தடைகளை தகர்த்தெறியும் தாமரை இலை தீபம்

thamarai ilai
- Advertisement -

நம்முடைய வாழ்க்கை வளமாக அமைய வேண்டும் என்றால் அதற்கு நமக்கு கண்டிப்பான முறையில் பணம் தேவைப்படும். அதனால் தான் பணத்தை சம்பாதித்து சேமித்து வைக்க வேண்டும் என்று பலரும் பாடுபடுகிறார்கள். பணத்தை சம்பாதித்தும் சேமிக்க முடியாமல் இருப்பவர்கள் தங்களின் இக்கட்டான காலங்களில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அதனால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். மேலும் பணம் இல்லாமல் பல காரியங்களை செய்ய முடியாமல் கஷ்டப்படுபவர்களும் இருக்கிறார்கள்.

வீடு கட்ட ஆரம்பித்து விட்டு பணம் கிடைக்காத பட்சத்தில் அந்த வீட்டை அப்படியே நிறுத்திவிட்டு இருப்பவர்கள், திருமணம் நடக்க போதுமான பணம் இல்லாமல் திருமணம் நடைபெறாமல் கஷ்டப்படுபவர்கள், பணத்தால் படிப்பை தொடர முடியாமல் கஷ்டப்படுபவர்கள், தொழிலை சிறப்பாக நடத்துவதற்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் என்று பணம் இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். இப்படி பணத்தால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தையும் நீக்குவதற்கு மகாலட்சுமி தாயாரை எப்படி தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

தாமரை இலை தீபம்
இந்த வழிபாட்டை நாம் புதன்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த வேளையில் செய்ய வேண்டும். இதற்கு நமக்கு ஒரு தாமரை இலை தேவைப்படும். முதல் நாளே தாமரை இலையை பறித்து வைத்துக் கொள்ளுங்கள். காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்துவிட்டு ஒரு தாம்பாளத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பறித்து வைத்திருக்கும் தாமரை இலையை சுத்தமான தண்ணீரை ஊற்றி கழுவி அந்த தாம்பாளத்தின் மேல் வைத்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது அந்த தாமரை இலையில் வட்ட வடிவில் ஆறு அகல் விளக்குகளை வைக்க வேண்டும். அதில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்ச திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். அப்படி தீபம் ஏற்றும் பொழுது அனைத்து தீபங்களும் ஒன்றை ஒன்று பார்த்தவாறு இருக்க வேண்டும். வெளிப்புறத்தில் தீபம் எரியாமல் உள்புறத்தில் தீபம் எரிவது போல் ஏற்ற வேண்டும். பிறகு ஒவ்வொரு அகல் விளக்கிற்கும் மல்லிகை பூக்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு மகாலட்சுமி தாயாரை மனதார வேண்டிக் கொண்டு “ஓம் கமலதாரிணி நமோ நமஹ” என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து ஆறு வாரங்கள் செய்ய வேண்டும். நெய்வேத்தியமாக ஏதாவது ஒரு இனிப்பு பொருளை வைக்க வேண்டும். இயலாதவர்கள் கற்கண்டை மட்டும் வைத்தால் கூட போதும்.

இப்படி நாம் தீபம் ஏற்றி வழிபட மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமியின் அருளால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். மேலும் பணம் இல்லாமல் தடைப்பட்டிருந்த காரியங்கள் அனைத்தும் நல்ல முறையில் நடந்தேறும்.

இதையும் படிக்கலாமே: தீராத நோய் தீர முருகர் வழிபாடு

இந்த பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் செய்யும் பொழுது அந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்குரிய முயற்சிகளையும் நாம் செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் கடன் மற்றும் பணம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து சுகமான வாழ்க்கையை வாழ முடியும்.

- Advertisement -