திருமண தடை விலக அபிஷேக பரிகாரம்

thirumanam lingam
- Advertisement -

திருமணம் என்பது இருமனம் இணைந்து ஒன்றாக சேர்த்து வாழ பெரியவர்கள் நடத்தி வைப்பது. இது இரு மனங்கள் மட்டும் அல்லாது இரு குடும்பம், இரு சமூகம் என இதன் பின்னணியில் பல பிணைவுகள் உண்டு. ஆகையால் தான் இந்த திருமணத்தை நம் முன்னோர்கள் வெகு சிரத்தையுடன் கவனமாக நடத்தி வந்தார்கள். இப்போதெல்லாம் திருமணத்திற்கு வரன் தேடுவது என்றால் அத்தனை பெரிய சவாலாக இருக்கிறது. எவ்வளவு முயற்சி செய்தும் சரியான வரன் அமையாமல் தள்ளிப் போவது போன்ற சூழ்நிலைகள் அதிகமாகவே உள்ளது.

இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. எந்த மாதிரியான ஜாதக காரணத்தினால் திருமணம் தடைப்படும் என்பதையும், அதற்கு நாம் என்ன பரிகாரம் செய்தால் சரியாகும் என்பதை பற்றி எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

திருமண தடை நீங்க
ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்தின் உடைய அமைப்பு சரியாக இல்லை என்றாலும் திருமணம் தள்ளிப் போகும் என்று சொல்லப்படுகிறது இதற்கு செவ்வாய் தோஷம் தான் இருக்க வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. ஜாதகத்தில் உள்ள செவ்வாய் கிரகம் சாதகம் இல்லாத சூழ்நிலையில் இருந்தாலும் வரன் எளிதில் அமையாது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அடுத்ததாக ஜாதகத்தில் குரு பகவானுடைய அருள் இல்லாமல் இருந்தாலும் இது போன்ற சூழ்நிலை நிலவும். ஜாதகத்தில் இந்த இந்த இரண்டு கிரகங்களும் சாதகம் இல்லாத சூழ்நிலையில் இருந்தால் நிச்சயம் திருமண தடை ஏற்படும் தடைகள் இருக்கும். இந்த ஜாதகக்காரர்களுக்கு திருமணம் கை கூடினாலும் அதில் பல இன்னல்களை சந்திப்பதுடன் திருமண முறிவு வரை அது செல்லும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இந்த காரணங்களால் உங்களுக்கு திருமண தடை இருப்பின் இந்த எளிய பரிகாரத்தை செய்து கொள்ளலாம். அதற்கு திருவண்ணாமலையில் உள்ள கிரிவலப் பாதையில் அமைந்திருக்கும் சந்திர லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இந்த அபிஷேகம் எந்த மாதிரியான அபிஷேகமாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சினை தீர கல் உப்பு பரிகாரம்
இந்த அபிஷேகம் செய்யும் பொழுது உங்கள் திருமணம் தடை முழுவதுமாக நீங்கி நல்லதொரு வாழ்க்கை துணை அமைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு செய்ய வேண்டும். இதை செய்யும் பொழுது நிச்சயம் தடை நீங்கி திருமணம் கை கூடும் என்று சொல்லப்பட்டிருக்கிறது இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் இதை செய்து திருமணத்தடை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

- Advertisement -