பிரதோஷ நாளில் செய்ய வேண்டிய திருஷ்டி பரிகாரம்

sivan kan thirusti
- Advertisement -

பிரதோஷம் என்றாலே பாவங்களை நீக்கக் கூடியது என்று தான் பொருள். பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சாராம்சமே நம்முடைய பூர்வ ஜென்ம மற்றும் இந்த ஜென்மத்தில் செய்த பாவங்கள் கர்ம வினைகள் தீர்ந்து புண்ணிய பலனை தேடிக் கொள்வது தான். அத்தகைய பிரதோஷ தினத்தில் நம்முடைய கர்மாவுடன் சேர்த்து கெட்ட சக்திகளும், தீராத தோஷங்களும் தீர சிவபெருமானை எப்படி வழிபடுவது என்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

திருஷ்டி தோஷங்கள் நீங்க

இந்த பரிகாரத்தை பிரதோஷத்தன்று காலை வேளையில் செய்ய வேண்டும். ஆகையால் நாளைய தினம் புதன்கிழமையோடு வந்திருக்கும் பிரதோஷ நாளில் விடியற்காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து விடுங்கள். இப்படி குளிக்கும் போது ஆண்கள் தலைக்கு எண்ணெய் வைத்து குளிக்க வேண்டும். பெண்கள் சாதாரணமாக குளிக்க வேண்டும்.

- Advertisement -

அதன் பிறகு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து சிவபெருமானை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். விரதம் இருந்து வழிபடுபவர்கள் காலை முதலே விரதத்தை தொடங்கி விடுங்கள். அடுத்து ஒரு கை பிடி நிறைய பச்சைப் பயிரை எடுத்துக் கொள்ளுங்கள். அதை இடமிருந்து வலம் எட்டு முறையும் வலம் இருந்து இடம் எட்டு முறையும் சுற்ற வேண்டும். இதை ஆண் பெண் இருவரும் செய்து கொள்ளலாம்.

ஒருவர் மற்றவருக்கு செய்யக் கூடாது அவரவர்க்கு அவரவர் தான் செய்து கொள்ள வேண்டும். சிறு பிள்ளைகளுக்கு வேண்டுமானால் பெரியவர்கள் செய்யலாம். அதே போல் தனித்தனியாக தான் சுற்றிக் கொள்ள வேண்டும் இரண்டு குழந்தைகள் என்றால் அவர்களை ஒன்றாக அமர வைத்து சுற்ற கூடாது.

- Advertisement -

வீட்டில் உள்ள அனைவரும் இப்படி சுற்றுவதனாலும் தனித்தனியாக பச்சைப் பயிர் எடுத்து ஒவ்வொருவரையும் தனித்தனியாக சுற்ற வேண்டும். அனைவரும் சுற்றி முடித்த பிறகு இந்த பச்சை பயிரை ஒரு பேப்பரில் வைத்து முடி கட்டி விடுங்கள். உங்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டு வடக்கு திசை நோக்கி வீசி எறிந்து விட வேண்டும்.

அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்கள் அல்லது வீட்டிற்கு வெளியே போட முடியாது என்பவர்கள் இதை வீட்டில் இருந்து கொஞ்சம் தள்ளி எடுத்துச் சென்று அங்கு இருந்து வடக்கு திசை நோக்கி வீசி போட்டு விட்டு வீட்டிற்கு வந்து விடுங்கள்.
இந்த முறையில் சுற்றிப் போடுவதுடன் சிவனின் சிவ சிவ நற்பவி என்ற இந்த மந்திரத்தை உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சொல்லுங்கள்.

- Advertisement -

இந்த மந்திரத்தை எத்தனை முறை சொல்ல வேண்டும் என்ற கணக்கு கிடையாது. நாளைய தினம் சிவபெருமானை வேண்டிக் கொண்டு, புதன் கிழமை புத பகவானுக்குரிய இந்த தானியத்தை கொண்டு போடுவதாலும், இந்த மந்திரத்தை ஜெபிப்பதாலும் உங்களை பிடித்திருக்கும் பிணிப்பீடை தரித்திரம் கண்திருஷ்டி கெட்ட சக்திகள் அனைத்தும் விலகும்.

இதையும் படிக்கலாமே: பணம் சேர தாந்த்ரீக பரிகாரங்கள்

இத்துடன் செல்வதிருஷ்டியும் நீங்கி செல்வ வளமும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறுங்கள்.

- Advertisement -