உங்களுக்கு திருமண பாக்கியமே இல்லை என்று சொல்லி விட்டால் கூட கவலை படாமல், சப்த கன்னியருக்கு இப்படி ஒரு முறை தீபம் ஏற்றி பாருங்கள். உங்கள் வீட்டில் விரைவில் மேள சத்தம் கேட்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை

- Advertisement -

வீட்டில் இருக்கும் திருமண வயது வந்த பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியாமல் தவிக்கும் பெற்றோர் பலர் இருக்கிறார்கள். திருமணம் ஆகாமல் இருக்க பல்வேறு காரணங்கள் உண்டு. கையில் பணம் இல்லாமல் தங்கள் பிள்ளைகளை கரையேற்ற முடியாமல் தவிப்பவர்களும் உண்டு. அதே நேரத்தில் காசு பணம் எல்லாம் இருந்தும் அவர்களின் ஜாதக பிரச்சனைகள் இன்னும் பல காரணங்களால் திருமணம் கை கூடாமல் தள்ளி போவதும் உண்டு. இப்படி எந்த காரணத்தினால் திருமணம் தள்ளி போனாலும் , சப்த கன்னியருக்கு இந்த விளக்கு ஏற்றினால் போதும். உங்கள் வேண்டுதல் நிச்சயம் பலிக்கும். அது என்ன என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

திருமணத் தடை நீங்க சப்த கன்னியரை வேண்டிக் கொண்டு  தீபம் ஏற்றி,சப்த கன்னிகளை வணங்கும் போது உங்களின் இந்த திருமண வேண்டுதலையும் உடனடியாக நிறைவேற்றி தருவார்கள். அவர்களின் முன் மண்டியிட்டு நம் மனக்குறைகளை வைத்தால் போதும், அவர்களை போல் மனம் குளிர்ந்து உடனே நம் தீர்த்து வைக்கும் தெய்வம் வேறு இல்லை. சப்த கன்னியர்கள் ஆக்ரோஷமான தெய்வங்கள் தான், ஆனால் இவர்களை நாம் பணிந்து விட்டால் போதும் நம் குறைகளை உடனடியாக தீர்த்து விடுவார்கள்.

- Advertisement -

சப்த கன்னியர்களை வணங்க வேண்டும் என்ற உடன் பலர் மனதில் இந்த சந்தேகம் எழும். எங்களுக்கு சப்த கன்னியர் வணங்கும் பழக்கம் இல்லை. எங்கள் குலதெய்வம் வேறு இந்த தெய்வங்களை வணங்கலாமா? என்ற எண்ணம் பலர் மனதில் எழுவே செய்யும். சப்த கன்னியரும் அனைவரும் வணங்க வேண்டிய காவல் தெய்வங்கள் தான். இவர்களில் ஒருவர் தான் வாராகி அம்மன் அவரை எப்படி எல்லோரும் வணங்கலாமோ, அதே போலத் தான் இந்த சப்த கன்னியரும். இவர்களும் அனைவருமே வணங்க வேண்டிய தெய்வங்கள் தான்.

இப்போது இந்த சப்த கன்னியர்களை எப்படி வணங்கினால் திருமண தடை அகலும் என்பதை தெரிந்து கொள்ளலாம். முதலில் சப்த கன்னியர் இருக்கும் கோவிலுக்கு சென்று அங்கு ஏழு தேங்காய் வாங்கிக் கொள்ள வேண்டும். (இதை கோவிலுக்கு போகும் போது வாங்கி கொள்ளுங்கள்) அந்த ஏழு தேங்காயும் உடைத்து அதன் அடிப்பக்கத்தை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலே குடுமி இருக்கும் பக்கத்தில் தீபம் ஏற்றக் கூடாது. தேங்காயின் அடி பக்கத்தில் இலுப்பை எண்ணெய் ஊற்றி, சிகப்பு நூல் திரி போட்டு ஏழு தீபம் ஏற்ற வேண்டும். ஏழு தீபம் என்பது ஒவ்வொரு கன்னியருக்கும் ஒவ்வொரு தீபம். சப்த கன்னியர்களுக்கு தீபம் ஏற்றி அவர்களின் முன் மண்டியிட்டு உங்களின் எந்த காரணத்திற்காக திருமணம் தடைப்பட்டுக் கொண்டிருக்கிறது, அதை சொல்லி அந்த தடை அகல வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த தெய்வத்தின் பெயரே சப்த கன்னிகை தான், அதனால் தான் திருமணமாகாதவர்களின் வேண்டுதலை இந்த தெய்வங்கள் உடனே நிறைவேற்றி கொடுக்கும்.

இந்த வேண்டுதலை ஆண், பெண் என யார் வேண்டுமானாலும் செய்யலாம். இந்த தீபம் ஏற்றிய சில நாட்களுக்குள்ளே கண்டிப்பாக உங்களின் பிரார்த்தனை நிறைவேறி உங்களுக்கு நல்ல ஒரு வாழ்க்கை துணை அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

- Advertisement -