அதிர்ஷ்டமான வாழ்வை அள்ளி தரும் கரு மஞ்சள்

karumanjal
- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய கஷ்டங்களுக்கு அவர்களை சுற்றி இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களே காரணமாக விளங்குகிறது. எதிர்மறை ஆற்றல்களை நாம் பல வகைகளில் பிரிக்கலாம். எப்படிப்பட்ட எதிர்மறை ஆற்றலாக இருந்தாலும் அந்த ஆற்றலை ஓட விரட்டக்கூடிய ஒரு அற்புதமான பொருள் என்ன என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல ஒவ்வொரு இடத்திற்கும், பொருளுக்கும் நேர்மறை எதிர்மறை என்ற ஆற்றல்கள் இருக்கத்தான் செய்யும். அவற்றில் நேர்மறையை மட்டும் எடுத்துக் கொண்டு நாம் முன்னோக்கி சென்றோம் என்றாள் நம்முடைய வாழ்க்கை வெற்றிகரமான வாழ்க்கையாக அமையும்.

- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் எதிர்மறையான செயல்களோ, பாதிப்புகளோ ஏற்பட்டு கொண்டே இருந்தால் அவரை சுற்றி எதிர்மறையான ஆற்றல்கள் அதிகமாக இருப்பதாகவே கருதப்படுகிறது. அந்த எதிர்மறை ஆற்றல்களை விலக்குவதற்கும் அதே சமயம் நேர்மறை ஆற்றல்களை ஈர்ப்பதற்கும் இருக்கக்கூடிய மிகவும் அற்புதமான பொருள்தான் கருமஞ்சள்.

பொதுவாக மஞ்சள் என்றாலே மங்களகரமாக மஞ்சள் நிறத்தில் இருக்கும் என்றுதான் அனைவருக்கும் தெரியும். இந்த கருமஞ்சள் என்பது கரு நீல நிறத்தில் இருக்கக்கூடிய மஞ்சள் ஆகும். இதற்கு பல அற்புதமான மருத்துவ குணங்களும் மகத்துவமான குணங்களும் இருக்கின்றன.

- Advertisement -

கருமஞ்சள் இருக்கும் இடத்தில் எந்தவித எதிர்மறை ஆற்றல்களும் இருக்காது. அதே சமயம் வரக்கூடிய ஆற்றல்களில் எதிர்மறை ஆற்றல்களை விலக்கி நேர்மறை ஆற்றல்களை மட்டுமே உள்ளிருக்கும் அற்புதமான சக்திவாய்ந்த பொருளாக கருமஞ்சள் விளங்குகிறது. இதை எந்த பொருளுடன் நாம் சேர்த்து வைக்கிறோமோ அந்த பொருளுக்கு ஏற்றவாறு அதன் நேர்மறை ஆற்றல்கள் செயல்படும்.

பணத்துடன் சேர்த்து வைத்தால் பணம் பெருகும். நகையுடன் சேர்த்து வைத்தால் நகை பெருகும். வீட்டு வாசலில் கட்டி வைத்தால் வீட்டிற்குள் எதிர்மறை அதிர்வுகளான கெட்ட சக்திகள் வருவதை தடுத்து நிறுத்தி விடும். மேலும் இதை உரசி திலகமாக நாம் நெற்றியில் வைத்துவிட்டு வெளியில் சென்றோம் என்றால் அதனால் நமக்கு வெளியில் ஏற்படக்கூடிய தடைகளை விலக்கும் ஆற்றலை நமக்குத் தரும். அது மட்டுமல்லாமல் நாம் நினைத்து சென்ற காரியங்களும் வெற்றி அடையும்.

- Advertisement -

இந்த அற்புதமான கருமஞ்சளை நாம் கிழங்காகவும், செடியாகவும் வாங்கி நம் வீட்டில் வைக்கலாம். செடியாக வைத்து வளர்க்கும் பொழுது அந்தச் செடி எந்த அளவுக்கு வளர்கிறதோ அந்த அளவிற்கு நம் வீட்டில் சுபிட்சமும் வளரும். அப்படி இவை இரண்டும் கிடைக்காத பட்சத்தில் கருமஞ்சள் தூள் என்று நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதையும் நாம் வாங்கி வைத்துக் கொள்ளலாம்.

பொடியாக கிடைக்கும் பொழுது அதை ஒரு மூட்டையாக கட்டி பணம், நகை இருக்கும் இடங்களில் வைப்பதும் அதேபோல் மூட்டையாக கட்டி வீட்டு வாசலின் முன் கட்டி விடுவதும் என்று செய்யலாம். அதே சமயம் இந்த பொடியை விபூதியுடன் கலந்தோ அல்லது குங்குமத்துடன் கலந்தோ நெற்றியில் வைத்துக்கொண்டு நாம் எந்த காரியத்திற்கு சென்றாலும் அந்த காரியம் நியாயமான காரியமாக இருந்தால் கண்டிப்பாக முறையில் வெற்றி அடையும்.

இதையும் படிக்கலாமே: வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி தாயாரை நினைத்து இந்த சக்தி பூஜை செய்தால் ஆண்டியும் அரசனாகும் யோகத்தை பெறலாம்.

இப்படி எந்த வகையில் இந்த கருமஞ்சள் நமக்கு கிடைத்தாலும் நாம் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலியாகவே திகழ்வோம். முயற்சி செய்து உண்மையான கருமஞ்சளை வாங்கி உங்கள் வாழ்க்கையில் பல வெற்றிகளை பெறுங்கள்.

- Advertisement -