒரு விளக்கை வாங்கி வைத்து ஏற்றி நன்றி செலுத்தி விட்டு வர வேண்டும். வேறு ஒரு வேண்டுதல் வைக்க வேண்டும் என்றால் இதே போல் வேறு ஒரு விளக்கு கொண்டு வந்து வழிபாடு செய்யுங்கள்.

இந்த வழிபாடு மாசி மகத்தன்று அன்று செய்வது மிகவும் சிறந்தது. அன்றைய தினத்தில் செல்ல முடியாதவர்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த ஆலயத்திற்கு சென்று இறைவனை வழிபட்டு விளக்கு கொண்டு வந்து வீட்டில் ஏற்றி வழிபாடு செய்யலாம்.

உலக மக்கள் அனைவருக்கும் ஓம் நமோ நாராயணா என்ற எட்டெழுத்து மந்திரத்தை ராமானுஜர் இந்த ஆலயத்தில் உபதேசித்ததால் திருமந்திரம் விளைந்த திவ்ய தேசம் என்ற பெருமையும் இந்த ஆலயத்திற்கு உண்டு. ஆகையால் தான் இந்த ஆலயத்தின் வழிபாட்டில் இந்த ஓம் நமோ நாராயணா என்ற மந்திரத்திற்கும் அத்தனை முக்கியத்துவம் உள்ளது.

இதையும் படிக்கலாமே: வாழ்வு வளம் பெற விநாயகர் வழிபாடு

உங்களுடைய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறாத காரியங்கள் தடைப்பட்ட திருமணம் குழந்தை பேரு போன்ற அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்து கொள்ள இந்த வழிபாடு நிச்சயம் உதவி புரியும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து முழு பலனை பெறுங்கள்.

- Advertisement -