திருமண தடை நீங்க தேங்காய் பரிகாரம்

pasu thengai
- Advertisement -

திருமணம் என்பது ஒருவருடைய வாழ்க்கையில் இன்றியமையாமல் நடக்கக்கூடிய ஒரு நிகழ்வு ஆகும். இது எந்த வயதில் நடைபெறுகிறது என்பதை விட திருமணம் நடைபெற வேண்டும் என்பதுதான் முக்கியமாக கருதப்படுகிறது. திருமணம் நடந்தால் தான் ஒருவருடைய வாழ்க்கையின் அடுத்த கட்ட நிலைக்கு அவரால் செல்ல முடியும். அதிலிருந்து அவருக்கு பல பொறுப்புகள் ஏற்பட்டு முழுமையான மனிதனாக அவரால் மாற முடியும். அப்படிப்பட்ட திருமணத்தில் ஏதேனும் தடைகள் ஏற்பட்டு இருந்தால் அந்த தடைகளை எப்படி நீக்குவது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

திருமணத்திற்காக காத்திருக்கும் பலரும் பலவித கனவுகளுடன் இருப்பார்கள். அவர்கள் மட்டுமல்ல அந்த குடும்பத்தை சேர்ந்தவர்களும் அப்படித்தான் இருப்பார்கள். தங்களுக்கு பிடித்தமான வாழ்க்கைத் துணை அமைய வேண்டும் என்று ஆசைப்பட்டு முயற்சிகளை செய்தாலும் அந்த முயற்சிகளில் ஏதாவது தடைகள் ஏற்பட்டு கைநழுவி போன பல பேர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்குரிய மிகவும் எளிமையான பரிகாரத்தை பார்ப்போம்.

- Advertisement -

திருமணம் தடைப்பட்டு இருக்கும் நபர்கள் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். அவர்களுக்கு பதிலாக வேறு யாரும் செய்யக்கூடாது. செய்தால் பலன் கிடைக்காது. திருமண தடை ஏற்பட்ட ஆணாக இருந்தால் வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் செய்ய வேண்டும். பெண்ணாக இருந்தால் செவ்வாய்க்கிழமை குரு ஹோரையில் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பாக பூஜை அறையை சுத்தம் செய்து விளக்கேற்றி சாம்பிராணி தூபம் காட்ட வேண்டும்.

பிறகு நல்ல தேங்காயாக ஒரு தேங்காயை எடுத்து கையில் வைத்துக் கொண்டு பூஜை அறையில் இருக்கும் தெய்வங்களுக்கு முன்பாக விரைவிலேயே திருமணம் நடைபெற வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு பூஜை அறையிலேயே அந்த தேங்காயை உடைக்க வேண்டும். உடைத்த இந்த தேங்காயை துருவி கொள்ள வேண்டும். பிறகு பாகு வெல்லத்தை பொடியாக நுணுக்கி அதை துருவிய தேங்காயில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு கலக்கும் பொழுது மகாலட்சுமி தாயாரை மனதார நினைத்து விரைவிலேயே திருமணம் நடைபெற வேண்டும் என்ற எண்ணத்துடன் மகாலட்சுமி தாயாரின் மந்திரங்களை உச்சரித்த வண்ணம் பிணைய வேண்டும். மந்திரம் தெரியாதவர்கள் அவர்களின் நாமத்தை உச்சரித்த வண்ணம் செய்யலாம். பிறகு இந்த தேங்காய் வெல்ல கலவையை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் பசுமாட்டிடம் செல்ல வேண்டும். பசுமாட்டை மனதார வழிபட்டு மூன்று முறை வலம் வந்து பிணைந்து வைத்திருக்கும் இந்த தேங்காய் வெல்ல கலவையை பசு மாட்டிற்கு உண்ண தர வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து ஏழு வாரங்கள் செய்ய வேண்டும். ஏழு வாரங்கள் செய்து முடிப்பதற்குள்ளேயே திருமணம் சம்பந்தப்பட்ட நல்ல செய்தி உங்கள் வீடு தேடி வரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. குறிப்பு: இவை அனைத்தையும் அந்த குறிப்பிட்ட ஹோரையில்தான் செய்ய வேண்டும். யாருக்கு திருமணம் தடைப்பட்டு இருக்கிறதோ அவர்கள் தான் அனைத்தையும் செய்ய வேண்டும். அவர்களுக்கு பதிலாக வேறு யாரும் செய்யக்கூடாது. தேங்காய் உடைப்பதாக இருந்தாலும் சரி துருவுவதாக இருந்தாலும் சரி. அவர்களே தங்கள் கைப்பட செய்தால்தான் முழு பலனையும் பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: தடைகளை தகர்த்தெறியும் தாமரை இலை தீபம்

பல ஆயிரக்கணக்கில் செலவு செய்யாமல் மிகவும் எளிமையாக வீட்டில் இருக்கக்கூடிய இந்த இரண்டு பொருட்களை மனதார நம்பிக்கையுடன் இறைவனை வேண்டிக்கொண்டு பசு மாட்டிற்கு தானமாக தருவதன் மூலம் அவர்கள் விரும்பிய வண்ணம், வாழ்க்கைத் துணை அமைந்து வெற்றிகரமான வாழ்க்கையை வாழ முடியும்.

- Advertisement -