திருப்பதிக்கு போகும் பாக்கியத்தை பெற பெருமாள் வழிபாடு

perumal1
- Advertisement -

திருப்பதி போனால் திருப்பம் வரும் என்று சொல்லுவார்கள். ஆனால் ஒரு சில பேர் வாழ்க்கையில் திருப்பதிக்கு போகக்கூடிய வாய்ப்பே அமையாது. திருப்பதிக்கு போலாம் என்று புறப்பட்டாலே அடுத்தடுத்து ஏதாவது ஒரு தடைகள் வந்து கொண்டே இருக்கும். சில பேர் திருப்பதி வரை போயிருப்பாங்க. ஆனா கூட்டத்தில் பெருமாளை தரிசனம் செய்ய முடியாமல் அப்படியே வீடு திரும்பி இருப்பார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் இருந்தால், உங்களுக்கும் திருப்பதிக்கு செல்லக்கூடிய காலமும் நேரமும் கைக்கூடி வரவேண்டும் என்று நினைத்தால், பின் சொல்ல கூடிய இந்த ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை செய்யுங்கள். திருப்பதி பெருமாளை பார்க்கும் பாக்கியம் சீக்கிரம் கிடைக்கும். வாழ்க்கையில் சீக்கிரம் திருப்பம் ஏற்படும்.

- Advertisement -

திருப்பதி பெருமாளை தரிசனம் செய்யும் பாக்கியத்தை பெற வழிபாடு

வாரம் தோறும் சனிக்கிழமை என்றால் காலையில் எழுந்து பெருமாளை மனதில் நினைத்துக் கொண்டு, நல்லெண்ணெய் தலைக்கு வைத்து குளிக்க வேண்டும். ஒரு சொட்டு நல்லெண்ணெயை தலையில் வைத்து குளித்தாலும் போதும். எண்ணெய் குளியலை முடித்துவிட்டு, பூஜையறையில் பெருமாளுக்காக ஒரு விளக்கை ஏற்றி வைத்து விடுங்கள்.

திரிஷ்ணத்தைக் கொண்டு நெற்றியில் நாமம் இட்டுக் கொள்ளுங்கள். கோவிந்தா கோவிந்தா என்ற நாமத்தை சொல்லுங்கள். ‘ஓம் நமோ நாராயணா’ என்ற நாமத்தை உச்சரியுங்கள். 27 முறை இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு, திருப்பதிக்கு வரக்கூடிய பாக்கியத்தை கொடு பெருமாளே என்று மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள். பெருமாளுக்கு துளசி இலைகளால் அர்ச்சனை செய்யுங்கள்.

- Advertisement -

சனிக்கிழமை வெண்பொங்கல் செய்து பெருமாளுக்கு நிவேதனம் வைத்து இந்த வழிபாட்டை மனமுருகி மேற்கொண்டால், திருப்பதிக்குப் போகக்கூடிய பாக்கியம் கிடைக்கும். முதல் வாரம் இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் போது, ஒரு மஞ்சள் நிற துணியில் ஒரு ரூபாயை வைத்து முடிச்சு போட்டு, பெருமாள் பாதங்களில் வைத்து விடுங்கள்.

வீட்டில் பூஜை அறையில் பெருமாள் படம் இருக்கும் அல்லவா. அந்த படத்தில் முன்பு வைத்துவிட்டு ‘சீக்கிரம் நான் உன்னை காண திருப்பதிக்கு வர வேண்டும் பெருமாளே’ என்று மனதுக்குள் சொல்லிக்கோங்க. வாய்விட்டு சொன்னாலும் தவறு இல்லை. வரும்போது இந்த முடிச்சை கொண்டு வந்து உன் உண்டியலில் செலுத்துகிறேன் என்று பிரார்த்தனை வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: வாராகி தாயாருக்கு பிடித்த நெய்வேத்தியம்

பிறகு பாருங்கள் பெருமாள் உங்களை எப்படி திருப்திக்கு அழைக்கின்றார் என்று. பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனை தீர, கடன் சுமை குறைய, வாழ்க்கையில் பெரிய அளவில் நல்ல திருப்பங்கள் வர, மேல் சொன்ன இந்த ஆன்மீகம் சார்ந்த வழிபாடு உங்களுக்கு நிச்சயம் நல்லதொரு வழியை காட்டித் தரும் என்ற தகவலோடு ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -