திருமணம் நடக்க கண்ணாடி பரிகாரம்

murugan thirumanam
- Advertisement -

நம்முடைய குடும்ப அமைப்பு முறையில் திருமணம் மிக முக்கியமான ஒரு நிகழ்வாக கருதப்படுகிறது. ஒரு குடும்பம் தழைக்கவும் அடுத்த நிலைக்கு செல்லவும் பாலமாக அமைவதே இந்த திருமணம் தான். ஆகையால் தான் இந்த திருமணத்தை நடத்துவதில் மிகவும் அக்கறையுடனும் முனைப்புடன் செயல்படுகிறோம்.

அதுமட்டுமின்றி திருமணம் என்பது நம்முடைய கலாச்சாரத்தில் பெரிய வைபோகமாகவே கொண்டாடுவார்கள். அப்படியான இந்த திருமண யோகம் நல்ல முறையில் அமைவது என்பது அத்தனை சாதாரண காரியம் இல்லை. இந்த பதிவில் திருமண வயதை கடந்தும் திருமண ஆகாமல் இருப்பவர்கள் செய்ய வேண்டிய ஒரு எளிய பரிகார முறை பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

திருமண தடை நீங்க பரிகாரம்

திருமண வயதை அடைந்தும் திருமணம் ஆகாமல் இருக்கும் பிள்ளையை பெற்றவர்களின் நிலையை நினைத்துக் கூட பார்க்க முடியாது. அந்த பிள்ளைகளின் வயதை ஓற்றவர்கள் எல்லாம் குடும்பம் சகிதமாய் சந்தோஷமாக வாழும் போது தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் நடைபெறவில்லை என்றால் பெற்றோர்களுக்கு அது பெரும் துயரம் தானே.

இது பெற்றோருக்கு மட்டுமல்ல அந்தப் பெண்ணுக்கும் உடன்பிறந்தோர் என ஒரு குடும்பத்தையே பாதிக்க கூடியது தான். இத்தகை பெரிய பிரச்சனையை தீர்க்க கூடிய எளிமையான ஒரு பரிகார முறை பற்றி தான் இப்போது ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையானது ஒரே ஒரு கண்ணாடி மட்டுமே.இந்த பரிகாரத்திற்கு ஒரு கண்ணாடி வாங்க வேண்டும். இந்த கண்ணாடியை யார் திருமணத்திற்காக காத்திருக்கிறார்களோ அவர்கள் கையாலே வாங்கி அவர்களே கொண்டு வந்து வீட்டில் மாட்ட வேண்டும்.

அடுத்து அந்த கண்ணாடியில் முருகர் படத்தை ஒட்ட வேண்டும். இதற்கு ஒட்டக் கூடிய முருகர் படமானது ஆறுமுகமும் 12 கைகளையும் உடைய சண்முகநாதர் படத்தை தான் ஒட்ட வேண்டும்.இதற்கு வேறு எந்த முருகர் படத்தையும் ஒட்டக் கூடாது இதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது திருமணமாக வேண்டிய பெண்ணோ, ஆணுனோ இரவு உறங்கும் போது கண்ணாடியில் ஒட்டி இருக்கும் முருகருக்கு முன்பு நின்று தனக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்றும், மனதிற்கு பிடித்த வாழ்க்கை அமைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு உறங்க செல்ல வேண்டும்.

இதே போல் காலை எழுந்தவுடன் முதல் வேலையாக இந்த வேண்டுதலை வைக்க வேண்டும். இப்படி தொண்ணுறு நாட்கள் தொடர்ந்து செய்யும் போது நிச்சயம் திருமணம் ஆகக் கூடிய யோகத்தை முருகப்பெருமான் அருள்வார் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: கோடீஸ்வரனாக மாற ஈசன் வழிபாடு

இந்த பரிகார முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் எளிமையான இந்த பரிகாரத்தை செய்து நல்லப் என்று இந்த தகவலுடன் பதிவினை நிறை செய்து கொள்ளலாம்

- Advertisement -