உங்கள் திருமணம் தடைபட்டுக்கொண்டே இருக்கிறதா? முதலில் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். விரைவில் பலன் கிடைக்கும்

marraige
- Advertisement -

இப்பொழுதெல்லாம் ஒரு திருமணம் முடிவாவது என்பது கொஞ்சம் இழுபறியாக தான் இருக்கிறது. பெண் தேடுவது என்பதும், மாப்பிள்ளை தேடுவது என்பதும் கொஞ்சம் சிக்கலான காரியமாகத்தான் இருக்கிறது. ஒருசிலருக்கு ஜாதகத்தில் இருக்கும் பிரச்சனைகள் காரணமாக திருமணம் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும். பெண் பிடித்திருந்தால் ஜாதகம் சரியாக அமையாது. ஜாதகம் சரியாக பொருந்தி இருந்தால் மாப்பிள்ளை பெண்ணிற்கு நல்ல உடன்பாடு இருக்காது. இவ்வாறு பலகாரணங்களளால் திருமணம் தடைப்பட்டுக் கொண்டே இருக்கும். இந்த சூழ்நிலையை சரி செய்து விரைவில் திருமணம் நடக்க இந்த வெட்டி வேரை வைத்து 11 வாரங்கள் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் விரைவில் உங்கள் திருமணம் நடைபெறும். வாருங்கள் இந்த பரிகாரத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்பததை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

kalappu thirumanam

வெட்டிவேர்:
வெட்டிவேர் என்பது இயற்கையாகவே நல்ல வாசம் தரக்கூடிய ஒரு வேர் ஆகும். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. நம் முன்னோர்கள் காலத்தில் எல்லாம் பல பூஜைகளிலும், மருத்துவக் குறிப்புகளிலும் இந்த வெட்டி வேர் இல்லாத இடம் என்று எதுவும் இல்லை.

- Advertisement -

இந்த வெட்டிவேர் லட்சுமி கடாட்சத்தை தரக்கூடிய ஒரு பொருளாகும். அவ்வாறு வாசம் நிறைந்த இடத்தில் மகாலட்சுமி நிறைந்திருப்பாள் என்பதும் ஐதீகம். சிறிதளவுவெட்டிவேரரை எப்பொழுதும் நமது பூஜை அறையில் வைத்திருப்பதன் மூலம்வீட்டடில் மங்களகரம் உண்டாகிறது.

vettiver1

இந்த புனிதமான வெட்டிவேர் திருமணதடை நீக்குவதிலும் நல்ல பலனைக் கொடுக்கிறது.அவவ்வாறு தடைபட்டுக் கொண்டிருக்கும் திருமணம் விரைவில் நடைபெற வெட்டிவேரை வாங்கி கொண்டு அதனை சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து மாலையாக கட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு மாலை கட்ட தெரியாதவர்கள் கடையில் விற்கும் வெட்டிவேர் மாலையையும் வாங்கி கொள்ளலாம். ஆனால் வெட்டிவேரை நமது கைகளாலே மாலையாக தொடுத்து பூஜை செய்வது என்பது அதிக பலனை கொடுக்க வல்லது. உங்கள் வீட்டிற்கு அருகில் சிவன் கோவில் இல்லை என்றாலும் உங்கள் இஷ்ட தெய்வத்திற்கு இந்த மாலையை அணிவித்து பூஜை செய்து வரலாம்.

- Advertisement -

வாரம்தோறும் வெள்ளிக்கிழமை அன்று இவ்வாறு வெட்டிவேர் மாலை செய்து, கொண்டு அதனை அருகில் உள்ள சிவபெருமான் கோவிலுக்குச் சென்று சிவனுக்கு சாற்றி உங்கள் திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 11 வெள்ளிக்கிழமை செய்ய வேண்டும். திருமணம் தடைபட்டுக் கொண்டிருக்கும் அந்த பெண் அல்லது ஆண் இந்த பரிகாரத்தை தனது கைகளால் செய்ய வேண்டும்.

sivan

இவ்வாறு இந்த பரிகாரத்தை நீங்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் பொழுது இடையிலேயே உங்களது திருமணத்திற்கான வரன் கிடைக்கும். இவ்வாறு உங்கள் பூஜைக்கு பலன் கிடைத்த போதும் இந்த பூஜையை 11 வாரங்கள் தொடர்ந்து செய்து முடிக்க வேண்டும்.

- Advertisement -