நீங்கள் வரும் அக்ஷய திருதியை அன்று நகை வாங்கும் யோகம் பெற வெள்ளிக்கிழமையில் வீட்டில் இந்த தீபமேற்றினால் போதுமே!

vilakku-gold-lakshmi
- Advertisement -

பொதுவாக அக்ஷய திருதியை அன்று புதிய தங்க நகை வாங்கினால் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பது சாஸ்திர நம்பிக்கையாக இருந்து வருகிறது. இதனால் அக்ஷய திருதியை அன்று நகை கடைகளில் அதிக கூட்டத்தை இன்றும் நம்மால் காண முடிகிறது. சிறு குண்டுமணி தங்கம் ஆவது அன்றைய நாளில் வாங்கி விட மாட்டோமா? என்று நினைப்பவர்கள் இங்கு ஏராளம்! இந்த யோகத்தை கொடுக்ககூடிய அற்புதமான வெள்ளிக்கிழமை வழிபாட்டை பற்றிய ஆன்மீக தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

இவ்வருடம் சுபகிருது வருடம் சித்திரை மாதம் 20-ஆம் நாள் வரக்கூடிய திரிதியை நட்சத்திரத்தில் அக்ஷய திருதியை வந்துள்ளது. ஆங்கிலத்தில் மே மாதம் மூன்றாம் தேதி வரக்கூடிய இந்த நல்ல நாள் செவ்வாய்க் கிழமையில் அமைந்துள்ளது சிறப்பிற்குரியது. இந்த நாளில் நீங்களும் நகை வாங்க வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று இந்த தீபத்தை ஏற்றி வைத்து மகாலட்சுமியை வழிபட்டால் கூடிய விரைவிலேயே நகை வாங்கும் யோகத்தை அடைவீர்கள்.

- Advertisement -

சில கோவில்களுக்கு நாம் செல்லக்கூடிய எல்லா வழிகள் இருந்தாலும், நினைத்த நேரத்தில் செல்ல முடியாத சூழ்நிலையை உருவாக்கிவிடும். அந்த வகையில் திருப்பதிக்கு செல்ல நினைப்பவர்கள், உடனே சென்று வந்து விட முடியாது. அதே போல அக்ஷய திருதியை அன்று நகை வாங்க கூடிய வழிகள் இருந்தாலும், வாங்க முடியாத சூழ்நிலை உருவாக முடியாமல் இருக்க வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமிக்கு இந்த தீபம் ஏற்றலாம்.

வெள்ளிக்கிழமையில் மாலை வேளையில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு பூஜை அறையில் மகாலட்சுமியின் படம் அல்லது சிலை வைத்து அதற்கு வாசம் மிகுந்த மல்லிகை மலர்களால் அலங்கரிக்க வேண்டும். தாமரை மலர் மிகவும் உகந்த மலராக மகாலட்சுமிக்கு இருக்கின்றது. எனவே தாமரை மலர் கிடைத்தால் ஒன்றை வாங்கி மகாலட்சுமியின் திருவடியில் வையுங்கள். பின்பு ஏலக்காய் மற்றும் கிராம்பு சேர்த்து மாலையாக கோர்த்து மகாலட்சுமிக்கு சாற்றுங்கள்.

- Advertisement -

மகாலட்சுமிக்கு நீங்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு விஷயமும், உங்களுக்கு அவளின் அருளைப் பெற்றுக் கொடுக்கும். நாம் எவ்வளவுதான் செலவு செய்து பூஜைகள் செய்தாலும் ஏழை, எளியவர்களுக்கு செய்யும் தானம் நம்மை மென்மேலும் முன்னேற செய்யும் ஒரு அற்புதமான பரிதாபமாக இருக்கிறது. தங்கம் சேர செய்ய வேண்டிய அற்புதமான தானம் அன்ன தானம் ஆகும். குறைந்தது நாலு பேருக்காவது வயிறார அறுசுவை உணவை வாங்கிக் கொடுங்கள். அதுவே மகாலக்ஷ்மியின் அருளை உங்களுக்கு அதிகரிக்க செய்யும்.

பின்பு பூஜை அறையில் ஒரு சிறிய தாம்பூலத் தட்டில் மஞ்சள், குங்குமம் வைத்து அலங்கரித்துக் கொள்ளுங்கள். அதன் மீது பச்சரிசியை பரப்பி கொள்ளுங்கள். பின்பு அதன் மீது ஒரு வாழை இலை அல்லது வெற்றிலை விரித்துக் கொள்ளுங்கள். இலையின் மீது புதிய அகல் தீபம் ஒன்றை வைத்து நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். தீபத்தினுள் பச்சை கற்பூரம் மற்றும் ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். மங்களப் பொருளாக இருக்கும் வெற்றிலை, பாக்கு, பூ, பழம் ஆகியவற்றை தாம்பூலம் வையுங்கள். இதனுடன் 5 ரூபாய் நாணயம் ஒன்றை வையுங்கள்.

இனிக்க இனிக்க நெய் ஊற்றி சர்க்கரை பொங்கலை நெய்வைத்தியம் படையுங்கள். தங்கம் வாங்குவதற்கு செய்யக்கூடிய இந்த பொருட்களில் தங்கத்தை கட்டாயம் வைக்க வேண்டும். உங்களிடம் இருக்கும் ஏதாவது ஒரு தங்க நகையை ஒரு கலசத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து வையுங்கள். பின்னர் கீழ் வரும் இந்த மந்திரத்தை உச்சரித்து தீபம் ஏற்றி தூபம் போட்டு, கற்பூர ஹாரத்தி காண்பிக்க வேண்டும். பின்பு அன்னதானம் செய்து புண்ணியத்தை தேடிக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுக்குக் தடைகள் அகன்று, அக்ஷய திருதியை அன்று நகை வாங்கும் யோகத்தை பெறுவீர்கள்.

மஹாலக்ஷ்மி மந்திரம்:
ஸ்ரீ சுக்ல மகா சுக்லே நவாங்கே,
ஸ்ரீ மஹாலக்ஷ்மி நமோ நமஹ!

- Advertisement -